Wednesday 21 December 2011

SEVAI Trust

Wishes all

A Very Merry Christmas



&
Prosperous New Year 2012


 

Tuesday 20 December 2011

நாசரேத் : ஒரு ‘நவீன’ பிச்சைக்காரர் : ரூ.2000 கோல்ட் வாட்ச் : விலை உயர்ந்த செல்போனுடன்

நாசரேத் பகுதியில் தினமும் ஒரு வாலிபர் வருவோர் போவோரிடம் பிச்சை எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தர்மம் எடுப்பதையே தனது முழுநேர வேலையாகக் கொண்டுள்ளார். நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தைச்சேர்ந்த 35 வயது மதிக்க தக்க அந்த வாலிபர் தினமும் காலை 8 மணிக்கு பஸ் ஏறி நாசரேத் வந்துவிடுகிறார்.
வரும்போது சிறிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்து வருகிறார். நாசரேத் சந்தி பஜாரில் இறங்கும் அவர் தனது பணியை தொடங்கிவிடுகிறார். ரோட்டில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம், ரூ.5 கொடு...ரூ.10 கொடு என்று கேட்பார். யாரிடமும் அவர் தர்மம் போடுங்க சாமி என்று கேட்க மாட்டார்.
2 மணி நேரம் அங்கு நின்று கொண்டு பிச்சை எடுக்கும் அவர் அதன்பிறகு தனது எல்கையை மாற்றி அங்குள்ள சிஎஸ்ஐ தேவா லயம் பகுதிக்கு செல்கிறார். அங்குபிச்சை எடுக்கும் அவர் அங் குள்ள ஓட்டல்களில் மதிய உணவை சாப்பிட்டபின் நேராக நாசரேத் பஸ்நிலையம் பகுதிக்கு வருகிறார்.
இரவு 8 மணி ஆனதும் தனது பணியை முடித்துக்கொண்டு பஸ் ஏறி ஊர் சென்று விடுகிறார். மீண்டும் மறுநாள் தனது பணியை வழக்கம்போல் தொடங்கி விடுகிறார். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல ஆண்டுகளாக அவரது தர்மம் எடுக்கும் பணி தொடர்கிறது. அவர் தற்போது கையில் ரூ.2ஆயிரம் மதிப்புள்ள கோல்ட் வாட்ச் கட்டியுள் ளார். இதுபோல் விலை உயர்ந்த செல்போனும் வைத்துள்ளார். இவரது தினசரி வருமானம் ரூ.300ஐ தாண்டும் என்கிறார்கள்.
பணம் கேட்பது மட்டுமின்றி சிலரிடம் மீன் குழம்பு சாப்பாடு வாங்கி கொடு, மட்டன் சாப்பாடு வாங்கிக்கொடு என்று நச்சரிக்கிறார். இவரது தொல்லை தாங்காமல் பொதுமக்கள் மாற்று வழியாக செல்கிறார்கள்.
‘உனது பெயர் என்ன‘ என்று கேட்டால், முருகன் என்கிறார். உடம்புதான் நன்றாக இருக்கிறதே ஏன் இப்படி பிச்சை எடுக்கிறாய்? என்று யாராவது கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் புன்னகை மட்டும்தான். 
நமது நாடு எல்லாவிதத்திலும் அபரிதமான முன்னேற்ற பாதை யில் சென்று கொண்டிருந்தபோதிலும். பிச்சைக்காரர்கள் மட்டும் காலம் காலமாக அப்படித்தான் உள்ளனர். அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கினாலும் பிச்சைக்காரர்களை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. காரணம் அதில் கிடைக் கும் அதிகப்படியான வருமானம்தான். நாள் முழுக்க ரூ.200, ரூ.300 என்று பார்க்கும் இவர் எப்படி திருந்துவார்கள்? பொதுமக்கள் பிச்சை போடுவதை நிறுத்தினால் மட்டுமே இதை தடுக்கமுடியும்.        (தமிழ் முரசு)

Jyoti Amge : 62.8 cm Tall makes Guinness World Record (உலகின் மிக குள்ளமான பெண்)

Jyoti Amge - a high school student from Nagpur, Maharashtra has been recognized as world's shortest woman by Guinness World Records recently. She is 18, and is dreaming of make it in Bollywood one day!

"Jyoti Amge stood just 62.8 centimeters (24.7 inches) tall — shorter than the average 2-year-old". "I have put Nagpur on the world map. Now everyone will know where it is," said Amge, 

Jyoti dreams of working in a film one day ' alongside Salman Khan.
"Jyoti encourages us all to look beyond mere size and to just celebrate our differences," Guinness adjudicator Rob Molloy said.
"Last year, she passed her Class X exams with distinction and is now studying higher secondary at a junior college"
 "The title of shortest woman in history continues to be held by Pauline Musters, who lived in the Netherlands from 1876 to 1895 and stood 61 centimeters (24 inches) tall"
 "Like any other woman her age, Jyoti loves being fashionable. "I love ornaments," she said shyly, "and I like partying with friends"
"I feel grateful to be this size. It's bringing name and fame to my family," Jyoti said. "After all, if I weren't small and had not achieved these world records, I might never have been able to visit Japan and Europe and many other wonderful countries"

A Man's Life became cheaper than a Loan of Rs.40

Inability to repay a loan of a mere Rs 40 cost a man his life at Odisha's Sundargarh district, police said today.
Kailash Munda, a brick kiln labourer was allegedly beaten to death at Bhogopali village, about 140 km from here, by his niece yesterday after a fight over the return of the money he had taken from her.
Police later arrested the dead man's niece and her husband,both of them also brick kiln workers.

Team Anna Hazare threatened with HIV Needles : FIR Lodged

Last week the police received a letter that threatened to inject Anna Hazare and his supporters with needles contaminated with the HIV virus. The letter said if Anna remained adamant on his Lokpal agitation, they will be attacked with the deadly virus.



The police, now beginning to take the threat seriously, have registered an FIR and begun looking for those who sent the letter. The letter states that "a needle team, which has prepared 500 HIV positive needles, would inject the virus in atleast 1,000 people at the demonstration".

This anonymous letter was sent to DCP Central office on December 9.

Delhi Police has registered an FIR under sections 505 (2) - statements conducting to public mischief, 506 (criminal intimidation) and 507 (criminal intimidation by anonymous communication) of Indian Penal Code at Daryaganj police station last week and investigations have begun. The police suspect that "this letter seems to have been posted to the DCP's office from Delhi itself".

"We are trying to ascertain the identity of the sender though, after lot of discussions, we have also come to the conclusion that it might be a prank letter sent by some criminals. But since it is related to Anna Hazare, we don't want to take any chances as there is already a threat to his life and to the large number of people who congregate at his demonstrations," said a police officer.

The letter had stated that there are around 50 "volunteers in this needle group who are trained and they would use the needles cleverly on at least 1,000 people".  (Times of India)

1 வாழைப்பழம் = 4 ஆப்பிள் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்

"தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்" என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.
இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கூடங்குளம் : தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் : வி.எஸ்.அச்சுதானந்தன்

தமிழக மக்களின் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின்நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.
அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மார்த்தாண்டம் : 2-ம் திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

மனைவிக்கு தெரியாமல் 2- ம் திருமணம்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவருக்கும் நித்திரவிளை அடுத்த பாத்திமாபுரத்தை சேர்ந்த கமலாட்சி க்கும் 30.3.1992ல் திருமணம் நடந்தது. கமலாட்சி திருவனந்தபுரம் வேளாண் மை இயக்குனர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார். நிரந்தரமான வேலை இல்லாததால், திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவருக்கு பண உதவி செய்து வெளிநாட்டு வேலைக்கு கமலாட்சி அனுப்பினார். சில நாட்களில் திரும்பி வந்த சத்யராஜ், கமலாட்சியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார்.
இந்நிலையில், கடந்த 99-ம் ஆண்டு சத்யராஜ், படந்தாலுமூட்டை சேர்ந்த பிரீடா என்பவரை, 2-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த கமலாட்சி, கணவர் சத்யராஜ், பிரீடா, அவரது தந்தை யானோஸ், கணவரின் உறவினர்கள் ராஜன், ஜெயந்தி, மற்றும் ராபி ஆகியோர் மீது குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், சத்யராஜூக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமும், பிரீடாவுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Monday 19 December 2011

கருங்கல் : ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ.வை தாக்கியதாக 10 பேர் மீது வழக்கு

போலீஸ் நிலையம் முன் அதிரடிப்படை குவிப்பு
கருங்கல் அருகே ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜாண் ஜேக்கப் நேற்று (18-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை பார்க்க சென்றார்.
அப்போது ஒரு கும்பல் ஜாண்ஜேக்கப் எம்எல்ஏவை நடுரோட்டில் வழிமறித்து தாக்கியது. பொதுமக்கள் எம்எல்ஏவை மீட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜிகுமார், சிவகுமார், கண்ணன் உள்பட 10 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எம்எல்ஏ ஆதரவாளர்கள் திருப்பி தாக்கியது தொடர்பான புகாரின் பேரில் சரல்விளையை சேர்ந்த குமார், ராஜேஷ் குமார், ஸ்டீபன், சேகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். காங்கிரசை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதும் எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் ஏராளமான காங்கிரசார் கருங்கல் காவல் நிலையத்துக்கு வந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் அதிரடிப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். கைதான ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் நால்வரும் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இன்று காலையில் விஜுகுமார், சுகுமார், கண்ணன் உள்பட 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி மீண்டும் கருங்கல் போலீஸ் நிலையத்தில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் தலைமையில் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 7 பேரையும் கைது செய்யப்போவதாக தெரிவித்தார். அதன்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இளைஞர்காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், பாராளுமன்ற தலைவர் குமார், ஜேக்கப்சதா, ரமேஷ்குமார், பினுலால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவங்களால் கருங்கல் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

புதுக்கடை அருகே ருசிகர மோதல் : கணவரின் சொத்துக்காக 2 மனைவிகள் மோதல்

ஒருவருக்கு கத்திக்குத்து & அரிவாள் வெட்டு, மற்றொரு மனைவி கைது
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருக்கு ராமலட்சுமி(42), யசோதா(47) என இரண்டு மனைவிகள் உண்டு. செல்லப்பன் கடந்த ஆண்டு இறந்தார். அதன் பின் இரு மனைவிகளின் குடும்பங்களுக்கு இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ராமலட்சுமி தான் குடியிருக்கும் வீட்டை தனக்கு தரவேண்டும் என யசோதா தரப்பினரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த யசோதா அவரது உறவினர்கள் சசிகலா(27), செல்வராஜ், ரமேஷ், பால்மணி ஆகியோர் நேற்று ராமலட்சுமி வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கினர். இதில் ராமலட்சுமியின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமலட்சுமி மகன் கதிரவன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து யசோதாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் சரக்கை தெருத்தெருவாக விற்றனர் : 3 பேர் கைது

பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் சரக்குகளை தெருதெருவாக அதிக விலைக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் டாஸ்மாக் கடை மதுபானங்கள் பிளாக்கில் விற்கப்படுகின்றன. சிலர் தெருத்தெருவாக சென்று அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொன்னேரி டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போலீசாருடன் சென்று இரு கிராமங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். நத்த தெருவில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்டாலின் (40), செஞ்சிகான் (42), வெங்கடேசன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 324 குவார்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

2009-ல் நடந்த தேர்தலுக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை : ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சட்டசபை தொகுதிக்கு கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கோர்ட் உத்தரவுப்படி இன்று மீண்டும் எண்ணப்பட்டன.
ஜார்கண்ட் சட்டசபைக்கு கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. ஹட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சரன்நாத் ஷாதியோ வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ராம்ஜிலால் ஷார்தாவை விட 25 வாக்குகளே கூடுதலாக பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தை காட்டி மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுமாறு ராம்ஜிலால் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். இதனை ஆணையம் நிராகரித்து விட்டது.
ராம்ஜிலால் ராஞ்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக ராஞ்சி பழைய சிறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், பந்தரா பஜார் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 16 சுற்றுகளாக வாக்கு எண்ணப் பட்டது.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் டிவி திரையில் காண்பிக்கப்பட்டது. வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். யார் வெற்றி பெற்றார் என்பதை கோர்ட் முடிவு செய்யும்.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் சரன் நாத் ஷாதியோ கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் வெற்றி பெற்றதாக ஐகோர்ட் அறிவித்தால் இங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

A clerk in MP owns property worth Rs 40 crores


A clerk in Madhya Pradesh has been accused of amassing assets disproportionate to his income. The police reportedly seized property papers worth Rs 40 crore from his residence.
The clerk works at the regional transport office in Indore.
Acting on a tip-off, EOW officials raided three residences of the clerk identified as Ramendra (Raman) Dhuldhoi and recovered details of properties worth over Rs 40 crore which is "hugely disproportionate to his known sources of income", police said.
Dhuldhoi, who is posted here in the Regional Transport Office (RTO), owns 49 bigha land at different places, four plots, a huge bungalow, another house and a hotel, Superintendent of Police Manoj Singh said.
Besides, gold ornaments weighing over one kilogram and silver jewels totaling 4.5 kg were also recovered. He has made substantial investments in life insurance policies, has five bank accounts and owns four costly vehicles and two two-wheelers, he said.
The clerk joined the government service in 1996 and presently his monthly salary is Rs 16,000, he said.
Process is on to value his properties and take stock of his bank accounts, the SP said, adding a case has been registered against him under Prevention of Corruption Act in this regard.

நள்ளிரவில் நடக்கும் பைக் ரேஸ் : சென்னை : வைரஸ் போல் பரவி விட்டது

வயது வாரியாக நான்கு விதங்களில் நடக்கிறது. : கடும் தண்டனை இல்லை
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு விடுமுறை நாள் என்றாலே கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை குடும்பத்தோடு கடல் காற்றை வாங்கி கொண்டு ஜாலியாக பொழுதை பலர் கழித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் 8 மணி தாண்டினாலே சீக்கிரம் வீடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயந்து இப்படி செல்கிறார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு. விடுமுறை நாட்களில் நள்ளிரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸை கண்டு பயந்துதான். கடற்கரையில் இருந்து வீட்டிற்கு சீக்கிரம் கிளம்பாமல் இருந்தால் அவ்வளவு தான் பைக் ரேஸ் ஆசாமிகளிடம் சிக்கிவிட வேண்டியது தான்.
சென்னையில் ‘பைக் ரேஸ்’ என்ற கலாசாரம் வைரஸ் போல பரவிவிட்டது. மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணா சாலை, 100 அடி ரோடு, சென்னை & பெங்களூர் நெடுஞ்சாலை உள்பட சென்னையில் முக்கிய பெரிய சாலைகளில் பைக் ரேஸ் விடுமுறை நாட்கள் இரவு நேரங்களில் நடக்கிறது. ‘பைக் ரேஸ்’ சென்னையில் 4 விதங்களில் நடக்கிறது.
அதில், முதலில் ‘15 வயது பசங்க’ பைக் ரேஸ். இவர்கள் பைக்கை ஓட்டி பழகியவுடன் யாரையாவது முந்தி செல்வது என்ற ஆசை தோன்றி விடுகிறது. சென்னையில் இவர்கள் பலர் பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலோ, அல்லது பீச்சில் சர்வீஸ் ரோட்டிலோ வீடுகளில் ஏதாவது காரணங்களை சொல்லி பைக் எடுத்து வந்து சக நண்பர்களுடன் சிறிய அளவிலான ரேஸில் ஈடுபடுகின்றனர். சென்னையில் ஏதாவது தெருக்களில் இது போன்ற காட்சிகளை காண முடிகிறது. இந்த சிறிய ரேஸில் ஜெயிப்பவர்கள் தான் ஏரியாவுக்கு ‘மாஸ்டர் ஹூரோ’வாம். இங்கு இருந்து தான் பிறக்கிறது பைக் ரேஸ்.
அடுத்தது பணத்திற்காக நடக்கும் பைக் ரேஸ். இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. விடுமுறை நாட்களில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் உள்பட பல முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடக்கிறது. சில கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரையை ரேஸின் பெவிலியனாக வைத்து உள்ளனர். நள்ளிரவு நேரங்களில் இங்கு வரும் பைக் ரேஸ் பார்ட்டிகள் 3 குரூப்களாக பிரிந்து கொள்கிறார்கள். பந்தய தொகையை பற்றி முடிவு செய்து விட்டு ஒரு குரூப் காந்தி சிலையில் இருந்து ராயபுரம் வரைக்கும், மற்றொரு குரூப் பெசன்ட் நகர் வரைக்கும், 3 வது குரூப் திருவான்மியூர் வரைக்கும் ரேஸில் ஈடுபடுகிறார்கள்.
இதில் கட்டப்படும் பந்தய தொகை ரூ 5 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை. பணத்திற்காக நடத்தும் இந்த ரேஸ் தான் சென்னையில் பலரது உயிரை பறித்து உள்ளது. முன்பு எல்லாம் இரவு நேரங்களில் நடத்தி வந்த பைக் ரேஸ் தற்போது பகல் நேரங்களில் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் ரேஸை கண்டு நடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
மூன்றாவதாக சில மெக்கானிக்குகளால் நடத்தப்படும் பைக் ரேஸ். இவர்கள் நடத்தும் பைக் ரேஸ் மிகவும் ஆபத்தானவை. சில மெக்கானிக்குகள் தங்கள் பைக்குகளை ரேஸில் ஈடுபடுத்துவதற்காக அதன் என்ஜினில் உள்ள சில பகுதிகளை மாற்றி விடுகிறார்கள். அதன் வேகத் திறனை அதிகரிப்பதற்காக புதுசா சிலவகை ஸ்பேர்பார்ட்டுகளை அதில் இணைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்றாலே குஷியாகி விடுவார்கள். அன்று இரவோ அல்லது அதிகாலையிலோ ரேஸூக்காக தயாரான பைக்குகளை கொண்டு வந்து சாகச ரேஸை நடத்துவார்கள். இவர்கள் ரேஸூக்காக அதிகம் பயன்படுத்துவது கிழக்கு கடற்கரை சாலையை தான். பந்தய தொகையை வசூலிப்பதற்காக ஒரு நடுவரை நியமித்து அவருக்கு சம்பளத் தொகையையும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பந்தயத் தொகை கட்டுவதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ரேஸ் முடிந்த பிறகு சிலர் பணத்தை கொடுக்காமல் தகராறு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்ததால் பணத்தை கொடுப்பதற்கு முன்பு ஒரு உறுதிமொழி பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ரேஸில் பங்கேற்க முடியும். மேலும் சில நேரங்களில் பந்தயத் தொகைக்கு பதில் பைக்கையே வைத்து ரேஸ் நடத்துகிறார்கள்.
நான்காவதாக, வசதி படைத்தவர்கள் நடத்தும் பைக் ரேஸ். இவர்கள் நகருக்குள் வரமாட்டார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ரேஸை நடத்துகிறார்கள். பந்தயத் தொகையெல்லாம் இல்லாமல் ஒரு ஜாலிக்காக வெகு தொலைவில் வேகமாக சென்று வருவது இவர்களுக்கு ஒரு ஹாபியாக வைத்திருக்கின்றனர். ரேஸில் ஈடுபட பயன்படுத்தும் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ 8 லட்சம் இருக்கும். இது போன்ற ரேஸ்களும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வளவு வகைகள் கொண்ட பைக் ரேஸை சென்னையில் வாரந்தோறுமோ, தினந்தோறுமோ அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க சென்னை போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் குறிப்பிடத்தக்க வகையில் சொல்லும்படியாக இல்லை. சமீபத்தில் நடந்த பைக் ரேஸ் கானாத்தூரில் 55 வயது முதியவர் உயிரை பறித்துவிட்டது. ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல, சாந்தோம் சர்ச் ரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் முன்னாள் குடும்பத்துடன் சென்றவர் மீது மோதினார். இதில் தந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற 5 பேர் மீது மோதியுள்ளார். சென்னையில் மாதத்திற்கு இது போன்ற சம்பவங்கள் ஒன்று அல்லது 2 நடந்து கொண்டு தான் இருக்கிறது.
துணை கமிஷனர் சிவக்குமார்
போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "பைக் ரேஸ் ஒரு மைதானத்திற்குள் நடத்தினால் அது விளையாட்டு. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் நடத்தினால் அது விபரீதம்." கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதை உணராமல் ஜாலிக்காகவும், பணத்திற்காகவும் ரேஸில் ஈடுபட்டு உயிரை பணயம் வைக்கிறார்கள். இதை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீச்சில் எந்த சாலைகளில் எல்லாம் நடக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் மப்டியில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக நேரத்தை மப்டி போலீசார் பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிப்பதற்காக செலவு செய்கிறார்கள். மேலும் கடற்கரை சாலைகளில் 2 உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இரவில் இருந்து அதிகாலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புத்தாண்டு நெருங்குவதையொட்டி, பைக் ரேஸ்கள் தீவிரமாகலாம் என்று தகவல் வருகிறது. அதனால் கூடுதல் கவனம் செல்லுத்தி பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிக்கும் வகைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்� என்றார்.
‘வாக்கிங் செல்லவே பயமாக இருக்கிறது’
பீச் ரோட்டில் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்கள் கூறுகையில், �முன்பெல்லாம் வாக்கிங் செல்வதற்கு ஆர்வமாக இருக்கும். ஆனால், தற்போது அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்லவே பயமாக உள்ளது. ஏனென்றால் காலையில் நடக்கும் பைக் ரேஸ்ஸால் தான். பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு உயிர் மீது பயமில்லை. ஆனால் எங்களுக்கு பயம் இருக்கிறது. பைக் ரேஸை முற்றிலும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்� என்றனர்.
கடும் தண்டனை இல்லை
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குழுவாக செல்வார்கள். ஆனால் சில ஆசாமிகள் பீச் ரோட்டில் உள்ள சிக்னல்களில் நிற்கும் இளைஞர்களிடம் சில "சிக்னல்களை" காட்டி ரேசுக்கு அழைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. "ஊர்... ஊர்..." பைக்கில் சத்தம் வரவழைத்து "ரேசுக்கு தயாரா?" என சிக்னல் காட்டி அழைப்பதாக போலீசார் தெரிவித்தனர். பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி மரணம் நிகழ்ந்தால் போலீசார் ரேஸ் ஆசாமிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 279, 184, 304(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப் படும் பைக் ரேஸ் ஆசாமிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை, அல்லது
ரூ 1000 அபராதம் கட்ட வேண்டும். ரோட்டில் நடந்து செல்பவர்களை பைக் ரேஸ் ஆசாமிகள் மோதி ஏற்படும் உயிரிழப்புக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் அபராதம். ஒரு உயிரின் மதிப்பு வெறும் ஆயிரம் ரூபாய் தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.  (Dinakaran)

கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை

தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம்
தமிழகத்தில் முதன்முறையாக கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை செயல்படுத்தப் படவுள்ளது. இதையொட்டி முட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய அரசு நிறுவனமான கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலைமை அலுவலகம் அமைத்து மீன் வளர்ப்பு சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை தீட்டி நாடு முழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் பொழியூரில் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் உற்பத்தி செய்யப் பட்ட மோரா என்னும் கடல் விரால் மீன் குஞ்சுகளை கடலில் வலைக்கூண்டுகள் அமைத்து சோதனை அடிப்படையில் வளர்க்கும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் முட்டம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை குறித்து மீனவர்களிடையே விளக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று முட்டம் ஜேப்பியார்ரெமிபாய் திருமணமண்டபத்தில் நடந்தது. 

ஒபாமா குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்த தடை

இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் பயன்படுத்தக் கூடாது என்று தனது 2 பெண் குழந்தைகளுக்கும் அமெரி க்க அதிபர் ஒபாமா தடை விதித்துள்ளார்.
பேஸ்புக் உள்பட சமுக இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக் கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, கட ந்த 2008 தேர்தலின் போது, தனது பிரசாரத்திற்கு இந்த இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தினார். அதிபரான பின்பு, முதலாவது "சோஷியல் மீடியா பிரசி டென்ட்" என்று பாராட்டு பெற்றார். அப்படிப் பட்டவர் இப்போது தனது 2 பெண் குழந்தைகளுக்கும் பேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஒபாமா & மிச்சேல் தம்பதிக்கு மாலியா(13), சாஷா(10) என 2 பெண் குழந்தைகள். இருவரும் மிகவும் சுட்டி. ஆனாலும், இருவரையும் கட்டுப் பாடாக வளர்க்கின் றனர் ஒபாமா தம்பதி.
குழந்தைகள் இருவரும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பயன் படுத்தக் கூடாது என்று ஒபாமா தடை விதித்து ள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘எங்களுக்கு யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் எங்கள் குடும்ப விவரங்களை அறி ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை வெளியிடுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் அவர்கள் காத்திருக்கட்டும்’ என்றார்.

செக்ஸ் தொழிலாளர்களைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு

செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுகுறித்து, மத்திய திட்ட கமிஷனால் அமைக்கப்பட்ட குழு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
"செக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது’ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.

ரயிலில் டீ,பழம் விற்ற 28 பேருக்கு அபராதம் : சேலத்தில் அதிரடி

சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களில் அனுமதியின்றி டீ, பழம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை ஏராளமானோர் விற்பனை செய்து வருவதாக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை விஜிலென்ஸ் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் சென்னை பாதுகாப்பு படை போலீசார், பொக்காரோ எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம் பகுதியை சேர்ந்த எல்லம்மாள், கவிதா, மேனகா, சரஸ்வதி, சிந்து, கேசவன், தங்கராஜ், பாபு உள்ளிட்ட 28 பேர் சிக்கினர். இவர்கள் மீது டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது, அனுமதியின்றி ரயிலில் டீ, பழம் விற்றது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 28 பேருக்கும் தலா ரூ 700 வீதம் ரூ 19,600 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ரூ 100 கோடியில் சுற்றுலா பூங்கா : சென்னை, திருச்சியில் சிங்கப்பூர் போல

சிங்கப்பூரில் உள்ளது போல சென்னை, திருச்சியில் ரூ 100 கோடி செலவில் சென்டோசா பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறைக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் தலா ரூ 50 கோடியில் அமைக்கப்படும். கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகளை தன்னகத்தே கொண்ட கிராமங் கள் சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கப் படும்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள், மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்று), தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மிகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று). காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவை உருவாக்கப்படும்.
அவற்றை ரூ 450 கோடி செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்டமாக, கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும், பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரோப் கார் திட் டம் செயல்படுத்தப்படும்.

பிரதமரை கண்டித்து 10 கி.மீ. நடைபயணம் : கூடங்குளம்

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை 10 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.
ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை மத்திய அரசு நிறுவியது. இதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அணுமின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்ததையடுத்து மீண்டும் போராட்டம் வெடித்தது.
சுமார் 4 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மக்களின் அச்ச உணர்வை போக்காத வரையில் அணுமின்உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தீர்மானத்தை மீறி அணுமின்உற்பத்தி ஆயத்த பணிகளில் அணுமின்நிர்வாகம் ஈடுபட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், இரு வாரங்களில் முதல் இரு அணுஉலைகளும் 6 மாதங்களில் மேலும் இரு அணுஉலைகளும் உற்பத்தியை தொடங்கும் என பேட்டியளித்தார்.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, செட்டிவிளை, நெல்லை மாவட்டம் உவரி, இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, பெருமணல், செட்டிகுளம், கூடங்குளம், வைராவிகிணறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இடிந்தகரை & கூடங்குளம் விலக்கில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் முன்பு கூடினர்.
அங்கு அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகளும், முதியவர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இளைஞர்கள், பெண்கள், "அணுஉலை உயிருக்கு உலை" என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்பு டீ ஷர்ட்டுகள் அணிந்திருந்தனர். கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியிருந்தனர். கூடங்குளம் அணுஉலையை உடனே மூடு என்று கோஷமிட்டவாறு நடந்தனர்.

Sunday 18 December 2011

கூடங்குளம் பிரச்னை முற்றுகிறது : மக்களை மதிக்காமல் வன்முறையை தூண்டும் ஜனநாயக அரசு

எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை? 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் ரூ 13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணு மின்நிலையத்தை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் விரைவில் முதல் அணு உலை 2 வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் அணு உலை எதிர்ப்பாளர்களோ, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக வும், அணு மின் நிலையத் தில் உள்ள யுரேனியத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் பதட்டமானநிலை சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, 
‘கடந்த 15ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். போராட்டக் குழுவினர் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்காமல், கூடங்குளம் அணுமின் நிலைய வரைபடங்கள், ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்த நகல்கள், செலவினத் தொகை பற்றிய முழு விவரங்களை கேட்டுள்ளனர். அவை நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அவற்றை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுமின் நிலைய செயல்பாடை இழுத்தடிக்க முயல்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது.
போராட்டகாரர்கள் மீது போலீசார் இதுவரை சுமார் 160 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
‘போராட்டக் காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பொய் பிரச்சாரம் மூலம் அவர்களை தூண்டி விடுகிறார்கள். திருநெல்வேலி போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார்.
மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு, கூடங்குளம் விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 
கூட்டத்தில், கூடங்குளம் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சட்டம் & ஒழுங்கு பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் உத்தரவுப்படி எப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை : அவசரம் வேண்டாம்
கூடங் குளம் பிரச்னையில் மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரஷ்ய அதிபருடன் சேர்ந்து அளித்த பேட்டியின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சில வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று நீங்கள் கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. உள்ளூர் மக்களின் அச்சம் நீங்கும் வரை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.
தமிழக நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் உங்களிடம் இது தொடர்பாக நேரில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசு செய்து கொடுத்தது. கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் திருப்தி, என்னுடைய அரசுக்கும், தமிழகத்துக்கும் மிக முக்கியம்.
இதனால், மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது வரை எவ்வித அவசர நடவடிக்கையும் கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களை கொன்று வல்லரசு ஆகா வேண்டுமா இந்தியா???
சிறு தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் பற்றகுரையாம்??? தமிழ் நாட்டில் தயாரிக்க படும் மின்சாரம் எங்கு செல்கிறது???
போராடும் மக்களின் கண்ணீருக்கும் பட்டினிக்கும் ஜனநாயக நாட்டில் பதில் இல்லை... வன்முறை வழக்கு தான்????
ஜனநாயகத்தை தூக்கிலிட்டு இந்தியா வல்லரசு ஆகா வேண்டுமா???

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம் : கல்லூரி ஊழியர் கண்டுபிடிப்பு

சோலார் மொபைல் சார்ஜர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்ற�லாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.

Saturday 17 December 2011

இந்தியர் தொடுத்த வழக்கில் லண்டன் ஐகோர்ட் தீர்ப்பு : இங்கிலாந்தில் குடியேற இங்கிலீஷ் பேச வேண்டும்

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி (54), லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், ‘‘என் கணவர் வாலி சாப்தி (57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால், என் கணவருக்கு இங்கிலீஷ் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இன, மொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ‘‘இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை. இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு இங்கிலீஷ் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும் மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம்’’ என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் தயார் : மின்உற்பத்தி தொடங்க கூடங்குளத்தில் தீவிரம்

ரஷ்யாவில் மன்மோகன் சிங் அறிவிப்பு எதிரொலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததை அடுத்து, மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையொட்டி கூடங்குளம் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மத்திய படையையும் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் முதல் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேலாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை போக்க போராட்ட குழுவினருடன் மத்திய குழுவினர் நெல்லையில் 3 கட்ட பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. போராட்ட குழுவினர் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவில் இதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, மின் உற்பத்தி தொடங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. போராட்டக்காரர்களை சமாளிக்க, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அணு உலையை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக போராட்ட குழு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிரிமினல் சட்ட திருத்தப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், உதயகுமாரின் அமைப்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாநில அரசின் நிலை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரிடமும் ஆலோசித்த பின்தான் அப்படி சொல்லியிருக்க முடியும். அனைவரிடமும் பேசியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கது” என்றார்.
கூடுதல் அணு உலைகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளதை கண்டித்து கூடங்குளத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை போராட்ட குழுவினர் நேற்று தொடங்கினர். வீடுகளிலும், படகுகளிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது பற்றி பிரதமர் மன்மோகன் பேசவில்லை. இதுகுறித்து இருநாட்டுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனால், 2 வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று மதியம் போராட்டக் குழுவினர் கூடங்குளத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

நிஜம் என்ன??? : Facebook காதல் : தரையில் உருண்டு, புரண்டு கதறினார் : "பென்டிரைவ் மர்மம்" : பண ஆசையில் அவதூறு

காதல் வழக்கில் கைது : கோர்ட் வளாகத்தில் புரண்டு மருத்துவ மாணவி கதறல்
காதல் வழக்கில் கைது செய்யப் பட்ட மருத்துவ மாணவி திருச்சி கோர்ட் வளாகத்தில் நேற்று தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சியில் கரூர் பை பாஸ் சாலையை சேர்ந்தவர் முருகன் (30). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாட்களுக்கு முன் கோட்டை போலீசில் அளித்த புகாரில், கரூரை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்ற அபிநயா தன்னை, முன்னாள் அமைச்சரின் மகள் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்து கொள் ளும்படி மிரட்டுகிறார். பல பணக்கார இளைஞர் களிடம் இணையதளம் மூலம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. எனவே பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுதல், ஏமாற்றி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் அனு ஷாவை(23) கைது செய்தனர். நேற்று மதியம் அனுஷாவை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் அனுஷா திடீரென தரையில் உருண்டு, புரண்டு கதறினார்.
இதைக்கண்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவரிடம் விசாரித்தனர். அனுஷா கூறியது:
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் 2வது மனைவியின் மகள் நான். பிளஸ் 2 வரை கரூரில் படித்தேன். தற்போது சென்னையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். 2 ஆண்டுகள் முழுமையாக முடித்து 3வது ஆண்டு இடையில் நின்றுள்ளேன். அடுத்த ஆண்டில் கல்வியை தொடர திட்டமிட் டிருந்தேன். இதற்கிடையே திருச்சியைச் சேர்ந்த முருகனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முருகன் திருச்சியில் உள்ள பெரிய கட்டுமான நிறு வனத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருவரும் காதலித் தோம். பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பல இடங் களுக்கு சென்றுள் ளோம். அதில் நான் கர்ப்பமடைந்த போது, முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். நான் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளேன். இந்நிலை யில் அவர் என்னை திருமணம் செய்யாமல் தவிர்ப்பதற்காக என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
என்னிடம் உண்மையை கூறாமல், திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சென் னையிலிருந்து வரவழைத் தார். நானும் அதை நம்பி வந்தேன். இங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து, கல்லணை அருகேயுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பிரச்னை செய்யாமல் ஓடிவிடு எனக்கூறி அடித்து மிரட்டினர். அதற்கு நான் ஒத்துக் கொள்ளாததால் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். முருகனும், நானும் காதலித்தபோது எடுத்த போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் பதிவுகள், அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என அவர் கதறினார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஜே.எம்.1 கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி இளங் கோவன் முன் ஆஜர்படுத் தினர். அவரது உத்தர வின்பேரில் அனுஷாவை 15 நாள் காவலில் திருச்சி மக ளிர் சிறையில் அடைத்தனர்.
"பென்டிரைவ் மர்மம்"
அனுஷா கூறும்போது, முருகனை காதலித்தபோது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் விபரம் உள்ளிட்ட ஆதாரங்களை தனது பென்டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் அவரிடமிருந்த வெள்ளை நிற பென்டிரைவினை போலீசார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, �அப்படி ஒரு பென்டிரைவே அந்த பெண்ணிடம் இல்லை� எனக் கூறினர்.
பண ஆசையில் அவதூறு
அனுஷா மீது புகார் அளித்த முருகன் கூறுகையில், எதேச்சையாக ஏற்பட்ட பழக்கத்திற்குபின் எனது இணையதளம் மூலம் என் குடும்ப வசதியை பற்றி அறிந்து கொண்டு அந்த பெண், பணம் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்புகிறார். என்மீது தவறு இருந்திருந்தால் நானே செட்டில்மெண்ட் செய்திருப்பேன். போலீசில் புகார் செய்திருக்கவிட மாட்டேன் என்றார்.    (Dinakaran)