18 ஆண்டாக சம்பளம், லீவு தராமல் சவுதியில் தமிழரை அடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைத்த கொடூரம்
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்ற தமிழர், தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவித்து வந்தார். உள்ளூர் போலீசாரின் தலையீட்டால் இப்போது நாடு திரும்ப உள்ளார். பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.






















