Monday, 19 December 2011

A clerk in MP owns property worth Rs 40 crores


A clerk in Madhya Pradesh has been accused of amassing assets disproportionate to his income. The police reportedly seized property papers worth Rs 40 crore from his residence.
The clerk works at the regional transport office in Indore.
Acting on a tip-off, EOW officials raided three residences of the clerk identified as Ramendra (Raman) Dhuldhoi and recovered details of properties worth over Rs 40 crore which is "hugely disproportionate to his known sources of income", police said.
Dhuldhoi, who is posted here in the Regional Transport Office (RTO), owns 49 bigha land at different places, four plots, a huge bungalow, another house and a hotel, Superintendent of Police Manoj Singh said.
Besides, gold ornaments weighing over one kilogram and silver jewels totaling 4.5 kg were also recovered. He has made substantial investments in life insurance policies, has five bank accounts and owns four costly vehicles and two two-wheelers, he said.
The clerk joined the government service in 1996 and presently his monthly salary is Rs 16,000, he said.
Process is on to value his properties and take stock of his bank accounts, the SP said, adding a case has been registered against him under Prevention of Corruption Act in this regard.

நள்ளிரவில் நடக்கும் பைக் ரேஸ் : சென்னை : வைரஸ் போல் பரவி விட்டது

வயது வாரியாக நான்கு விதங்களில் நடக்கிறது. : கடும் தண்டனை இல்லை
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு விடுமுறை நாள் என்றாலே கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை குடும்பத்தோடு கடல் காற்றை வாங்கி கொண்டு ஜாலியாக பொழுதை பலர் கழித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் 8 மணி தாண்டினாலே சீக்கிரம் வீடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயந்து இப்படி செல்கிறார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு. விடுமுறை நாட்களில் நள்ளிரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸை கண்டு பயந்துதான். கடற்கரையில் இருந்து வீட்டிற்கு சீக்கிரம் கிளம்பாமல் இருந்தால் அவ்வளவு தான் பைக் ரேஸ் ஆசாமிகளிடம் சிக்கிவிட வேண்டியது தான்.
சென்னையில் ‘பைக் ரேஸ்’ என்ற கலாசாரம் வைரஸ் போல பரவிவிட்டது. மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணா சாலை, 100 அடி ரோடு, சென்னை & பெங்களூர் நெடுஞ்சாலை உள்பட சென்னையில் முக்கிய பெரிய சாலைகளில் பைக் ரேஸ் விடுமுறை நாட்கள் இரவு நேரங்களில் நடக்கிறது. ‘பைக் ரேஸ்’ சென்னையில் 4 விதங்களில் நடக்கிறது.
அதில், முதலில் ‘15 வயது பசங்க’ பைக் ரேஸ். இவர்கள் பைக்கை ஓட்டி பழகியவுடன் யாரையாவது முந்தி செல்வது என்ற ஆசை தோன்றி விடுகிறது. சென்னையில் இவர்கள் பலர் பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலோ, அல்லது பீச்சில் சர்வீஸ் ரோட்டிலோ வீடுகளில் ஏதாவது காரணங்களை சொல்லி பைக் எடுத்து வந்து சக நண்பர்களுடன் சிறிய அளவிலான ரேஸில் ஈடுபடுகின்றனர். சென்னையில் ஏதாவது தெருக்களில் இது போன்ற காட்சிகளை காண முடிகிறது. இந்த சிறிய ரேஸில் ஜெயிப்பவர்கள் தான் ஏரியாவுக்கு ‘மாஸ்டர் ஹூரோ’வாம். இங்கு இருந்து தான் பிறக்கிறது பைக் ரேஸ்.
அடுத்தது பணத்திற்காக நடக்கும் பைக் ரேஸ். இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. விடுமுறை நாட்களில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் உள்பட பல முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடக்கிறது. சில கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரையை ரேஸின் பெவிலியனாக வைத்து உள்ளனர். நள்ளிரவு நேரங்களில் இங்கு வரும் பைக் ரேஸ் பார்ட்டிகள் 3 குரூப்களாக பிரிந்து கொள்கிறார்கள். பந்தய தொகையை பற்றி முடிவு செய்து விட்டு ஒரு குரூப் காந்தி சிலையில் இருந்து ராயபுரம் வரைக்கும், மற்றொரு குரூப் பெசன்ட் நகர் வரைக்கும், 3 வது குரூப் திருவான்மியூர் வரைக்கும் ரேஸில் ஈடுபடுகிறார்கள்.
இதில் கட்டப்படும் பந்தய தொகை ரூ 5 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை. பணத்திற்காக நடத்தும் இந்த ரேஸ் தான் சென்னையில் பலரது உயிரை பறித்து உள்ளது. முன்பு எல்லாம் இரவு நேரங்களில் நடத்தி வந்த பைக் ரேஸ் தற்போது பகல் நேரங்களில் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் ரேஸை கண்டு நடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
மூன்றாவதாக சில மெக்கானிக்குகளால் நடத்தப்படும் பைக் ரேஸ். இவர்கள் நடத்தும் பைக் ரேஸ் மிகவும் ஆபத்தானவை. சில மெக்கானிக்குகள் தங்கள் பைக்குகளை ரேஸில் ஈடுபடுத்துவதற்காக அதன் என்ஜினில் உள்ள சில பகுதிகளை மாற்றி விடுகிறார்கள். அதன் வேகத் திறனை அதிகரிப்பதற்காக புதுசா சிலவகை ஸ்பேர்பார்ட்டுகளை அதில் இணைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்றாலே குஷியாகி விடுவார்கள். அன்று இரவோ அல்லது அதிகாலையிலோ ரேஸூக்காக தயாரான பைக்குகளை கொண்டு வந்து சாகச ரேஸை நடத்துவார்கள். இவர்கள் ரேஸூக்காக அதிகம் பயன்படுத்துவது கிழக்கு கடற்கரை சாலையை தான். பந்தய தொகையை வசூலிப்பதற்காக ஒரு நடுவரை நியமித்து அவருக்கு சம்பளத் தொகையையும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பந்தயத் தொகை கட்டுவதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ரேஸ் முடிந்த பிறகு சிலர் பணத்தை கொடுக்காமல் தகராறு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்ததால் பணத்தை கொடுப்பதற்கு முன்பு ஒரு உறுதிமொழி பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ரேஸில் பங்கேற்க முடியும். மேலும் சில நேரங்களில் பந்தயத் தொகைக்கு பதில் பைக்கையே வைத்து ரேஸ் நடத்துகிறார்கள்.
நான்காவதாக, வசதி படைத்தவர்கள் நடத்தும் பைக் ரேஸ். இவர்கள் நகருக்குள் வரமாட்டார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ரேஸை நடத்துகிறார்கள். பந்தயத் தொகையெல்லாம் இல்லாமல் ஒரு ஜாலிக்காக வெகு தொலைவில் வேகமாக சென்று வருவது இவர்களுக்கு ஒரு ஹாபியாக வைத்திருக்கின்றனர். ரேஸில் ஈடுபட பயன்படுத்தும் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ 8 லட்சம் இருக்கும். இது போன்ற ரேஸ்களும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வளவு வகைகள் கொண்ட பைக் ரேஸை சென்னையில் வாரந்தோறுமோ, தினந்தோறுமோ அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க சென்னை போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் குறிப்பிடத்தக்க வகையில் சொல்லும்படியாக இல்லை. சமீபத்தில் நடந்த பைக் ரேஸ் கானாத்தூரில் 55 வயது முதியவர் உயிரை பறித்துவிட்டது. ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல, சாந்தோம் சர்ச் ரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் முன்னாள் குடும்பத்துடன் சென்றவர் மீது மோதினார். இதில் தந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற 5 பேர் மீது மோதியுள்ளார். சென்னையில் மாதத்திற்கு இது போன்ற சம்பவங்கள் ஒன்று அல்லது 2 நடந்து கொண்டு தான் இருக்கிறது.
துணை கமிஷனர் சிவக்குமார்
போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "பைக் ரேஸ் ஒரு மைதானத்திற்குள் நடத்தினால் அது விளையாட்டு. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் நடத்தினால் அது விபரீதம்." கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதை உணராமல் ஜாலிக்காகவும், பணத்திற்காகவும் ரேஸில் ஈடுபட்டு உயிரை பணயம் வைக்கிறார்கள். இதை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீச்சில் எந்த சாலைகளில் எல்லாம் நடக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் மப்டியில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக நேரத்தை மப்டி போலீசார் பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிப்பதற்காக செலவு செய்கிறார்கள். மேலும் கடற்கரை சாலைகளில் 2 உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இரவில் இருந்து அதிகாலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புத்தாண்டு நெருங்குவதையொட்டி, பைக் ரேஸ்கள் தீவிரமாகலாம் என்று தகவல் வருகிறது. அதனால் கூடுதல் கவனம் செல்லுத்தி பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிக்கும் வகைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்� என்றார்.
‘வாக்கிங் செல்லவே பயமாக இருக்கிறது’
பீச் ரோட்டில் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்கள் கூறுகையில், �முன்பெல்லாம் வாக்கிங் செல்வதற்கு ஆர்வமாக இருக்கும். ஆனால், தற்போது அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்லவே பயமாக உள்ளது. ஏனென்றால் காலையில் நடக்கும் பைக் ரேஸ்ஸால் தான். பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு உயிர் மீது பயமில்லை. ஆனால் எங்களுக்கு பயம் இருக்கிறது. பைக் ரேஸை முற்றிலும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்� என்றனர்.
கடும் தண்டனை இல்லை
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குழுவாக செல்வார்கள். ஆனால் சில ஆசாமிகள் பீச் ரோட்டில் உள்ள சிக்னல்களில் நிற்கும் இளைஞர்களிடம் சில "சிக்னல்களை" காட்டி ரேசுக்கு அழைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. "ஊர்... ஊர்..." பைக்கில் சத்தம் வரவழைத்து "ரேசுக்கு தயாரா?" என சிக்னல் காட்டி அழைப்பதாக போலீசார் தெரிவித்தனர். பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி மரணம் நிகழ்ந்தால் போலீசார் ரேஸ் ஆசாமிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 279, 184, 304(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப் படும் பைக் ரேஸ் ஆசாமிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை, அல்லது
ரூ 1000 அபராதம் கட்ட வேண்டும். ரோட்டில் நடந்து செல்பவர்களை பைக் ரேஸ் ஆசாமிகள் மோதி ஏற்படும் உயிரிழப்புக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் அபராதம். ஒரு உயிரின் மதிப்பு வெறும் ஆயிரம் ரூபாய் தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.  (Dinakaran)

கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை

தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம்
தமிழகத்தில் முதன்முறையாக கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை செயல்படுத்தப் படவுள்ளது. இதையொட்டி முட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய அரசு நிறுவனமான கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலைமை அலுவலகம் அமைத்து மீன் வளர்ப்பு சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை தீட்டி நாடு முழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் பொழியூரில் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் உற்பத்தி செய்யப் பட்ட மோரா என்னும் கடல் விரால் மீன் குஞ்சுகளை கடலில் வலைக்கூண்டுகள் அமைத்து சோதனை அடிப்படையில் வளர்க்கும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் முட்டம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை குறித்து மீனவர்களிடையே விளக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று முட்டம் ஜேப்பியார்ரெமிபாய் திருமணமண்டபத்தில் நடந்தது. 

ஒபாமா குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்த தடை

இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் பயன்படுத்தக் கூடாது என்று தனது 2 பெண் குழந்தைகளுக்கும் அமெரி க்க அதிபர் ஒபாமா தடை விதித்துள்ளார்.
பேஸ்புக் உள்பட சமுக இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக் கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, கட ந்த 2008 தேர்தலின் போது, தனது பிரசாரத்திற்கு இந்த இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தினார். அதிபரான பின்பு, முதலாவது "சோஷியல் மீடியா பிரசி டென்ட்" என்று பாராட்டு பெற்றார். அப்படிப் பட்டவர் இப்போது தனது 2 பெண் குழந்தைகளுக்கும் பேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஒபாமா & மிச்சேல் தம்பதிக்கு மாலியா(13), சாஷா(10) என 2 பெண் குழந்தைகள். இருவரும் மிகவும் சுட்டி. ஆனாலும், இருவரையும் கட்டுப் பாடாக வளர்க்கின் றனர் ஒபாமா தம்பதி.
குழந்தைகள் இருவரும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பயன் படுத்தக் கூடாது என்று ஒபாமா தடை விதித்து ள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘எங்களுக்கு யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் எங்கள் குடும்ப விவரங்களை அறி ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை வெளியிடுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் அவர்கள் காத்திருக்கட்டும்’ என்றார்.

செக்ஸ் தொழிலாளர்களைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு

செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுகுறித்து, மத்திய திட்ட கமிஷனால் அமைக்கப்பட்ட குழு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
"செக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது’ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.

ரயிலில் டீ,பழம் விற்ற 28 பேருக்கு அபராதம் : சேலத்தில் அதிரடி

சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களில் அனுமதியின்றி டீ, பழம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை ஏராளமானோர் விற்பனை செய்து வருவதாக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை விஜிலென்ஸ் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் சென்னை பாதுகாப்பு படை போலீசார், பொக்காரோ எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம் பகுதியை சேர்ந்த எல்லம்மாள், கவிதா, மேனகா, சரஸ்வதி, சிந்து, கேசவன், தங்கராஜ், பாபு உள்ளிட்ட 28 பேர் சிக்கினர். இவர்கள் மீது டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது, அனுமதியின்றி ரயிலில் டீ, பழம் விற்றது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 28 பேருக்கும் தலா ரூ 700 வீதம் ரூ 19,600 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ரூ 100 கோடியில் சுற்றுலா பூங்கா : சென்னை, திருச்சியில் சிங்கப்பூர் போல

சிங்கப்பூரில் உள்ளது போல சென்னை, திருச்சியில் ரூ 100 கோடி செலவில் சென்டோசா பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறைக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் தலா ரூ 50 கோடியில் அமைக்கப்படும். கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகளை தன்னகத்தே கொண்ட கிராமங் கள் சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கப் படும்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள், மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்று), தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மிகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று). காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவை உருவாக்கப்படும்.
அவற்றை ரூ 450 கோடி செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்டமாக, கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும், பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரோப் கார் திட் டம் செயல்படுத்தப்படும்.

பிரதமரை கண்டித்து 10 கி.மீ. நடைபயணம் : கூடங்குளம்

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை 10 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.
ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை மத்திய அரசு நிறுவியது. இதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அணுமின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்ததையடுத்து மீண்டும் போராட்டம் வெடித்தது.
சுமார் 4 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மக்களின் அச்ச உணர்வை போக்காத வரையில் அணுமின்உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தீர்மானத்தை மீறி அணுமின்உற்பத்தி ஆயத்த பணிகளில் அணுமின்நிர்வாகம் ஈடுபட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், இரு வாரங்களில் முதல் இரு அணுஉலைகளும் 6 மாதங்களில் மேலும் இரு அணுஉலைகளும் உற்பத்தியை தொடங்கும் என பேட்டியளித்தார்.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, செட்டிவிளை, நெல்லை மாவட்டம் உவரி, இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, பெருமணல், செட்டிகுளம், கூடங்குளம், வைராவிகிணறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இடிந்தகரை & கூடங்குளம் விலக்கில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் முன்பு கூடினர்.
அங்கு அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகளும், முதியவர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இளைஞர்கள், பெண்கள், "அணுஉலை உயிருக்கு உலை" என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்பு டீ ஷர்ட்டுகள் அணிந்திருந்தனர். கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியிருந்தனர். கூடங்குளம் அணுஉலையை உடனே மூடு என்று கோஷமிட்டவாறு நடந்தனர்.

Sunday, 18 December 2011

கூடங்குளம் பிரச்னை முற்றுகிறது : மக்களை மதிக்காமல் வன்முறையை தூண்டும் ஜனநாயக அரசு

எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை? 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் ரூ 13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணு மின்நிலையத்தை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் விரைவில் முதல் அணு உலை 2 வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் அணு உலை எதிர்ப்பாளர்களோ, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக வும், அணு மின் நிலையத் தில் உள்ள யுரேனியத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் பதட்டமானநிலை சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, 
‘கடந்த 15ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். போராட்டக் குழுவினர் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்காமல், கூடங்குளம் அணுமின் நிலைய வரைபடங்கள், ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்த நகல்கள், செலவினத் தொகை பற்றிய முழு விவரங்களை கேட்டுள்ளனர். அவை நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அவற்றை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுமின் நிலைய செயல்பாடை இழுத்தடிக்க முயல்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது.
போராட்டகாரர்கள் மீது போலீசார் இதுவரை சுமார் 160 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
‘போராட்டக் காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பொய் பிரச்சாரம் மூலம் அவர்களை தூண்டி விடுகிறார்கள். திருநெல்வேலி போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார்.
மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு, கூடங்குளம் விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 
கூட்டத்தில், கூடங்குளம் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சட்டம் & ஒழுங்கு பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் உத்தரவுப்படி எப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை : அவசரம் வேண்டாம்
கூடங் குளம் பிரச்னையில் மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரஷ்ய அதிபருடன் சேர்ந்து அளித்த பேட்டியின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சில வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று நீங்கள் கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. உள்ளூர் மக்களின் அச்சம் நீங்கும் வரை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.
தமிழக நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் உங்களிடம் இது தொடர்பாக நேரில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசு செய்து கொடுத்தது. கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் திருப்தி, என்னுடைய அரசுக்கும், தமிழகத்துக்கும் மிக முக்கியம்.
இதனால், மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது வரை எவ்வித அவசர நடவடிக்கையும் கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களை கொன்று வல்லரசு ஆகா வேண்டுமா இந்தியா???
சிறு தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் பற்றகுரையாம்??? தமிழ் நாட்டில் தயாரிக்க படும் மின்சாரம் எங்கு செல்கிறது???
போராடும் மக்களின் கண்ணீருக்கும் பட்டினிக்கும் ஜனநாயக நாட்டில் பதில் இல்லை... வன்முறை வழக்கு தான்????
ஜனநாயகத்தை தூக்கிலிட்டு இந்தியா வல்லரசு ஆகா வேண்டுமா???

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம் : கல்லூரி ஊழியர் கண்டுபிடிப்பு

சோலார் மொபைல் சார்ஜர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்ற�லாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.

Saturday, 17 December 2011

இந்தியர் தொடுத்த வழக்கில் லண்டன் ஐகோர்ட் தீர்ப்பு : இங்கிலாந்தில் குடியேற இங்கிலீஷ் பேச வேண்டும்

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி (54), லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், ‘‘என் கணவர் வாலி சாப்தி (57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால், என் கணவருக்கு இங்கிலீஷ் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இன, மொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ‘‘இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை. இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு இங்கிலீஷ் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும் மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம்’’ என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் தயார் : மின்உற்பத்தி தொடங்க கூடங்குளத்தில் தீவிரம்

ரஷ்யாவில் மன்மோகன் சிங் அறிவிப்பு எதிரொலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததை அடுத்து, மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையொட்டி கூடங்குளம் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மத்திய படையையும் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் முதல் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேலாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை போக்க போராட்ட குழுவினருடன் மத்திய குழுவினர் நெல்லையில் 3 கட்ட பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. போராட்ட குழுவினர் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவில் இதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, மின் உற்பத்தி தொடங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. போராட்டக்காரர்களை சமாளிக்க, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அணு உலையை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக போராட்ட குழு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிரிமினல் சட்ட திருத்தப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், உதயகுமாரின் அமைப்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாநில அரசின் நிலை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரிடமும் ஆலோசித்த பின்தான் அப்படி சொல்லியிருக்க முடியும். அனைவரிடமும் பேசியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கது” என்றார்.
கூடுதல் அணு உலைகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளதை கண்டித்து கூடங்குளத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை போராட்ட குழுவினர் நேற்று தொடங்கினர். வீடுகளிலும், படகுகளிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது பற்றி பிரதமர் மன்மோகன் பேசவில்லை. இதுகுறித்து இருநாட்டுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனால், 2 வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று மதியம் போராட்டக் குழுவினர் கூடங்குளத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

நிஜம் என்ன??? : Facebook காதல் : தரையில் உருண்டு, புரண்டு கதறினார் : "பென்டிரைவ் மர்மம்" : பண ஆசையில் அவதூறு

காதல் வழக்கில் கைது : கோர்ட் வளாகத்தில் புரண்டு மருத்துவ மாணவி கதறல்
காதல் வழக்கில் கைது செய்யப் பட்ட மருத்துவ மாணவி திருச்சி கோர்ட் வளாகத்தில் நேற்று தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சியில் கரூர் பை பாஸ் சாலையை சேர்ந்தவர் முருகன் (30). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாட்களுக்கு முன் கோட்டை போலீசில் அளித்த புகாரில், கரூரை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்ற அபிநயா தன்னை, முன்னாள் அமைச்சரின் மகள் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்து கொள் ளும்படி மிரட்டுகிறார். பல பணக்கார இளைஞர் களிடம் இணையதளம் மூலம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. எனவே பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுதல், ஏமாற்றி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் அனு ஷாவை(23) கைது செய்தனர். நேற்று மதியம் அனுஷாவை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் அனுஷா திடீரென தரையில் உருண்டு, புரண்டு கதறினார்.
இதைக்கண்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவரிடம் விசாரித்தனர். அனுஷா கூறியது:
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் 2வது மனைவியின் மகள் நான். பிளஸ் 2 வரை கரூரில் படித்தேன். தற்போது சென்னையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். 2 ஆண்டுகள் முழுமையாக முடித்து 3வது ஆண்டு இடையில் நின்றுள்ளேன். அடுத்த ஆண்டில் கல்வியை தொடர திட்டமிட் டிருந்தேன். இதற்கிடையே திருச்சியைச் சேர்ந்த முருகனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முருகன் திருச்சியில் உள்ள பெரிய கட்டுமான நிறு வனத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருவரும் காதலித் தோம். பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பல இடங் களுக்கு சென்றுள் ளோம். அதில் நான் கர்ப்பமடைந்த போது, முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். நான் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளேன். இந்நிலை யில் அவர் என்னை திருமணம் செய்யாமல் தவிர்ப்பதற்காக என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
என்னிடம் உண்மையை கூறாமல், திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சென் னையிலிருந்து வரவழைத் தார். நானும் அதை நம்பி வந்தேன். இங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து, கல்லணை அருகேயுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பிரச்னை செய்யாமல் ஓடிவிடு எனக்கூறி அடித்து மிரட்டினர். அதற்கு நான் ஒத்துக் கொள்ளாததால் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். முருகனும், நானும் காதலித்தபோது எடுத்த போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் பதிவுகள், அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என அவர் கதறினார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஜே.எம்.1 கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி இளங் கோவன் முன் ஆஜர்படுத் தினர். அவரது உத்தர வின்பேரில் அனுஷாவை 15 நாள் காவலில் திருச்சி மக ளிர் சிறையில் அடைத்தனர்.
"பென்டிரைவ் மர்மம்"
அனுஷா கூறும்போது, முருகனை காதலித்தபோது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் விபரம் உள்ளிட்ட ஆதாரங்களை தனது பென்டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் அவரிடமிருந்த வெள்ளை நிற பென்டிரைவினை போலீசார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, �அப்படி ஒரு பென்டிரைவே அந்த பெண்ணிடம் இல்லை� எனக் கூறினர்.
பண ஆசையில் அவதூறு
அனுஷா மீது புகார் அளித்த முருகன் கூறுகையில், எதேச்சையாக ஏற்பட்ட பழக்கத்திற்குபின் எனது இணையதளம் மூலம் என் குடும்ப வசதியை பற்றி அறிந்து கொண்டு அந்த பெண், பணம் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்புகிறார். என்மீது தவறு இருந்திருந்தால் நானே செட்டில்மெண்ட் செய்திருப்பேன். போலீசில் புகார் செய்திருக்கவிட மாட்டேன் என்றார்.    (Dinakaran)

குளச்சல் : தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்தனர் : டிரைவர் வாலிபர் சடலத்தை மீட்டார்

குளச்சல் அருகே துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் மாயமான வாலிபர் சடலம்
குளச்சல் அருகே 4 நாட்களாக துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் இருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்க முன்வராத நிலையில் கார் டிரைவர் துணிச்சலுடன் இறங்கி வாலிபர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். 
குளச்சல் அருகே உதியாவிளை சானல்கரையை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ராஜேஷ்(26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் ராஜே ஷின் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 13ம் தேதி முதல் துர்நாற்றம் வீசியது. இதனால் மாயமான ராஜேஷ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் மக்கள் மின்விளக்கை கிணற்றில் இறக்கி பார்த்தனர். அந்த கிணறு 250 அடி ஆழம் கொண்டது என்பதால், சரியாக தெரிய வில்லை.
இது பற்றி குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடம் வந்து, பைனாக்குலர் மூலம் கிணற்றில் பார்த்தார். அப்போது அங்கு மனித உடல் எதுவும் கிணற்றில் இருப்பதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
எனவே கிணற்றுக்குள் இறங்கி சடலம் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குளச்சல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திலும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். போலீசாரும் தீயைணைப்பு துறையினரிடம், கிணற்றில் சடலம் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய வலியுறுத்தினர். ஆனால் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்க முன்வரவில்லை. இதனால் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்தினருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
இதுபற்றி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்சந்திரா, கல்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எஸ்.பி நடவடிக்கையின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடம் வந்தனர். ஆனால் அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முன்வரவில்லை. இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கிணறு தோண்டும் தொழிலாளர்களை தேடி அலைந்தனர். அவர்களும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.
இதனால் போலீசாரும் பொதுமக்களும் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் உடையார் விளையை சேர்ந்த கார் டிரைவர் ஆல்பர்ட்(43) என்பவர் கிணற்றுக்குள் இறங்க முன்வந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விஷவாயு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வாளியில் கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது விஷவாயு இருப்பது தெரியவந்தது. அதனை தண்ணீர் பீச்சி அடித்து அவர்கள் வெளியேற்றினர்.
இதனைத்தொடர்ந்து ஆல்பர்ட்டை கயிறு கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதனை சாக்கில் கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். அது மாயமான ராஜேஷின் உடல் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மாயமான வாலிபர் 6 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் அருகே உதியாவிளையில் பாழடைந்த கிணற்றில் சடலத்தை மீட்க தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்ததையடுத்து துணிச்சலுடன் கிணற்றில் இறங்கிய டிரைவர் ஆல்பர்ட்.
டிரைவருக்கு பாராட்டு
பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்தது. கிணற்றில் இறங்க தீயணைப்பு படையினர் உட்பட யாருமே முன்வர வில்லை. ஆனால் டிரைவர் ஆல்பர்ட் துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார். அவரது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

Friday, 16 December 2011

கருங்கலில் 23-ல் லிம்கா சாதனைக்காக 1500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவையின் இணையதளம் தொடக்கவிழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ தலைமை வகித்தார். இணையத்தளத்தை அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா, டாக்டர் சுமித்ரா, கான், ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜேசர் ஜெபநேசர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி வருகிற 23ம் தேதி கருங்கலில் நடக்கிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொள்கின்றனர். விசாகபட்டினத்தில் கடந்த 2009ம் ஆண்டு 1008 கிறிஸ்துமஸ் தாத்தா ஒன்று கூடியதே லிம்கா சாதனை யாக உள்ளது. லிம்கா சாதனைக்காக இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி நடத்துகிறோம். பேரணி கருங்கல் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் இருந்து தொடங்கி கருங்கல் பஸ் நிலையத்தில் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் குமரிமாவட்டத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழு போட்டியும் நடத்தப் பட்டு பரிசு வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஐக் கிய இளைஞர் பேரவை தலைவர் காட்வின், பொரு ளாளர் ராபின், சட்ட ஆலோ சகர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புதிய "யு ட்யூப் ஸ்கூல்" : வீடியோ பார்த்து படிக்கலாம்

முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய "யு ட்யூப் ஸ்கூல்" என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் �ஸ்மார்ட் கிளாஸ்� என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது. அதில் பள்ளிக் கல்வி தவிர மற்ற வீடியோக்களை காண முடியாது. இதனால், உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பள்ளி கல்வி தொடர்பான வீடியோக்களை காட்டி பள்ளிகளின் ஸ்மார்ட் கிளாசில் ஆசிரியர்கள் சொல்லித் தர முடியும். ஐபேட் போன்ற தனிப்பட்ட கருவிகளிலும் மாணவர்கள் பயன் பெற முடியும்.
இதேபோல, யு ட்யூப் எஜுகேஷன் என்ற இணைய தளத்தில் இருந்து வீடியோக்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து மாணவர்களுக்கு அளிக்க முடியும். அதில் உள்ள 4.5 லட்சம் கல்வி வீடியோக்கள் யு ட்யூப் ஸ்கூல் இணைய தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? : 3,225 மெகா வாட் உற்பத்திக்கான மின்சார திட்டப் பணிகள் தாமதம்

மின்வாரியத்தின் அலட்சிய போக்கால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006&07ம் ஆண்டில் மொத்த மின்தேவை 10,098 மெகா வாட். அப்போது, மொத்தம் 1 கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர்கள் இருந்தனர். அப்போதைய மின்பற்றாக்குறை 300 மெகா வாட் ஆக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் 2.23 கோடி மின் நுகர்வோர்கள் இருப்பதால், ஒரு நாளின் மின்சார தேவை 10,500 முதல் 12,000 மெகா வாட் ஆக அதிகரித்திருக்கிறது.
அனல், நீர், காற்று உள்ளிட்டவை மூலம் ஏறத்தாழ 10,122 மெகாவாட் மின் உற்பத்தியை மின்சார வாரியம் செய்கிறது. இதில், காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது 2,500 முதல் 3,000 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் ரூ 13 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்சார பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்ட மின்திட்டங்கள், திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் மொத்தம் 10,122 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10,214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே மின்வாரியம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது, நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மீதமுள்ள மின்திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்தாமல், பல மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருவதே, மின்பற்றாக்குறைக்கு காரணம். இதனால், வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 19 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மின்சாரம் வாங்க ரூ 23 ஆயிரத்து 360 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒரு நாள் வருமானம் ரூ 60 கோடி. இதில் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே ரூ 50 கோடி வரை செலவிடப்படுகிறது. இப்படி மின்சாரம் வாங்கவே பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிடும்போது, வாரியம் நஷ்டம் ஏற்படாமல் எப்படி லாபத்தில் இயங்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்டுதோறும் மின் நுகர்வோர் எண்ணிக்கை 9 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிந்திருந்தும், அதற்கான திட்டப்பணிகளை முடுக்கிவிடாமல் இருந்தது, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். இறுதியாக, வாரியத்துக்கு பெரிய நஷ்டம் என்று கூறி மக்களின் தலையில் கட்டண உயர்வாக விழுகிறது.
இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?
கடந்த 2007ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3,225 மெகா வாட் மின்உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டமிட்டப்படி, இதில் பெரும்பாலான பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மின்நிலையங்களில் தற்போது 75 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில், திட்டமிட்டப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிகள் முடித்து, மே மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். தற்போது, தேதி மாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையிலேயே மற்றொரு 600 மெகா வாட் கொண்ட உற்பத்தி நிலையத்தில், கடந்த ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இதுவும், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம், திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலையில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இது, கடந்த செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. பின்னர், தற்போது 2வது முறையாக 2012 மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடியில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு, மார்ச்சில் உற்பத்தி தொடங்க வேண்டும். ஆனால், இதற்கான பணிகளும் தாமதமாகவே நடக்கிறது.
மேற்கண்ட திட்டப் பணிகளில் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மொத்த திட்டப்பணிகளும் முடிக்கும்போது, தமிழகத்துக்கு 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையே, அணு மின்நிலையத்தில் பணிகள் முடிக்கும் நிலையில், எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா.? அதன் மூலம் மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.    (Dinakaran)

அரிசி, பருப்பு, பூண்டு விலை குறைந்தது : விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி

விளைச்சல் அதிகரிப்பால் பருப்பு மற்றும் கொத்தமல்லி, பூண்டு, அரிசி விலை குறையத் தொடங்கியுள்ளது. பருப்பு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நல்ல விளைச்சல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கப்பல்களில் இறக்குமதி போன்ற காரணங்களால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ துவரம் பருப்பு ரூ 70க்கு விற்கப்பட்டது ரூ 60க்கும், தான்சினியா துவரம் பருப்பு ரூ 55 லிருந்து ரூ 45 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது. மேலும், உளுந்தம் பருப்பு ரூ 70 லிருந்து ரூ 60க்கும், உளுந்தம்பருப்பு(பர்மா), ரூ 65 லிருந்து ரூ 55க்கும், பாசிப்பருப்பு ரூ 75 லிருந்து ரூ 65க்கும்; 2ம் ரகம் ரூ 60 லிருந்து ரூ 50க்கும், கடலைப்பருப்பு ரூ 60 லிருந்து ரூ 54க்கும்; 2ம்ரகம் ரூ 55லிருந்து ரூ50க்கும் விற்கப்படுகிறது. புது வரவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் இந்த விலை வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் கர்நாடகா, ஓசூர் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் புளி முதல் ரகம் கிலோ ரூ 130 லிருந்து ரூ 110; 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80க்கும், வத்தல் முதல் ரகம் ரூ 200 லிருந்து ரூ 160க்கும், 2ம் ரகம் ரூ 170லிருந்து ரூ 120க்கும், கொத்தமல்லி ரூ 70லிருந்து ரூ 60க்கும், மலைப்பூண்டு ரூ 130 லிருந்து ரூ 100க்கும், நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ 140லிருந்து ரூ 110க்கும், 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூபாலி அரிசி கிலோ ரூ 20 லிருந்து ரூ19க்கும், அதிசய பொன்னி ரூ 24 லிருந்து ரூ 22க்கும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ 22லிருந்து ரூ 19க்கும்; 2ம் ரகம் ரூ 20லிருந்து ரூ 17க்கும், பாபட்லா புதுசு ரூ 26லிருந்து ரூ 24க்கும், பாபட்லா பழையது ரூ 30லிருந்து ரூ 28க்கும், வெள்ளை பொன்னி ரூ 38 லிருந்து ரூ 36க்கும், பொன்னி பச்சரிசி ரூ 22லிருந்து ரூ 20க்கும், புது பச்சரிசி ரூ 30லிருந்து ரூ 28க்கும், பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ 85 லிருந்து ரூ 80க்கும்; 2ம் ரகம் ரூ 65லிருந்து ரூ58க்கும், 3ம் ரகம் ரூ 50லிருந்து ரூ 43 ஆகவும் குறைந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து புது அரிசி வரத் தொடங்கியுள்ளதாலும், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செங்கல்பட்டு, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாகவும் அரிசி விலை குறைந்துள்ளது. அடுத்தவாரம் இந்த விலை கிலோவுக்கு ரூ 3 வரை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு : 10ம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க அதிரடி முடிவு

அறிவியலுக்கு மதிப்பெண் தளர்வு
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 25 மதிப்பெண் செய்முறைக்கும், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறையில் 20 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல், கணக்கு பாடங்களில்தான் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். இதனால், அந்த பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வில் 15 மதிப்பெண் எடுத்து மொத்தம் 35 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தனியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால், எழுத்துத் தேர்வில் 35 அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்து, செய்முறையில் 20 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தால் தோல்வி தான்.
இந்த புதிய திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்களும் அறிவியல் பாடத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்கள் சற்று கடினமாக உள்ளது. இதுதான், மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச்சில் நடத்த தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது.

களியக்காவிளை - நாகர்கோவில் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லுக்கட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களியக்காவிளையில் இருந்து திட்டங்கனாவிளை, தாரப்பழஞ்சி, அதங்கோடு, காப்புக்காடு, நட்டாலம் வழியாக நாகர்கோவில் வரையும் அளவீடு செய்யப்பட்டு ள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக புறவழிச்சாலை அமையும் போது 500க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு என்.எச்.47ல் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் அரசிடம் இருந்து இழப்பீடு பெற பூத்துறையை அடுத்த கல்லுக்கெட்டியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்புத்துறை அலுவலகத்திற்கு தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணத்துடன் அலுவகத்திற்கு வந்தனர்.
அப்போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறவழிச்சாலைக்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் என்.எச். 47 பாதுகாப்பு நடவடிக்கை குழு தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலீப், லெட்சுமி நாரா யணன், புறவழிச்சாலை நலச்சங்க தலைவர் ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றதை அடுத்து நெல்லையில் இருந்து வந்த சிறப்பு தாசில்தார் மற்றும் அதி காரிகளிடம் இழப்பீட்டு நடவடிக்கைக்காக தங்கள் நில ஆவணங்களை காண்பித்தனர். (Dinakaran)

உயர் நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு : அறிக்கையில் குட்டிகரணம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொண்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்ப டாது என்றும் நில நடுக்கம் காரண மாக அணை உடைந்தால் கூட அதிலிருந்து வெளி யேறும் தண்ணீ ரை இடுக்கி, குள மாவு, செருதோணி ஆகிய அணை கள் தாங்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், அரசு சார்பில் வேறொரு அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும� இதற்காக 4 பேர் அடங்கிய அமைச்சரவை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அட்வகேட் ஜெனரலின் கருத்துக்கு நேர் எதிரான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களை பாதிக்கும். அணை யில் 136 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் கூட பாதுகாப்பு இல்லை. அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை தாங்கும் சக்தி இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளுக்கு கிடையாது. ஏனென்றால் இந்த இரு அணைகளுக்கும் மதகு இல்லை. குளமாவு அணை க்கு மட்டுமே மதகு உள்ளது. முல்லை பெரியாறு அணை யில் நடைபெற்ற பலப்படுத்தும் பணிகள் போதுமானதாக இல்லை. அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முதல்வர் பதவியை தராவிட்டால் : பாஜ தலைவரிடம் எடியூரப்பா மிரட்டல்

கர்நாடகாவில் விபரீதம் நடக்கும்
கர்நாடக பாஜ.வில் தனக்கு ஆதரவாக 72 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இவர் மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வர் பதவி அல்லது மாநில பாஜ தலைவர் பதவி பெறுவதில் குறியாக இருக்கிறார். அதே நேரம், "எனக்கு பதவி ஆசையில்லை. கர்நாடகாவில் கட்சியை வழி நடத்துவது பற்றியும், மேலவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்க டெல்லி வந்தேன்" என்று எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் கட்கரியை சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தும் பதவியில் நீடிக்கிறார்கள். எனவே, மீண்டும் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்." பதவி வழங்காத நிலையில் கட்சியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன். இதனால் கர்நாடக பாஜ.வில் விபரீதங்கள் ஏற்படும்� என்று எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியையும் எடியூரப்பா சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, அத்வானியிடம் எடியூரப்பா தனது கோரிக்கை குறித்து விளக்கி கூறினார். இந்த சந்திப்பின்போது 10 எம்.பிக்கள் உடன் இருந்தனர். தனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்கரியிடம் எடியூரப்பா கொடுத்துள்ளார். (Dinakaran)

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.

கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை : சேலத்தில் பரபரப்பு

சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.