Sunday, 11 December 2011

உரம் பதுக்கலை தடுக்க புதிய திட்டம் : ஜனவரி 1ம் தேதி முதல் அமல்

எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
மாநிலங்களில் தட்டுபாடின்றி உரம் கிடைப்பதற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் போதிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஆனாலும் பல இடங்களில் உரம் பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது, அதிகவிலைக்கு விற்பது போன்றவை நடக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு எளிதில் உரம் கிடைப்பதை உறுதி செய்யவும், கிடங்கு வாரியாக உரம் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு உரவிற்பனையகங்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவை யான உரங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் புதிய உரவினியோக திட்டத்தின்படி அரசு கூட்டுறவு உரவிற்பனையகம் மற்றும் தனியார் உர விற்பனை யகங்களில் செல்போன் மூலம் உரம் கண்காணிப்பு திட்டம்(மொபைல் பேஸ்டு பெர்டிலைசர் மானிட்டரிங் சிஸ்டம்) வரும் 2012 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் உர விற்பனையகங்களில் உள்ள இருப்புகள் மற்றும் அந்த உரவிற்பனை நிறுவனங்கள் வாங்கும் உரங்களின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்ட வாரியாக உரவிற்பனை யாளர்களுக்கு கடந்த மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ஜாகிர் நவாஷ் கூறியதாவது: தனியார் துறைகளுடன் சேர்ந்து அரசு இந்த திட்டத்தை செயல் படுத்த உள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். உதாரணமாக, தூத்துக்குடியில் உள்ள உரஆலையில் இருந்து கோவையை சேர்ந்த ஒரு மொத்த உரவிற்பனை யாள ருக்கு 10 டன் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி உர ஆலையை சேர்ந்தவர் உரத்தை, மொத்த வியா பாரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அதுகுறித்து எம்எப்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்புவார். தகவல் கிடைத்தவுடன் வியாபாரி பதில் தகவல் அனுப்புவார். சில்லரை விற்பனையாளரிடம் உரம் விற்பனை செய்யும் போதும் இதே போல் தகவல் பரிமாறப்படும். இந்த தகவல் பரிமாற்றம் முழுவதும் வேளாண் துறை அலுவலகத்தில் உள்ள எம்எப்எம்எஸ் இணை யதளத்தில் பதிவாகிவிடும். இதன் மூலம் உரவிற்பனையாளர்கள் உரத்தை பதுக்க முடியாது.
இவ்வாறு ஜாகிர் நவாஷ் கூறினார்.

"ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பிக்கூட பார்க்கல" - தொழிலாளர்கள் அதிர்ச்சி

தொழிற்சங்க மாநில மாநாட்டில் அமைச்சர்கள் பேசுகையில், "ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்"; "ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பியே பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டதால், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம் சார்பில், மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
தொழிலாளர் மாநாடு என்றதுமே கலந்து கொள்ளலாமா என்று தயங்கினேன். ஏனெனில், என்னென்ன கேட்பீர்கள் என்பது தெரியும். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றோ; இந்த கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்றோ, இங்கேயே என்னால் கூற முடியாது. மேலும், சில விஷயங்களை மேடையில் பேசவும் முடியாது. எதையும் எதிர்மறையாக செய்யமாட்டோம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை அல்ல. மின்வாரியத்தின் நிதி நிலை சீரடையும்போது, நிதியாதாரங்கள் சரியாகும்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
"ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்" என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல நிதிநிலை சரியாகும் வரை பொறுமை காக்க வேண்டும். "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" என்று சொல்வார்கள்.
"இங்கே தாமதிக்கப்படுவது வழங்குவதற்காகத்தான்" என்று புரிந்து கொள்ள வேண்டும். மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகை மாநிலமாக திகழ தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எனது பேச்சு தொழிலாளர்களுக்கு திருப்தியளித்ததா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு எனது பேச்சு ஏமாற்றமே. பின்னால் நடக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
முன்னதாக, சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் பேசுகையில், சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுகளை தாமதிக்காமல் வழங்க வேண்டும் போன்ற 9 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதற்குமே அமைச்சர் பதிலளிக்காமல், கோரிக்கைகள் குறித்து எதுவுமே தெரிவிக்க இயலாது என்று கூறியதோடு, அவசரமாக திருச்சிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு, பேசியதுமே விழா அரங்கிலிருந்து புறப்பட்டும் சென்று விட்டார்.
"கோரிக்கைகளுக்கு ஏதேனும் விடை கிடைக்காதா" என்று ஆவலோடு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். மேலும், மின்துறை அமைச்சர்தான் இப்படி பேசிவிட்டு சென்று விட்டார்.
தொழிலாளர் துறை அமைச்சராவது நமக்கு ஆறுதலாக பேசுவாரா என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் பேசுகையில், “மின்வாரிய தொழிலாளர்களை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்கள்தான் எங்களை புரிந்து கொள்ளவில்லை. எனது தொகுதியான தூத்துக்குடியில் அனல் மின்நிலைய குடியிருப்பில் ஓட்டு கேட்டு சென்றபோது, அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் மீது உங்களுக்கு பற்று இல்லை. உங்கள் மீது எங்களுக்கு பற்று உண்டு” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே தொழிலாளர்கள் சென்றனர். இரண்டு அமைச்சர்கள் வந்தும் ஒரு தீர்வும் இல்லை யே என்ற நிலையில், மாநாட்டு அரங்கில் இருந்து தொழிலாளர்கள் வேதனையுடன் வெளி யேறினர்.                  (Dinakaran)

சாப்பாடு கொடுக்காமல் தந்தையை அடித்து கொடுமை : நானும் எனது மனைவியும் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தோம்.

சாப்பாட்டுக்கு பணம் கொடுக் காமல், ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு தந்தையை அடித்து துன்புறுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் வீராணம் பக்க முள்ள அடிமலைப்புதுரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது மனைவி ஆண்டி யம்மாள். இவர்களின் மகன் அண்ணாமலை (48). இவர் காரைக்காலில் உள்ள எண்ணெய் எரிவாயு கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மாரியப்பன் சேலம் மாவட்ட எஸ்பி முத்து சாமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்ப தாவது:
எனது மகனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத் தேன். தற்போது நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால் நானும் எனது மனைவியும் சாப்பிட ஒரு பைசா கூட தருவதில்லை. இதனால் நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். ஆனால், அந்த நிலத்தையும் எழுதி கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் மாரியப்பன் குறிப்பிட்டி ருந்தார்.
இதில் விசாரணை நடத்த, இரும்பாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாருக்கு எஸ்பி உத்தர விட்டார். இதையடுத்து, மகன் அண்ணாமலையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* நானும் எனது மனைவியும் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தோம்.
* எங்களது மகன் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்.
* எங்கள் சாப்பாட்டுக்கு ஒரு பைசா கூட தருவதில்லை.
* தள்ளாத வயதிலும் எங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறோம்.
* இப்போது, அந்த நிலத்தையும் எழுதிக் கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார்.
* அதனால், எங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்கிறார் தந்தை.

உஷார்!!! பரவுது எலி காய்ச்சல் : தடுக்க என்ன வழி?

சமீபத்தில் சென்னை யில் பெய்த கன மழையால் நகரின் எல்லா சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை நின்று 10 நாட்கள் ஆன பிறகும் பல சாலைகளில் இன்னும் மழைநீர் வடிந்தபாடில்லை.
பலத்த மழையால் கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் எங்கும் துர்நாற்றம்... இது போதாதென்று மாநகராட்சியினர் சரிவர குப்பை களை அள்ளாததால் அவைகளும் மழை நீருடன் கை கோர்த்து கொண்டது. இதனால், பொதுமக்களுக்கு தோல் அரிப்பு, சேற்றுப் புண் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
விளைவு... காய்ச்சல்... வயிற்று வலி... வயிற்று போக்கு என பல உடல் உபாதைகள் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரிசுகள் வரை மருத்துவமனையில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த 15 நாளாக நகரில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் ஹவுஸ் புல். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நகரில் தற்போது எலிக் காய்ச்சல் பரவி வருகிறது. கிட்டத்திட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் வந்துள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

[  தடுக்க என்ன வழி?
* வெளியே சென்று வந்ததும் கை கால்களை சோப்பு அல்லது கிருமி நாசின் கொண்டு கழுவவும்.
** மழை காலங்களில் வெளியே செல்லும் போது கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம்.
*** காய்ச்சிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
**** வெளியே திறந்த வெளியில் விற்கும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.]
எலிக்காய்சல் எப்படி வருகிறது. அதற்கான அறிகுறிகள் என்ன... இது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பொது நல மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணனை சந்தித்தோம். அவர் கூறியதாவது:
எலிக்காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. நோய்வாய்ப்பட்ட எலிகள்... தேங்கி யிருக்கும் சாக்கடை நீர் மற்றும் மழைநீரில் சிறுநீர்கழிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து விடுகிறது.
இதுபோன்று, எலியின் பாக்டீரியாக்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். சாலையில் நடக்கும் மனிதர்களின் கால்களின் விரல்கள் வழியாக ரத்தத்தில் மிக எளிதாக கலந்து விடும். உடலுக்கு செல்லும் பாக்டீரியாக்கள் முதலில் கல்லீரலுக்கு சென்று, அதன் செயல்திறனை செயல் இழக்கச் செய்கிறது.
எலிக்காய்ச்சல், சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் மட்டுமே பரவுவதில்லை. அந்த தண்ணீரில் நடப்பதாலும் அல்லது செல்லப்பிராணிகள் மூலமாகவும் பரவும். காரணம் இது ஒரு தொற்று நோய். செல்லப் பிராணிகளின் உடலில் பாக்டீரியா கிருமிகள் இருந்தாலும் அவற்றை நாம் வருடுவதாலும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் தாக்கினால் முதலில் காய்ச்சல், பிறகு வாந்தி, உடல் வலி, மூட்டு வலி ஏற்படும். காய்ச்சல் ஒரு வாரத்துக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்வது அவசியம். இல்லை என்றால் இந்த நோய் மஞ்சள் காமாலை நோய் போல் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும். இந்த நோயை பொறுத்தவரை இதற்கு என தனி தடுப்பூசி கிடையாது. காய்ச்சல் குறையவும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.   (Dinakaran)

முல்லை பெரியாறு அணை : உண்மை நிலை என்ன???




https://www.facebook.com/photo.php?fbid=324005447626781&set=a.282333918460601.93674.100000519861970&type=1&theater

(Downloading the picture from above) will help to read the report in full and clear.)

Saturday, 10 December 2011

வெடிகுண்டு கேள்விபட்டிருப்பீங்க கடித வெடிகுண்டு கேள்விபட்டிருகீங்களா??? படியுங்க.

இத்தாலியில் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்த கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. கடிதத்தை பிரித்த போது வெடிகுண்டு வெடித்து அதிகாரி படுகாயம் அடைந்தார்.
இத்தாலியின் ரோம் நகர் அருகே வருமான வரித் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று சில கடிதங்கள் வந்தன. அவற்றில், இயக்குனரின் கவனத்துக்கு என்று குறிப்பிட்ட மஞ்சள் நிறத்தில் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை வருமான வரித் துறை இயக்குனர் மார்கோ குக்காக்னா பிரித்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் மார்கோ படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு கடிதத்தை ‘இன்பார்மல் அனார்கிஸ்ட் பெடரேஷன்’ என்ற கும்பல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
முகம், கைகளில் படுகாயம் அடைந்த மார்கோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தாலி யில் புதிய பிரதமராக மரியோ மோன்டி பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். கடன் நெருக்கடியை தீர்க்க புதிய பொருளாதார கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி வரிகள் உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கலவர கும்பல் கூறியுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்ட இன்னும் சில கடிதங்கள் இத்தாலி அலுவலகங்களுக்கு அனுப்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

நாகர்கோவிலில் ஆன்லைன் வர்த்தக மோசடி : வாலிபரிடம் விசாரணை - என்ன கஷ்ட காலத்தில் மாட்டி கொண்டாரோ??

நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என விளம்பரம் செய்தார். ரூ. 1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறினார். இதை நம்பி அவரிடம் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். பங்குகள் விற்பனை ஏற்றம், இறக்கத்துக்கேற்ப மாதந்தோறும் அளிக்கப்படும் தொகை மாறுபடும் எனவும் கூறி இருந்தார்.
அதன் மூலம் சுமார் ரூ. 1.25 கோடி வரை அவர் முதலீட்டாளர்களிடம் வசூலித்துள்ளார். பணத்தை பெற்று கொண்டு ஒரு சில மாதங்கள் அவர் கூறியது போன்று பணம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் பணம் கொடுக்க வில்லை. பணம் கொடுத்தவர்கள் தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக ஏற்கனவே நேசமணிநகர் பகுதியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பிடித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு பணங்கள் மதிப்பு குறையும் போது என்னிடம் உள்ள ரூபாயை கொடுத்து அவற்றை வாங்கி வைத்து கொள்வேன். வெளிநாட்டு பணங்கள் மதிப்பு கூடும்போது, அதனை கொடுத்து நம் நாட்டு பணத்தை பெற்றுக் கொள்வேன். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடமும் பணத்தை பெற்றேன். இதனை நம்பி பலரும் பணம் செலுத்தினர்.
ஆனால் அவர்களுக்கு என்னால் பணத்தை திரும்ப கொடுக்க முடிய வில்லை என்றார். அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி தொகை இருப்பதால், இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. (தமிழ் முரசு)
சிந்திப்போம் 
// இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர்.//
** மோசடி செய்ய அந்த வாலிபர் நினைத்திருந்தால் அவர் தலை மறைவாயிருக்கலாம் அல்லவா???
** பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய விதமாக யோசிதிருப்பரோ???
** திட்டம் தோற்றுவிட்டதால் தூற்ற பட்டாரோ.. ஜெயித்திருந்தால் மக்கள் அவரை பாராட்டி இருப்பார்களோ???
உண்மை வெல்லட்டும்... பணத்தை இழந்தவர்ளுக்கு பணம் கிடைக்கட்டும்... வாலிபர் மீண்டும் போராடட்டும்... மோசடி செய்ய நினைத்திருந்தால் தண்டிக்க பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு : நம்ம கூத்தாடி அண்ணன்கள், அக்காமார் என்ன சொல்றாங்கன்னு கேளுங்க???

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மனித உயிர்கள் முக்கியம். இப்பிரச்னையில் மத்திய அரசுதான் சுமூக தீர்வு காண வேண்டும்’ என்று தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன.
இப்பிரச்னை பற்றி நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ள கருத்து:
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்:
தமிழர்கள், மலையாளிகளுக்கு இடையேயான தாக்குதலை தடுக்க முதலில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைபற்றி ஆலோசித்து முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால் அப்பாவி மக்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு மறையும். இப்பிரச்னையில் சினிமா கலைஞர்கள் தலையிடக்கூடாது ஏனென்றால் அவர்களுக்கு பிரச்னை பற்றி முழுமையாக யாரும் தெரிவிப்பதில்லை.
நடிகர் பிரசாந்த்:
உயிர் வாழ முக்கிய ஆதாரம் தண்ணீர்தான். உயிரை காக்கக்கூடிய தண்ணீரை காரணம் காட்டி மனித உயிர்கள் பலியாகக்கூடாது. தமிழர்கள், மலையாளிகள் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் சுமூக தீர்வு காண வேண்டும்.
நடிகை குஷ்பு:
இப்பிரச்னையில் மாநில எல்லைபகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அணையை ஆராய்ந்து பார்த்து அதிகாரிகள் தந்த அறிக்கையில் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி உள்ளனர். எனவே இதில் வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது. தமிழ் மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல¢ கேரள மக்களின் உயிரும் முக்கியம். இப்பிரச்னைக்கு சுமூக காண முயற்சிக்க வேண்டும்.
நடிகை ரீமா கல்லிங்கால்:
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் அதேவேளையில் கேரள மாநிலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று சிலரும், பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம். இருமாநிலத்திலும் சுமூக உடன்பாடு ஏற்பட வேண்டும்.
நடிகை மம்தா:
மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிட்டன. இப்பிரச்னையில் உடனடியாக தீர்வு காண்பதற்கு என்ன தடையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் நீண்ட கலந்தாய்வுகள் தேவையற்றது. உடனடியாக தீர்வு காண வேண்டும். அணை உடைந்தால் இருதரப்பு மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நடிகர் சுரேஷ் கோபி:
முல்லைபெரியாறு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய அரசு கருத வேண்டும். நீண்ட வருடமாக இருக்கும் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். (tamil murasu)

Anna Hazare to go on Fast Again : Calls it Second Independence Fight


Ahead of his day-long fast for a strong Lokpal Bill, Anna Hazare on Saturday launched a vitriolic attack on the government, charging that it was "intoxicated" by power and said the "second fight for independence" has started which will go on till corruption is eradicated.
Before leaving for Delhi where he will hold the fast, Hazare said, "So many martyrs lost their lives for our independence but even today we cannot experience independence. Who got independent. What independence. Corruption, loot is still here. Only 'goras' left and 'kalas' came in, that is the only difference."

"So the second fight for independence has started, it is a long fight, till corruption gets eradicated, it will go on. Many people will have to got to jail again, be lathicharged, some will have to sacrifice, that time is here now. Till we sacrifice, we won't get the right independence," Hazare told reporters here.

Keenly observed by government and people, the activist will sit at Jantar Mantar, the protest hotspot in the national capital, the whole day along with his supporters demanding a strong anti-corruption law.

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண் : அரசு டாக்டர்களின் அலட்சியம்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.
இரண்டு நாள் ஆகியும் அங்கு காயத்ரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று, மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராமமூர்த்தியிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சியத்தை பார்த்து கொதிப்படைந்த அவர், டீன் தேன்மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது.  (tamil murasu)

சினிமா காரர்களை கவரும் கடலோர கிராமம் குறும்பனை : Kurumpanai - A coastal Village attracting Film Makers

இந்திய தேசத்தின் தமிழ் நாடு மாநிலத்தின் குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அழகான மிக பெரிய கடலோர கிராமம் குறும்பனை.

சமிப காலமாக குறும்பனை கிராமம் சினிமா காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று கேட்டால் குறும்பனை கிராமத்தின் அழகும், மக்கள் தரும் ஆதரவும் என்கிறார்கள்.


அப்படி என்னதான் அழகு இந்த கிராமத்தில்... நீங்களே பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்.  

குறும்பனை கடற்கரை : மண் அரிப்பினால் நாங்கள் விளையாடிய பகுதி கடலால் ஆக்ரமிக்கபட்டுவிட்டது. 
 குறும்பனை கடற்கரை மற்றொரு பகுதி : சுற்றுலா தலம் அமைத்தல் என்ற பெயரில் அக்க்ரமிப்புகள்.
குறும்பனை கடற்கரை : இங்குதான் எங்கள் தாத்தா, அப்பா எல்லாரும் உடல் காயா கரமடி இழுத்தார்கள். அது ஒரு காலம்.
 குறும்பனை கடற்கரை : என்னே அழகு!!!

 குறும்பனை : புனித இன்னசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.

குறும்பனை : புனித இன்னாசியார் ஆலய பீடம்.

"காமராசு (1998 )" : அப்போது நான் 11 -ம் வகுப்பு. ஊரில் படம் எடுக்கிறார்கள், முரளி, லைலா மற்றும் பட குழுவினர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி. பரிட்சையை விட்டுவிட்டு படபிடிப்பு காண சென்றோம் (மறைகல்வி பரீட்சை என்பதால்). மற்றொரு சுவாரஸ்யம் எனது அண்ணா எனக்கு வங்கி கொடுத்த ரூ.50 பேனாவையும் தொலைத்தேன்.

"அலையோடு விளையாடு-2008" : படம் இன்னும் வெளிவரவில்லை

"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - 2009 "

எனது அன்பு மகன் அமுதன்பு வுடன் "செம்பட்டை-2011" படபிடிப்பு இடத்தில்

"மூன்று பேர் மூன்று காதல் - 2011 " : தற்பொழுது இதன் படபிடிப்பு ஊரில் நடந்து கொண்டிருக்கிறது.

ஊரை சுற்றி வளர்ந்து நிற்கும் தென்னை, பனை மரங்களும், கோவில், பள்ளிக்கூடம், கடற்கரை, குருசடிகள், பாறைகள், வாய்க்கால் அத்தனையுமே அழகுதான். சொகுசு என கருதப்படும் நகர (நரக) வாழ்க்கை இதற்கு முன்னால் தூசுதான்.

10 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி : ரஞ்சி போட்டி

பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை (எலைட்) பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்கால் அணி முதலில் பந்து வீசியது. தமிழகம் முதல் இன்னிங்சில் 391 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. முகுந்த் 83, பத்ரிநாத் 24, வாசுதேவதாஸ் 106, கேப்டன் எல்.பாலாஜி 49* ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, முதல் இன்னிங்சில் 176 ரன்னுக்கு சுருண்டது. சுக்லா அதிகபட்சமாக 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கங்குலி 28, சுக்லா 50 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கங்குலி 33, சுக்லா 73 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பெங்கால் அணி 2வது இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி பந்துவீச்சில் யோமகேஷ் 3, பாலாஜி 2, கவுஷிக், ஸ்ரீனிவாஸ், அபராஜித், முகுந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 4.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன் எடுத்து வென்றது. முகுந்த் 25, விஜய் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தன.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் : கேரள சட்டப்பேரவை

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர். 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு பேரவை கூடியது. சிறப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து உம்மன்சாண்டி பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தீர ஒரே வழி, புதிய அணை கட்டுவதுதான். இந்த விஷயத்தில் தமிழ்நாடு உடனான நல்லுறவு எந்த விதத்திலும் பாதிக்காது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என இந்த பேரவை உறுதி அளிக்கிறது. அதே நேரம், கேரள மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது” என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன் பேசுகையில், “காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வரும்போதுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பூதாகரமாகிறது. கடந்த இடது முன்னணி ஆட்சியின்போது, இந்த பிரச்னை திறமையாக கையாளப்பட்டது. தற்போது, காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசும் இதே போக்கைதான் கையாள்கிறது” என்றார்.
நிதித்துறை அமைச்சர் மாணி பேசுகையில், “புதிய அணைக்கான பூமி பூஜையை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பிஜிமோள் பேசியபோது, “முல்லை பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் உம்மன்சாண்டி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேறியது.

Friday, 9 December 2011

15ம் தேதி கடைசி நாள் : பென்ஷன்தாரர் உறுதிமொழி படிவம்


பென்ஷன்தாரர்கள் உறுதிமொழி படிவத்தினை வரும் 15-ம் தேதிக்குள் பென்ஷன் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி துணை மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து வங்கி மூலமாக மாதாந்திர பென்ஷன் பெறும் பென்ஷன்தாரர்கள், தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான உறுதிமொழிப் படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்து வரும் 15-ம் தேதிக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவரி, செல்போன் நம்பர் தவறாமல் குறிப்பிடவேண்டும். இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் சுதீப்தா கோஷ் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தி உங்களை சார்ந்ததாக இல்லை எனினும் பிறருடன் பகிருந்து கொள்ளுங்கள். இதை பற்றி அறியாமல் இருக்கும் சிலர் இதை அறிய கூடும். அரசு ஊழியர்கள் லஞ்சம் என்ற பெயரில் முதியவர்களை அலைகளிக்கும் குற்றம் சிறிதாவது குறையும்.

சந்தனம், குங்குமம் கொடுத்து தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்கும் கேரள பஞ்., தலைவி

செங்கோட்டை எல்லையில் நெகிழ்ச்சி
முல்லை பெரியாறு பிரச்சனை யால் தமிழக&கேரள உறவு சீர் கெட்டு வரும் நிலையில் செங்கோ ட்டையை அடுத்த கேரள மாநி லம் ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி, உறுப் பினர்கள் தலை மையில் பொதுமக்கள் தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்று உபசரித்தது பக்தர்களை ஆனந்தமடைய வைத்தது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு மலையாளிகள் இடையூறு செய்து வருவதால் பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். ஆரியங்காவு பகுதியில் அவர்களுக்கு பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் தலைமையில் பூ மற்றும் சந்தனம் கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தமிழக கேரள மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வருகிறது. காலம் காலமாக சகோதர்களாக வா ழ்கிற நிலை தற்போது பகையாக மாறி வருவது குறித்தும் இரு மாநிலங்களிலும் உள்ள பெரிய வர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு கேரள மக்கள் இடையூறு செய்வதால் பக்தர் கள் செங்கோட்டை வழி யாக செல்கின்றனர். இதனால் இப் பகுதியில் ஐயப்ப பக்தர்க ளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரள மக்களின் நல்லெண்ண நடவடிக்கையாக ஆரியங்காவு பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங் குமம், மற்றும் இனிப்பு வழங்கி கனிவோடு வரவேற்று சபரி மலை அனுப்பி வைக்கின்றனர்.
நேற்று ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை வர வேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென் மலை பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பசி போ க்க கேரள மக்களால் அன்னதா னம் செய்யப்படுகிறது. இதில் கேரள மக்களின் பாரம்பரிய உணவான கப்பை கிழங்கு, கஞ்சி வழங்கப்பட்டது.
ஒரு சில கேரள அரசியல் வாதிகளால் தமிழக & கேரள உறவு பாதிக்கப்படும் நிலையில் ஆரியங்காவு பகுதி மக்களின் நல்லெண்ண உபசரிப்பு ஐயப்ப பக்தர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. (Tamil Murasu)

குழந்தைகளின் படிப்புக்காக ஊர் ஊராக ஆடு மேய்க்கும் தம்பதி

கல்விக்கு முதல் மரியாதை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். கல்வியின் முக்கியத்துவத்தை இதன்மூலம் அறியலாம். அழியாத செல்வமான கல்வியை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்பதால் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதைய சூழலில் கல்வி வியாபாரமாகி வருவது ஒரு புறம் இருந்தாலும் அரசு பள்ளிகளில் கல்வி இலவசம்தான். இருந்தாலும் பொருளாதார சூழல் காரணமாக குழந்தைகளின் கல்விக்கு தடை ஏற்படுகிறது.
சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நடுவங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், இவரது மனைவி ராமு. ஊரில் சரியான வேலை கிடைக்காததால் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை ஊர் ஊராகச்சென்று மேய்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.
தற்காலிக குடிசை அமைத்து தங்கியிருக்கும் கிருஷ்ணன், ராமு தம்பதியர்.
பல வருங்களுக்கு முன் ஊரை விட்டு குடும்பத்துடன் புறப்பட்ட இவர்கள் தற்போது சிதம்பரம் பைபாஸ் சாலை அருகே குடிசை அமைத்து செம்மறி ஆடுகளை மேய்த்து வருகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். வறட்சி காரணமாக இவர்கள் ஊரை விட்டு வெளியேறி நாடோடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுமார் 300 செம்மறி ஆடுகள் உள்ளன். வளர்ந்த பெரிய ஆட்டை மட்டுமே இவர்கள் விற்பனை செய்கின்றனர். ரூ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்தப்பணத்தில் கொஞ்சம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதியை ஊரில் தாத்தா பராமரிப்பில் இருந்தபடியே பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குமராட்சி, புவனகிரி, காரைக்கால், நாகூர், கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, நகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதியிலேயே இவர்கள் ஆடு மேய்த்து வருகின்றனர். வயதான தாய், தந்தை மட்டுமே சொந்த கிராமத்தில் உள்ளனர். இவர்களை போலவே இவர்களின் ஊரை சேர்ந்த பலரும் ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
ராமு கூறுகையில், வறட்சி மற்றும் விவசாயம் செய்ய முடியாததால் பிழைப்பு நடத்துவதற்காக நாங்கள் ஊர்விட்டு ஊர்வந்து ஆடு மேய்து வருகிறோம். தலைமுறை, தலைமுறையாக இது நடந்து வருகிறது. நாங்கள் தான் படிக்கவில்லை எங்கள் பிள்ளைகளாவது நல்லமுறையில் படித்து பெரியவேலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் தான் மழை, வெயில் என்று பாராமல் ஆடுமேய்த்து வருகிறோம். காடு, மேடு என்று பாராமல் படுத்து தூங்குகிறோம், எல்லாம் எங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக என்று பெருமிதத்துடன் கூறினார். குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தில் குடும்பம் நடத்தும் பெற்றோர் மத்தியில் குழந்தைகளின் படிப்புக்காக ஊர் ஊராகச்சென்று ஆடுமேய்த்து வரும் கிருஷ்ணன்&ராமு தம்பதியர் வித்தியாசமானவர்கள்தான். (Tamil Murasu)

அணு மின் நிலையத்தை மூடக் கோரி 39 கிராமத்தினர் இன்று பைக் ஊர்வலம்

நெல்லை மாவட்டம், கூடங் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங் களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் அணு மின் நிலையம் திணறி வருகிறது. இதனால் மின் உற்பத்தி தள்ளிப் போவதோடு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக செலவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 116வது நாளாக இடிந்தகரையில் லூர்து மாதா ஆலய வளாகத்தில் போராட்டக்குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந¢தது. போரட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் முன்பிருந்து கூடங்குளம் அணு மின¢ நிலைய பாதிப்புகள் குறித்து 30 கி.மீ., சுற்று வட்டார பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போராட்டக் குழு சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கூடங்குளம், செட்டிகுளம், பெருமணல், கூட்டப்புளி வழியாக சுமார் 30 கி.மீ., சுற்றளவுள்ள பகுதிகளை வலம் வந்தது. இதில் 39 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கறுப்பு பனியன் அண¤ந்து பங்கேற்றனர். இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்றுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் ஊர்வலத்தில் வலியுறுத்தப் பட்டது. இதை முன்னிட்டு கூடங்குளத்தில் முழு கடைய டைப்பு போராட்டமும் நடந்தது.

மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரூ 9.18 கோடி ‘பைன்’ : குழந்தை உணவுக்கு கடும் எதிர்ப்பு

மெக் டொனால்டு நிறுவனத்தின் ‘ஹேப்பி மீல்’ உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் கோர்ட் ரூ.9.18 கோடி அபராதம் விதித்துள்ளது. 
உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த நிறுவனம். இந்நிறுவனம் ‘ஹேப்பி மீல்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை 1979&ல் அறிமுகப்படுத்தியது. இது கிப்ட் பாக்ஸ் போல இருக்கும். ஹம்பர்கர், சீஸ் பர்கர், சிக்கன் மெக் நகட்ஸ், சாஸ், குளிர்பானம் ஆகியவை மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை ஒன்றும் அதில் இருக்கும். உலகின் பல நாடுகளிலும் இதை மெக் டொனால்டு விற்பனை செய்து வருகிறது. உணவுகள்கூட சில நேரம் பொம்மை வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில், ஹேப்பி மீல் உணவுகள் குழந்தைகளின் உடல்நலனை கெடுப்பதாக பிரேசிலில் புகார் எழுந்தது. தொடர்ச்சியாக ஹேப்பி மீல் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வீட்டு உணவுகளில் இருந்து அவர்களை அகற்றி, அடிமையாக்குகிறது என்று புகாரில் கூறப்பட்டது.
இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சாபாலோ கோர்ட், மெக்டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Hospital Catches Fire : 62 Killed in Kolkata

At least 62 people were killed and several others injured in a massive fire that broke out at the AMRI hospital in south Kolkata early this morning. 
West Bengal chief minister Mamata Banerjee said said: "The negligence as an unforgivable crime and assured harsh punishment possible for those found responsible. 


The CM said the licence of the AMRI hospital would be cancelled with immideate effect. "Quick action will be taken against the hospital after proper inquiry," she said. 

Nearly 160 patients were admitted in the Dhakuria building, where fire broke out in the wee hours, hospital sources said. 


Only 85 patients were rescued and removed to two other units of the same hospital located at Mukundapur and Saltlake. But the hospital authority could not confirm the condition of remaining 75 patients, they added. 


Meanwhile, fire department lodged an FIR against AMRI hospital authorities. The fire brigade in its complaint said that the hospital authority did not have the adequate fire-preventive mechanism and emergency evacuation system in place. 


Initial report hinted that most of the victims were admitted at orthopaedic ward and majority of them were immovable. 


Hundreds of relatives of the patients are waiting in front of the hospital. Till now, no official communication has been made by the hospital authority. 


Locals and fire officials who started the rescue work alleged that most of the hospital staffs fled soon after fire broke out. 


The report also confirmed that most of the patients are victim of suffocation as thick smoke covered the entire building. 


In the wee hours smoke was first noticed billowing out from the basement of the hospital building. Smoke soon spread inside the hospital building which is centrally air conditioned. Fire brigade was informed but before they could reach flames engulfed the entire building as the basement was packed off inflammable articles. 


Thick smoke covered the entire hospital causing suffocation of the patients. Local joined hand with police and fire brigade officials to rescue the patients. 


Till now, the hospital authority admitted that bodies of 15 patients have been recovered but more feared trapped inside the fourth floor of the building. Fire fighters now managed to scale up in the floor and started working. State minister Firhad Hakim and Javed khan are at the spot. They also admitted that the toll may rise more. 


The fire broke out in the early hours at the basement where hospital chemicals and medical waste were stocked. 


Fire service minister Javed Khan said that 80 per cent of the patients have been removed to other facilities.

இந்தியா 3வது இடம் : அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதில்

2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா & அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது
கடந்த 2010 & 11ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
போர் விமானங்கள், ஆயுதங்கள் உட்பட போர் கருவிகளை ஒப்பந்தப்படி வெளிநாடுகளுக்கு அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் 2010&11ம் நிதியாண்டில் (அக்டோபர்&செப்டம்பர்) விற்பனை செய்த போர் கருவிகள் மதிப்பு, அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலை டி.எஸ்.சி.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்குவதை சில ஆண்டுகள் அமெரிக்கா நிறுத்தியது. அண்மையில், இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட சுமூக தீர்வுக்குப்பின் அமெரிக்கா மீண்டும் ஆயுதங்கள் வழங்குகிறது.
இதையடுத்து கடந்த 2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா&அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது. இதன் மூலம் அந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து போர் கருவிகள் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்தது.
இதில் ரூ 28,000 கோடியுடன் ஆப்கன் பாதுகாப்பு படை முதலிடத்தையும், ரூ 25,480 கோடியுடன் தைபெய் பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகம் 2வது இடத்தையும் பிடித்தன.
ஆஸ்திரேலியா ரூ 20,280 கோடியுடன் 4வது இடத்தையும், அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஈராக், யுஏஇ, இஸ்ரேல், ஜப்பான், சுவீடன் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்தன.  (Dinakaran)

ஓட்டல்கள், கடைகளை போலீசார் சூறையாடினர் : லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்

மாமூல் கொடுக்காததால் திண்டி வனத்தில் ஓட்டல் மற்றும் கடைகளை போலீசார் சூறையாடினர். இதை கண் டித்து கடை உரிமையாளர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எடைக்குளம் கூட்டுரோடு புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற் பட்ட கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. இதில் டீக்கடை, ஓட்டல், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட கடை கள் அடங்கும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜீப்பில் வந்த இரண்டு போலீசார் 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு, சட்னி, சாம் பார் உள்ளிட்டவைகளை வெளியில் வீசினர். அங் கிருந்த டேபிள், சேர், டியூப் லைட் உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக் கினர்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
மேலும் நியாயம் கேட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலை யத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத் திருந்து நேற்று காலை அவர்களை விடுவித்துள் ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் புதுவை&திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தக வல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த டிஎஸ்பிக் கள் திண்டிவனம் குப்புசாமி, கோட்டக்குப்பம் முரு கேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் காவல்துறை சார் பில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கடைக் காரர்கள் மறியலை கைவிட்டனர்.  (Dinakaran)
சிந்திப்போம். தெளிவடைவோம்
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
** போலீசார் பொது இடத்தில் அப்படி வெளிபடையாக சொல்வார்களா???
** போலீசார் இத்தனை அட்டூழியங்களை செய்யும் வரை அனைவரும் பார்த்து கொண்டா இருந்தார்கள்???
இவையனைத்தும் உண்மை எனில் போலீசின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே???.

மாநகராட்சி பியூனுக்கு ரூ 12 கோடி சொத்து

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் மாநகராட்சியில் பியூன் ஒருவரின் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் ரூ 12 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாநகராட்சியில் தற்போது ஸ்டோர் கீப்பராக பணியாற்றுபவர் நரேந்திர தேஷ்முக். கடந்த 1978ல் பியூனாக மாதம் ரூ 150 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த இவர், இத்தனை ஆண்டுகளில் சம்பளமாக அதிகபட்சமாக ரூ 15 லட்சம்தான் வாங்கியிருப்பார். ஆனால், இவர் மிக ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மாநகராட்சியில் நடந்த பல ஊழல்களில் அதிகாரிகளுடன் இவருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இவரை சஸ்பெண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, லோக் அயுக்தா போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரது பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரொக்க பணம், தங்க நகைகள், எல்சிடி டி.வி.கள், 6 லேப்டாப், 10 செல்போன் மற்றும் ரூ 10 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள், ரூ 13 லட்சம் வங்கி டெபாசிட் சிக்கின. இதை பார்த்து போலீசாரே திகைப்படைந்தனர். பல வங்கிகளில் லாக்கர்கள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் இன்று திறந்து சோதனை நடத்தவுள்ளனர்.
தேஷ்முக் சிக்கியதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் அதிகாரிகள் பலரும் மாட்டலாம் என தெரிகிறது. இதனால், உஜ்ஜயின் மாநகராட்சி அதிகாரிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் பண மழை
தேஷ்முக் பங்களாவில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய போது, பங்களாவில் இருந்தவர்கள் மாடிக்கு ஓடியிருக்கின்றனர். உடனே, போலீசாரும் வேகமாக பின்தொடர்ந்தனர். அப்போது அங்கிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அவர்களை பயமுறுத்தியது. ஒரு வழியாக போலீசார் மாடிக்கு சென்ற போது, நகைகள் மற்றும் பணத்தை பக்கத்து வீடுகளின் மாடிகளில் வீசியதை கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்

சென்னையில்  24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.
வடக்கு மண்டலம் 90031 30104, 
தெற்கு மண்டலம் 90031 30102, 
கிழக்கு மண்டலம் 90031 30101, 
மேற்கு மண்டல மக்கள் 98408 24100 
போக்குவரத்து பிரச்னைகள் 90031 30103
குறுஞ்செய்திகள் 95000 99100 என்ற எண்ணுகளுக்கு அனுப்பலாம்.
சென்னை போலீஸ் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் அவசர இலவச அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும், அவசர தேவைக்கும் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் தகவல்களை தெரிவிக்கலாம்.  (தினகரன்)