வாகனங்களுக்கு இருப்பது போல் யானைகளுக்கும் ஆர்சி புத்தகம் வழங்கும் புதுமை திட்டத்தை கேரள அரசு இன்று முதல் தொடங்குகிறது.
வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நடிகர் ஜெயராம் முதல் இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ் குமார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் தங்கள் வீடுகளில் யானைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். இது தவிர கேரளாவில் சிறிய கோயிலாக இருந்தாலும் கூட திருவிழா நடக்கும்போது அந்த கோயிலில் நெற்றிப்பட்டம் சூடிய யானையின் வீதி உலா கண்டிப்பாக இருக்கும்.






















