Sunday, 18 December 2011

கூடங்குளம் பிரச்னை முற்றுகிறது : மக்களை மதிக்காமல் வன்முறையை தூண்டும் ஜனநாயக அரசு

எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை? 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் ரூ 13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணு மின்நிலையத்தை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் விரைவில் முதல் அணு உலை 2 வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் அணு உலை எதிர்ப்பாளர்களோ, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக வும், அணு மின் நிலையத் தில் உள்ள யுரேனியத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் பதட்டமானநிலை சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, 
‘கடந்த 15ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். போராட்டக் குழுவினர் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை கேட்காமல், கூடங்குளம் அணுமின் நிலைய வரைபடங்கள், ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்த நகல்கள், செலவினத் தொகை பற்றிய முழு விவரங்களை கேட்டுள்ளனர். அவை நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அவற்றை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுமின் நிலைய செயல்பாடை இழுத்தடிக்க முயல்கின்றனர். இதை மத்திய அரசு அனுமதிக்காது.
போராட்டகாரர்கள் மீது போலீசார் இதுவரை சுமார் 160 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
‘போராட்டக் காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பொய் பிரச்சாரம் மூலம் அவர்களை தூண்டி விடுகிறார்கள். திருநெல்வேலி போலீசார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார்.
மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு, கூடங்குளம் விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 
கூட்டத்தில், கூடங்குளம் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சட்டம் & ஒழுங்கு பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் உத்தரவுப்படி எப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை : அவசரம் வேண்டாம்
கூடங் குளம் பிரச்னையில் மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரஷ்ய அதிபருடன் சேர்ந்து அளித்த பேட்டியின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சில வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று நீங்கள் கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. உள்ளூர் மக்களின் அச்சம் நீங்கும் வரை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.
தமிழக நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் உங்களிடம் இது தொடர்பாக நேரில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசு செய்து கொடுத்தது. கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் திருப்தி, என்னுடைய அரசுக்கும், தமிழகத்துக்கும் மிக முக்கியம்.
இதனால், மக்களின் அச்சத்தை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது வரை எவ்வித அவசர நடவடிக்கையும் கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களை கொன்று வல்லரசு ஆகா வேண்டுமா இந்தியா???
சிறு தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் பற்றகுரையாம்??? தமிழ் நாட்டில் தயாரிக்க படும் மின்சாரம் எங்கு செல்கிறது???
போராடும் மக்களின் கண்ணீருக்கும் பட்டினிக்கும் ஜனநாயக நாட்டில் பதில் இல்லை... வன்முறை வழக்கு தான்????
ஜனநாயகத்தை தூக்கிலிட்டு இந்தியா வல்லரசு ஆகா வேண்டுமா???

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம் : கல்லூரி ஊழியர் கண்டுபிடிப்பு

சோலார் மொபைல் சார்ஜர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்ற�லாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.

Saturday, 17 December 2011

இந்தியர் தொடுத்த வழக்கில் லண்டன் ஐகோர்ட் தீர்ப்பு : இங்கிலாந்தில் குடியேற இங்கிலீஷ் பேச வேண்டும்

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி (54), லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், ‘‘என் கணவர் வாலி சாப்தி (57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால், என் கணவருக்கு இங்கிலீஷ் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இன, மொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ‘‘இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை. இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு இங்கிலீஷ் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும் மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம்’’ என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் தயார் : மின்உற்பத்தி தொடங்க கூடங்குளத்தில் தீவிரம்

ரஷ்யாவில் மன்மோகன் சிங் அறிவிப்பு எதிரொலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததை அடுத்து, மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையொட்டி கூடங்குளம் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மத்திய படையையும் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி முதலீட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் முதல் அணு உலை இந்த மாதம் உற்பத்தியை தொடங்க இருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேலாக அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலை இன்னும் சில வாரங்களில் செயல்பட தொடங்கும். 6 மாதங்களுக்கு பின்னர் கூடங்குளம் 2வது அணு உலை செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள், பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை போக்க போராட்ட குழுவினருடன் மத்திய குழுவினர் நெல்லையில் 3 கட்ட பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. போராட்ட குழுவினர் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவில் இதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, மின் உற்பத்தி தொடங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. போராட்டக்காரர்களை சமாளிக்க, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அணு உலையை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாக போராட்ட குழு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிரிமினல் சட்ட திருத்தப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், உதயகுமாரின் அமைப்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாநில அரசின் நிலை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரிடமும் ஆலோசித்த பின்தான் அப்படி சொல்லியிருக்க முடியும். அனைவரிடமும் பேசியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கது” என்றார்.
கூடுதல் அணு உலைகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளதை கண்டித்து கூடங்குளத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை போராட்ட குழுவினர் நேற்று தொடங்கினர். வீடுகளிலும், படகுகளிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது பற்றி பிரதமர் மன்மோகன் பேசவில்லை. இதுகுறித்து இருநாட்டுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனால், 2 வாரங்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று மதியம் போராட்டக் குழுவினர் கூடங்குளத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

நிஜம் என்ன??? : Facebook காதல் : தரையில் உருண்டு, புரண்டு கதறினார் : "பென்டிரைவ் மர்மம்" : பண ஆசையில் அவதூறு

காதல் வழக்கில் கைது : கோர்ட் வளாகத்தில் புரண்டு மருத்துவ மாணவி கதறல்
காதல் வழக்கில் கைது செய்யப் பட்ட மருத்துவ மாணவி திருச்சி கோர்ட் வளாகத்தில் நேற்று தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சியில் கரூர் பை பாஸ் சாலையை சேர்ந்தவர் முருகன் (30). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாட்களுக்கு முன் கோட்டை போலீசில் அளித்த புகாரில், கரூரை சேர்ந்த இளம்பெண் அனுஷா என்ற அபிநயா தன்னை, முன்னாள் அமைச்சரின் மகள் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்து கொள் ளும்படி மிரட்டுகிறார். பல பணக்கார இளைஞர் களிடம் இணையதளம் மூலம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. எனவே பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுதல், ஏமாற்றி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் அனு ஷாவை(23) கைது செய்தனர். நேற்று மதியம் அனுஷாவை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் அனுஷா திடீரென தரையில் உருண்டு, புரண்டு கதறினார்.
இதைக்கண்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அவரிடம் விசாரித்தனர். அனுஷா கூறியது:
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் 2வது மனைவியின் மகள் நான். பிளஸ் 2 வரை கரூரில் படித்தேன். தற்போது சென்னையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறேன். 2 ஆண்டுகள் முழுமையாக முடித்து 3வது ஆண்டு இடையில் நின்றுள்ளேன். அடுத்த ஆண்டில் கல்வியை தொடர திட்டமிட் டிருந்தேன். இதற்கிடையே திருச்சியைச் சேர்ந்த முருகனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முருகன் திருச்சியில் உள்ள பெரிய கட்டுமான நிறு வனத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
இருவரும் காதலித் தோம். பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பல இடங் களுக்கு சென்றுள் ளோம். அதில் நான் கர்ப்பமடைந்த போது, முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். நான் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளேன். இந்நிலை யில் அவர் என்னை திருமணம் செய்யாமல் தவிர்ப்பதற்காக என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
என்னிடம் உண்மையை கூறாமல், திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சென் னையிலிருந்து வரவழைத் தார். நானும் அதை நம்பி வந்தேன். இங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து, கல்லணை அருகேயுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பிரச்னை செய்யாமல் ஓடிவிடு எனக்கூறி அடித்து மிரட்டினர். அதற்கு நான் ஒத்துக் கொள்ளாததால் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். முருகனும், நானும் காதலித்தபோது எடுத்த போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் பதிவுகள், அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என அவர் கதறினார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஜே.எம்.1 கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி இளங் கோவன் முன் ஆஜர்படுத் தினர். அவரது உத்தர வின்பேரில் அனுஷாவை 15 நாள் காவலில் திருச்சி மக ளிர் சிறையில் அடைத்தனர்.
"பென்டிரைவ் மர்மம்"
அனுஷா கூறும்போது, முருகனை காதலித்தபோது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ, செல்போனில் பேசிய பேச்சுகளின் விபரம் உள்ளிட்ட ஆதாரங்களை தனது பென்டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் அவரிடமிருந்த வெள்ளை நிற பென்டிரைவினை போலீசார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, �அப்படி ஒரு பென்டிரைவே அந்த பெண்ணிடம் இல்லை� எனக் கூறினர்.
பண ஆசையில் அவதூறு
அனுஷா மீது புகார் அளித்த முருகன் கூறுகையில், எதேச்சையாக ஏற்பட்ட பழக்கத்திற்குபின் எனது இணையதளம் மூலம் என் குடும்ப வசதியை பற்றி அறிந்து கொண்டு அந்த பெண், பணம் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்புகிறார். என்மீது தவறு இருந்திருந்தால் நானே செட்டில்மெண்ட் செய்திருப்பேன். போலீசில் புகார் செய்திருக்கவிட மாட்டேன் என்றார்.    (Dinakaran)

குளச்சல் : தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்தனர் : டிரைவர் வாலிபர் சடலத்தை மீட்டார்

குளச்சல் அருகே துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் மாயமான வாலிபர் சடலம்
குளச்சல் அருகே 4 நாட்களாக துர்நாற்றம் வீசிய பாழடைந்த கிணற்றில் இருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்க முன்வராத நிலையில் கார் டிரைவர் துணிச்சலுடன் இறங்கி வாலிபர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். 
குளச்சல் அருகே உதியாவிளை சானல்கரையை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ராஜேஷ்(26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் ராஜே ஷின் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 13ம் தேதி முதல் துர்நாற்றம் வீசியது. இதனால் மாயமான ராஜேஷ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் மக்கள் மின்விளக்கை கிணற்றில் இறக்கி பார்த்தனர். அந்த கிணறு 250 அடி ஆழம் கொண்டது என்பதால், சரியாக தெரிய வில்லை.
இது பற்றி குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடம் வந்து, பைனாக்குலர் மூலம் கிணற்றில் பார்த்தார். அப்போது அங்கு மனித உடல் எதுவும் கிணற்றில் இருப்பதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
எனவே கிணற்றுக்குள் இறங்கி சடலம் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குளச்சல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திலும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். போலீசாரும் தீயைணைப்பு துறையினரிடம், கிணற்றில் சடலம் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய வலியுறுத்தினர். ஆனால் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்க முன்வரவில்லை. இதனால் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்தினருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
இதுபற்றி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்சந்திரா, கல்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எஸ்.பி நடவடிக்கையின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடம் வந்தனர். ஆனால் அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முன்வரவில்லை. இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கிணறு தோண்டும் தொழிலாளர்களை தேடி அலைந்தனர். அவர்களும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.
இதனால் போலீசாரும் பொதுமக்களும் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் உடையார் விளையை சேர்ந்த கார் டிரைவர் ஆல்பர்ட்(43) என்பவர் கிணற்றுக்குள் இறங்க முன்வந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விஷவாயு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வாளியில் கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது விஷவாயு இருப்பது தெரியவந்தது. அதனை தண்ணீர் பீச்சி அடித்து அவர்கள் வெளியேற்றினர்.
இதனைத்தொடர்ந்து ஆல்பர்ட்டை கயிறு கட்டி கிணற்றில் இறக்கினர். அப்போது மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதனை சாக்கில் கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். அது மாயமான ராஜேஷின் உடல் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மாயமான வாலிபர் 6 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் அருகே உதியாவிளையில் பாழடைந்த கிணற்றில் சடலத்தை மீட்க தீயணைப்பு துறையினர் இறங்க மறுத்ததையடுத்து துணிச்சலுடன் கிணற்றில் இறங்கிய டிரைவர் ஆல்பர்ட்.
டிரைவருக்கு பாராட்டு
பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 4 நாட்களாக தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்தது. கிணற்றில் இறங்க தீயணைப்பு படையினர் உட்பட யாருமே முன்வர வில்லை. ஆனால் டிரைவர் ஆல்பர்ட் துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார். அவரது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

Friday, 16 December 2011

கருங்கலில் 23-ல் லிம்கா சாதனைக்காக 1500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவையின் இணையதளம் தொடக்கவிழா நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ தலைமை வகித்தார். இணையத்தளத்தை அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா, டாக்டர் சுமித்ரா, கான், ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜேசர் ஜெபநேசர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் பேரவை செயலாளர் டாக்டர் பெர்ஜின் பெனோ நிருபர்களிடம் கூறியதாவது:
குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி வருகிற 23ம் தேதி கருங்கலில் நடக்கிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கலந்துகொள்கின்றனர். விசாகபட்டினத்தில் கடந்த 2009ம் ஆண்டு 1008 கிறிஸ்துமஸ் தாத்தா ஒன்று கூடியதே லிம்கா சாதனை யாக உள்ளது. லிம்கா சாதனைக்காக இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி நடத்துகிறோம். பேரணி கருங்கல் சிஎஸ்ஐ ஆலயம் அருகில் இருந்து தொடங்கி கருங்கல் பஸ் நிலையத்தில் முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் குமரிமாவட்டத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா குழு போட்டியும் நடத்தப் பட்டு பரிசு வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஐக் கிய இளைஞர் பேரவை தலைவர் காட்வின், பொரு ளாளர் ராபின், சட்ட ஆலோ சகர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புதிய "யு ட்யூப் ஸ்கூல்" : வீடியோ பார்த்து படிக்கலாம்

முற்றிலும் கல்வி தொடர்பான வீடியோக்களை மட்டுமே பார்க்கக்கூடிய "யு ட்யூப் ஸ்கூல்" என்ற புதிய இணைய தளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை உடனுக்குடன் வீடியோவாக யாரும் இடம்பெறச் செய்யக்கூடிய வகையில் யு ட்யூப் இணைய தளம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற வீடியோ இணைய தளமான அதில் எல்லா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் பள்ளி கல்வியும் அடங்கும்.
ஆனால், நம்நாட்டில் �ஸ்மார்ட் கிளாஸ்� என்ற பெயரில் இணைய தள வழி கல்வி அளிக்கும் பள்ளிகள் இருந்தாலும், யு ட்யூப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு தடை உள்ளது. ஏனெனில், அதில் குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத விஷயங்களும் இடம்பெறுகிறது. எனவே, நல்ல வீடியோக்க ளை குழந்தைகள் வீட்டு கம்ப்யூட்டரிலோ, ஐபேட் போன்ற கருவிகளிலோ தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதை தவிர்க்கும் வகையில், யு ட்யூப் ஸ்கூல் என்ற பெயரில் இணைய தளத்தை கூகுள் இப்போது தொடங்கியுள்ளது. அதில் பள்ளிக் கல்வி தவிர மற்ற வீடியோக்களை காண முடியாது. இதனால், உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பள்ளி கல்வி தொடர்பான வீடியோக்களை காட்டி பள்ளிகளின் ஸ்மார்ட் கிளாசில் ஆசிரியர்கள் சொல்லித் தர முடியும். ஐபேட் போன்ற தனிப்பட்ட கருவிகளிலும் மாணவர்கள் பயன் பெற முடியும்.
இதேபோல, யு ட்யூப் எஜுகேஷன் என்ற இணைய தளத்தில் இருந்து வீடியோக்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து மாணவர்களுக்கு அளிக்க முடியும். அதில் உள்ள 4.5 லட்சம் கல்வி வீடியோக்கள் யு ட்யூப் ஸ்கூல் இணைய தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? : 3,225 மெகா வாட் உற்பத்திக்கான மின்சார திட்டப் பணிகள் தாமதம்

மின்வாரியத்தின் அலட்சிய போக்கால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006&07ம் ஆண்டில் மொத்த மின்தேவை 10,098 மெகா வாட். அப்போது, மொத்தம் 1 கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர்கள் இருந்தனர். அப்போதைய மின்பற்றாக்குறை 300 மெகா வாட் ஆக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் 2.23 கோடி மின் நுகர்வோர்கள் இருப்பதால், ஒரு நாளின் மின்சார தேவை 10,500 முதல் 12,000 மெகா வாட் ஆக அதிகரித்திருக்கிறது.
அனல், நீர், காற்று உள்ளிட்டவை மூலம் ஏறத்தாழ 10,122 மெகாவாட் மின் உற்பத்தியை மின்சார வாரியம் செய்கிறது. இதில், காற்றாலை மின் உற்பத்தி தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது 2,500 முதல் 3,000 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் ரூ 13 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்சார பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்ட மின்திட்டங்கள், திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் மொத்தம் 10,122 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10,214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 92 மெகா வாட் மட்டுமே மின்வாரியம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது, நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மீதமுள்ள மின்திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்தாமல், பல மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு வருவதே, மின்பற்றாக்குறைக்கு காரணம். இதனால், வெளிசந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 19 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மின்சாரம் வாங்க ரூ 23 ஆயிரத்து 360 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒரு நாள் வருமானம் ரூ 60 கோடி. இதில் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே ரூ 50 கோடி வரை செலவிடப்படுகிறது. இப்படி மின்சாரம் வாங்கவே பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிடும்போது, வாரியம் நஷ்டம் ஏற்படாமல் எப்படி லாபத்தில் இயங்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்டுதோறும் மின் நுகர்வோர் எண்ணிக்கை 9 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிந்திருந்தும், அதற்கான திட்டப்பணிகளை முடுக்கிவிடாமல் இருந்தது, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம். இறுதியாக, வாரியத்துக்கு பெரிய நஷ்டம் என்று கூறி மக்களின் தலையில் கட்டண உயர்வாக விழுகிறது.
இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?
கடந்த 2007ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3,225 மெகா வாட் மின்உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டமிட்டப்படி, இதில் பெரும்பாலான பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மின்நிலையங்களில் தற்போது 75 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில், திட்டமிட்டப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிகள் முடித்து, மே மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். தற்போது, தேதி மாற்றப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையிலேயே மற்றொரு 600 மெகா வாட் கொண்ட உற்பத்தி நிலையத்தில், கடந்த ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இதுவும், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம், திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலையில் உற்பத்தி தொடங்கி இருக்க வேண்டும். இது, கடந்த செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. பின்னர், தற்போது 2வது முறையாக 2012 மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடியில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு, மார்ச்சில் உற்பத்தி தொடங்க வேண்டும். ஆனால், இதற்கான பணிகளும் தாமதமாகவே நடக்கிறது.
மேற்கண்ட திட்டப் பணிகளில் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மொத்த திட்டப்பணிகளும் முடிக்கும்போது, தமிழகத்துக்கு 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையே, அணு மின்நிலையத்தில் பணிகள் முடிக்கும் நிலையில், எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா.? அதன் மூலம் மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.    (Dinakaran)

அரிசி, பருப்பு, பூண்டு விலை குறைந்தது : விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி

விளைச்சல் அதிகரிப்பால் பருப்பு மற்றும் கொத்தமல்லி, பூண்டு, அரிசி விலை குறையத் தொடங்கியுள்ளது. பருப்பு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நல்ல விளைச்சல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கப்பல்களில் இறக்குமதி போன்ற காரணங்களால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ துவரம் பருப்பு ரூ 70க்கு விற்கப்பட்டது ரூ 60க்கும், தான்சினியா துவரம் பருப்பு ரூ 55 லிருந்து ரூ 45 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளது. மேலும், உளுந்தம் பருப்பு ரூ 70 லிருந்து ரூ 60க்கும், உளுந்தம்பருப்பு(பர்மா), ரூ 65 லிருந்து ரூ 55க்கும், பாசிப்பருப்பு ரூ 75 லிருந்து ரூ 65க்கும்; 2ம் ரகம் ரூ 60 லிருந்து ரூ 50க்கும், கடலைப்பருப்பு ரூ 60 லிருந்து ரூ 54க்கும்; 2ம்ரகம் ரூ 55லிருந்து ரூ50க்கும் விற்கப்படுகிறது. புது வரவு அதிகரிப்பு மற்றும் இறக்குமதியால் இந்த விலை வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் கர்நாடகா, ஓசூர் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் புளி முதல் ரகம் கிலோ ரூ 130 லிருந்து ரூ 110; 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80க்கும், வத்தல் முதல் ரகம் ரூ 200 லிருந்து ரூ 160க்கும், 2ம் ரகம் ரூ 170லிருந்து ரூ 120க்கும், கொத்தமல்லி ரூ 70லிருந்து ரூ 60க்கும், மலைப்பூண்டு ரூ 130 லிருந்து ரூ 100க்கும், நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ 140லிருந்து ரூ 110க்கும், 2ம் ரகம் ரூ 110லிருந்து ரூ 80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூபாலி அரிசி கிலோ ரூ 20 லிருந்து ரூ19க்கும், அதிசய பொன்னி ரூ 24 லிருந்து ரூ 22க்கும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ 22லிருந்து ரூ 19க்கும்; 2ம் ரகம் ரூ 20லிருந்து ரூ 17க்கும், பாபட்லா புதுசு ரூ 26லிருந்து ரூ 24க்கும், பாபட்லா பழையது ரூ 30லிருந்து ரூ 28க்கும், வெள்ளை பொன்னி ரூ 38 லிருந்து ரூ 36க்கும், பொன்னி பச்சரிசி ரூ 22லிருந்து ரூ 20க்கும், புது பச்சரிசி ரூ 30லிருந்து ரூ 28க்கும், பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ 85 லிருந்து ரூ 80க்கும்; 2ம் ரகம் ரூ 65லிருந்து ரூ58க்கும், 3ம் ரகம் ரூ 50லிருந்து ரூ 43 ஆகவும் குறைந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து புது அரிசி வரத் தொடங்கியுள்ளதாலும், காஞ்சிபுரம், திண்டிவனம், ஆரணி, செங்கல்பட்டு, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாகவும் அரிசி விலை குறைந்துள்ளது. அடுத்தவாரம் இந்த விலை கிலோவுக்கு ரூ 3 வரை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு : 10ம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க அதிரடி முடிவு

அறிவியலுக்கு மதிப்பெண் தளர்வு
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 25 மதிப்பெண் செய்முறைக்கும், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறையில் 20 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல், கணக்கு பாடங்களில்தான் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். இதனால், அந்த பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண், எழுத்துத் தேர்வில் 15 மதிப்பெண் எடுத்து மொத்தம் 35 மதிப்பெண்கள் அறிவியல் பாடத்தில் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தனியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால், எழுத்துத் தேர்வில் 35 அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்து, செய்முறையில் 20 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தால் தோல்வி தான்.
இந்த புதிய திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்களும் அறிவியல் பாடத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் பாடங்கள் சற்று கடினமாக உள்ளது. இதுதான், மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச்சில் நடத்த தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது.

களியக்காவிளை - நாகர்கோவில் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லுக்கட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களியக்காவிளையில் இருந்து திட்டங்கனாவிளை, தாரப்பழஞ்சி, அதங்கோடு, காப்புக்காடு, நட்டாலம் வழியாக நாகர்கோவில் வரையும் அளவீடு செய்யப்பட்டு ள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக புறவழிச்சாலை அமையும் போது 500க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு என்.எச்.47ல் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் அரசிடம் இருந்து இழப்பீடு பெற பூத்துறையை அடுத்த கல்லுக்கெட்டியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்புத்துறை அலுவலகத்திற்கு தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணத்துடன் அலுவகத்திற்கு வந்தனர்.
அப்போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புறவழிச்சாலைக்கு எதிராக பேராட்டம் நடத்தி வரும் என்.எச். 47 பாதுகாப்பு நடவடிக்கை குழு தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலீப், லெட்சுமி நாரா யணன், புறவழிச்சாலை நலச்சங்க தலைவர் ஜஸ்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றதை அடுத்து நெல்லையில் இருந்து வந்த சிறப்பு தாசில்தார் மற்றும் அதி காரிகளிடம் இழப்பீட்டு நடவடிக்கைக்காக தங்கள் நில ஆவணங்களை காண்பித்தனர். (Dinakaran)

உயர் நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு : அறிக்கையில் குட்டிகரணம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொண்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்ப டாது என்றும் நில நடுக்கம் காரண மாக அணை உடைந்தால் கூட அதிலிருந்து வெளி யேறும் தண்ணீ ரை இடுக்கி, குள மாவு, செருதோணி ஆகிய அணை கள் தாங்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், அரசு சார்பில் வேறொரு அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும� இதற்காக 4 பேர் அடங்கிய அமைச்சரவை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அட்வகேட் ஜெனரலின் கருத்துக்கு நேர் எதிரான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களை பாதிக்கும். அணை யில் 136 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் கூட பாதுகாப்பு இல்லை. அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை தாங்கும் சக்தி இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளுக்கு கிடையாது. ஏனென்றால் இந்த இரு அணைகளுக்கும் மதகு இல்லை. குளமாவு அணை க்கு மட்டுமே மதகு உள்ளது. முல்லை பெரியாறு அணை யில் நடைபெற்ற பலப்படுத்தும் பணிகள் போதுமானதாக இல்லை. அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முதல்வர் பதவியை தராவிட்டால் : பாஜ தலைவரிடம் எடியூரப்பா மிரட்டல்

கர்நாடகாவில் விபரீதம் நடக்கும்
கர்நாடக பாஜ.வில் தனக்கு ஆதரவாக 72 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இவர் மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வர் பதவி அல்லது மாநில பாஜ தலைவர் பதவி பெறுவதில் குறியாக இருக்கிறார். அதே நேரம், "எனக்கு பதவி ஆசையில்லை. கர்நாடகாவில் கட்சியை வழி நடத்துவது பற்றியும், மேலவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்க டெல்லி வந்தேன்" என்று எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் கட்கரியை சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கியிருந்தும் பதவியில் நீடிக்கிறார்கள். எனவே, மீண்டும் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்." பதவி வழங்காத நிலையில் கட்சியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன். இதனால் கர்நாடக பாஜ.வில் விபரீதங்கள் ஏற்படும்� என்று எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியையும் எடியூரப்பா சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, அத்வானியிடம் எடியூரப்பா தனது கோரிக்கை குறித்து விளக்கி கூறினார். இந்த சந்திப்பின்போது 10 எம்.பிக்கள் உடன் இருந்தனர். தனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்கரியிடம் எடியூரப்பா கொடுத்துள்ளார். (Dinakaran)

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.

கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை : சேலத்தில் பரபரப்பு

சேலம் அம்மாபேட்டையில் தனியார் கோயிலுக்குள் எஸ்.சி., மக்கள் நுழையக்கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திரமூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோயில் உள்ளது. 1986ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணா நகர், வித்யா நகர், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், திடீரென்று நேற்று முதல் பச்சப்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீஸ் கோயில் கதவுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மறு தீர்மானம் நிறைவேற்றும் வரை கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கோயில் முன் திரண்டுவந்து தேவஸ்தான நிர்வாகிகளைக் கண்டித்து கோஷம் போட்டனர். தடை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பச்சப்பட்டியைச் சேர்ந்த சித்ரா, சீரங்காயி, சுகுணா, ஜானகிராமன் ஆகியோர் கூறியது: இத்தனை ஆண்டுகளாக அனைத்து மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக எங்களிடமும் நன்கொடை வசூலித்துள்ளனர். இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது ஜாதி மோதலை உருவாக்குவது போல உள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயிலின் அர்ச்சகர் கண்ணன் கூறுகையில், “கோயில், நிர்வாகிகள் நேற்று இரவு 11 மணியளவில் கூடி, இந்த முடிவைஎடுத்துள்ளனர். இதுபற்றி, தேவஸ்தானத்தின் சிறப்பு ஆலோசகருக்கும் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை,’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Thursday, 15 December 2011

விடாது கருப்பு : வடிவேலுவை துரத்துகிறது

வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி பெண் மனு
மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் வேலுச்சாமி, நடிகர் ராஜ்கிரணிடம் முதலில் பணியாற்றினார். அப்போது நடிகர் வடிவேலுவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், வடிவேலுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வடிவேலுவிடம் மேனேஜராக வேலைக்கு சேர்ந்த என் கணவர், 2009ல் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை செய்யாமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர். இதில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உள்துறை செயலர், டிஜிபிக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி 1 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன், அரசு சார்பில் வக்கீல் ராஜேஸ்வரன் ஆஜரானார்.  (tamil murasu)

Illegal alcohol kills 126 in West Bengal : Dead likely to increase


More than 100 people have been killed by contaminated homemade alcoholic spirits in the Indian state of West Bengal.
Most of the dead are poor manual labourers, rickshaw pullers and hawkers who drank the "country liquor" at a series of makeshift bars all supplied by the same illicit distillery in the town of Diamond Harbour.
Scores more are being treated in hospital and the death toll is expected to continue rising.
"I had purchased two half-litre pouches for 10 rupees while returning home last evening and drank the liquor before dinner. After midnight I felt a pain in my throat. Then I started vomiting," Julfikar Saddar, 35, told the Calcutta Telegraph newspaper from his hospital bed.
This kind of poisoning is frequent in India where local police and inspectors regularly take bribes to turn a blind eye to the production and sale of illicit alcohol, also known as desi daroo. Most cases go unreported.
In 2009, 130 people were killed by illegally produced alcohol in a similar incident in the western state of Gujarat.
Mamata Banerjee, the chief minister of West Bengal, told local media that "consumption of illicit liquor is a social disease" that "has to be eradicated".
Four people are under arrest and 10 illegal shops selling alcohol have been demolished in Diamond Harbour, officials have said.
Angry locals are reported to have destroyed the distillery blamed for the tragedy.
Local residents said one shop was opposite a police station but had been trading openly.
A litre of "chpeti", the local spirit, costs 10 rupees. A manual labourer in India usually earns around 150 rupees for a day's work. The drink is often sold door-to-door by salesmen on bicycles.
Alcoholism is a significant problem in both rural and urban areas.
The state of West Bengal is one of the poorest in India and suffers from some of the deepest corruption.
This week a fire in a hospital killed 90 people in the state capital of Kolkata. It is believed to have started in a carpark under an annex that was being used as a store in breach of local regulations.

உரிமையை விட்டுத்தர மாட்டோம் : முல்லை பெரியாறு அணை விவகாரம்

சட்டசபையில் ஜெ. கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரளா தடையாக இருக்கக் கூடாது என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக தொழிலாளர்கள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடியாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையே, கேரள சட்டசபையில் கடந்த 9&ம் தேதி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் போராட்டம் வலுத்தது. தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
கேரளாவை போல தமிழக அரசும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, முல்லை பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 15&ம் தேதி நடக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 10 மணியில் இருந்தே அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்த வண்ணம் இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, 10.55க்கு சபைக்குள் வந்தார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் வந்தனர். முதல்வருக்கு ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு முதல்வரும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்தும் அவைக்கு வந்தார்.
சரியாக 11 மணிக்கு அவை தொடங்கியது. சபாநாயகர் ஜெயக்குமார், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சொ.கருப்பசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் படித்தார். முதல்வர் உள்பட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 11.20 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேரவை விதி 35-ஐ தளர்த்தி, அரசு அலுவல்களை இன்று எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்த சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். ‘முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில், நீர்ப்பாசன சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு தடையாக இருக்கக் கூடாது’ என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து பேசினர். முடிவில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடவுள்களின் சொத்து கணக்கு : ஏழுமலையானுக்கு அடுத்து காளஹஸ்தி சிவன்தான் பணக்காரர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கோயில்களின் உண்மையான சொத்து கணக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இது குறித்து நீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களை தவிர்த்து, மற்ற அனைத்து கோயில்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வருமானத்தின் அடிப்படையில் கோயில்கள் வகைப்படுத்தப்பட்டன. ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்துக்கும் மேல் வருமானம் உளள 7 கோயில்கள் 6&எ எனவும், அதற்கு குறைவான வருமானம் உள்ள 33 கோயில்களை 6&பி எனவும், இதை விட குறைவான வருமானமுள்ள கோயில்களை 6&சி எனவும், 33 மடங்கள் 6&டி எனவும் வகை பிரிக்கப்பட்டுள்ளன. 3,073 கோயில்களில் 161 மட்டுமே இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவை தர்மகர்த்தாக்கள், பரம்பரை தர்ம கர்த்தாக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் மொத்தம் 103.321 கிலோ தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 26.50 கோடி. மேலும், 15,068 கிலோ 330 கிராம் வெள்ளி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8.50 கோடி.
இதில், திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி சிவன் கோயிலுக்குதான் அதிக சொத்துகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கோயிலுக்கு 30 கிலோ தங்கமும், 13,809 கிலோ வெள்ளியும் உள்ளன.

தந்தை & மகன் கைது : 3 கோடி திருடி சொந்தமாக கல்வி அறக்கட்டளை

வேலை செய்த அறக்கட்டளையில்
திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசா�ரதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத் தார். அதில், அய்யப்பன்தாங்கலில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தேன். இங்கு காந்தி என்ற முத்துகிருஷ்ணன்(55), அவரது மகன் விஜயகுமார் (33) ஆகியோர் வேலை செய்து வந்தனர். 
இந்நிலையில் அறக்கட்டளை வரவு& செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ 3,40,88,517 மோசடி செய்து திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து காந்தி, விஜயகுமாரிடம் விசாரித்தால் முறை யான பதில் அளிக்க வில்லை. மேற்கொண்டு விசாரித்ததில் என்னுடைய கல்வி அறக்கட்டளை பணத்தை மோசடி செய்து திருடி காந்தி தன்னுடைய பெயரில் பல்வேறு இடங்களில் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி விட்டார். இதற்கு அவரது மகன் விஜயகுமார் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் தலைமையில் எஸ்ஐக்கள் காளிதாஸ், கோபாலகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த காந்தி, விஜயகுமாரை நேற்று போலீசார் அய்யப்பன் தாங்கல் வழியாக வெளியூர் தப்ப முயன்றபோது கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சைதாப்பேட்டை குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஞ்சாப் விநோதம் : மைனஸ் மதிப்பெண் பெற்ற மாணவர் வெற்றி

பஞ்சாப் நீதித்துறைக்கு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் மைனஸ் 10 மதிப்பெண்கள் பெற்ற பழங்குடியின மாணவர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில நீதித்துறையில் காலியாக உள்ள துணை நீதித்துறை அதிகாரி பதவிக்காக, பஞ்சாப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது.
இந்த தேர்தல் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள பிரதான தேர்வை எழுத, கட் & ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டவர், விளையாட்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என 13 பிரிவுகளின் கீழ் 979 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவுக்கான கட்&ஆஃப் மதிப்பெண், அதிகபட்சமாக 315 எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பழங்குடியினருக்கான பிரிவில் 6 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் மஞ்ஜிந்தர் கவுர் என்பவர் அதிகபட்சமாக 285 கட்&ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், தஜிந்தர் சிங் என்ற மாணவர், முதல்நிலை தேர்தவில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, மைனஸ் 10 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இவர், 23 கேள்விகளுக்கு சரியான பதிலும், 102 கேள்விகளுக்கு தவறான பதிலும் எழுதியுள்ளார்.
இருப்பினும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்ற சிறப்பு பிரிவின் கீழும் இவர் ஒருவர் மட்டுமே வருகிறார். எனவே, வேறுவழியின்றி பிரதான தேர்வுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது யாரும் கிடைக்கவில்லை.

"ரூ.200 கட்டினால் 50 ஆயிரம் கடன்" : பொதுமக்கள் சிறைவைத்த அறக்கட்டளை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் படூர்குழி பகுதியை மையமாக கொண்டு அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், தங்களிடம் ரூ.200 கட்டினால் 3 மாதத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 18 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அணுகியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு ஊராட்சியில் ஒரு மண்டபத்தை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்த குழுவை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் லோன் தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மக்களை ஊராட்சி மன்ற மண்டபத்துக்கு வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் ரூ.200 முதல் 300 வரை வசூல் செய்துள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த ரசீதில் உள்ள பதிவு எண்கள் பலவிதமாக இருந்தது. போன் எண்ணும் இல்லை.
இதுகுறித்து மக்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 4 பேரையும் மண்டபத்திலேயே சிறைபிடித்தனர்.
தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் அவர்கள் வந்த காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது தாங்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொங்கலுக்கு தென்மாவட்டங்களுக்கு முன்பதிவு தொடங்கியது : 700 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் 700 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களுக்கான முன் பதிவு தொடங்கிவிட்டது.
அடுத்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை பொங்கல் திருநாள் தொடங்குகிறது. தொடர்ந்து 17ம் தேதி வரை விடுமுறை இருக்கிறது. இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஏராள மான மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களே நம்பி யுள்ளனர்.அரசு விரைவு போக்கு வரத்து கழகம் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள் ளிட்ட பல்வேறு இடங்க ளு க்கு 50 ஏசி பஸ்கள் உட்பட மொத்தம் 956 பஸ்களை இயக்குகின்றன. இந்நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தென்மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்களை இயக்கு கிறது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 500 சிறப்பு பஸ்களையும் இயக் குகிறது. இதுதவிர கோவை, நெல்லை, கும்ப கோணம் போக்குவரத்து கழகங்கள் 100 சிறப்பு பஸ் களையும் இயக்கவுள்ளது.
இதுகுறித்து போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
மக்களின் தேவைக்கு ஏற்ப பொங்கல் பண்டி கைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ஒரு மாதத் திற்கு முன்பு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்யும் பஸ் களில் முன்பதிவு செய்யப் படும். அந்த வகையில் தென்மாவட் டங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. தீபாவளி ஒரு நாள் என்பதால் மக்கள் கூட்டம் ஒரே நாளில் குவிந்துவிடும். ஆனால் பொங்கல் 4 நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் படிப்படியாக வரும். எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் வரிசையாக இயக்கப்படும்.
தென்மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகள் சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றி யூர், தி.நகர், பிராட்வே, தாம் பரம் ஆகிய பஸ்நிலையங் களில் முன்பதிவு செய்ய லாம். இதுதவிர மாவட் டங்கள் தோறும் 35க்கும் மேற்பட்ட முன்பதிவு மைய ங்கள் உள்ளன. மேலும் விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளத் தில் உள்ள இ&டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய லாம். மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக வரும்போது டோக்கன் கொடுக்கப்படும். டோக்கன் கட்டணம் ரூ.5, ஏசி பஸ் களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

School 'asks' 840 students to buy iPads

Podar International School, Santacruz wants to introduce apple iPad2 for students of Std VI to XII; some parents feel that the Rs 40,000 expense is unnecessary.


"We moved from blackboards to interactive boards and from there to laptops and now, it is the iPad2."  -” Vandana Lulla, Director, Podar International School.
The government may be patting itself on the back for creating the world's cheapest, Android-based tablet Aakash at not more than Rs 3,000, but the homegrown gizmo is clearly not the Apple of this posh city school's eye. 

The middle and high school education at Podar International School in Santacruz seems ready to integrate Steve Jobs' legacy in daily learning. In a recent circular dated December 9, the school management informed parents that it has decided to introduce iPad2 in classrooms from the next academic year. While some parents welcomed the move, others feel the fancy tablet is not feasible for children.

Some parents have their reservations about the concept. K Mahesh (name changed), a parent of a pupil at Podar school, said, "I was a student once and I know what education is. If you change the syllabus, that is digestible. But if you change the system with some weird logic, it is problematic. I want my kid to follow the existing method of education that millions in this country are following, and setting a benchmark for others. I am not against the use of iPad. But I do no find it feasible for my kid."

Lulla said, "After observing how gadget-savvy students have become and how they are familiar with iPads, I took the initiative to introduce the iPad2. It will help students to retain the content. They can download as many textbooks as they want. Further, a research by a laptop manufacturing company concluded that more use of technology has improved the performance of students in subjects like Biology, Chemistry, History, and Earth Science."

Expert says


Jayant Jain, president of Forum For Fairness in Education and All India Federation of Parent Teacher Association, said, "If the school is so keen to bring in technology, parents should be given a choice to buy any company's tablet. But nowhere did the circular mention this. Nor did it say that parents who do not wish to buy their child an iPad2 could learn from interactive boards. This implies that it is mandatory for all. Also, the parent will have to bear the cost if the child drops and damages the expensive gadget. They are in a learning process, so why can't they be given cheaper tablets which can be updated by the school." 

Numbers
On an average, there are 30 students in one class in Podar and each class has four divisions. As such, there are approximately 840 students in the school from grade VI to XII.