Monday, 9 January 2012

தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை விவகாரம் : தவறான சிகிச்சையால் மருமகள் பலி

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டராக சேதுலட்சுமி பணியாற்றினார். தனியாக சுபம் மருத்துவமனை நடத்தி வந்தார். இவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நித்யா மரணம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யாவின் கணவர் மகேஷ் நண்பர்களுடன் சென்று கடந்த 2ம் தேதி டாக்டர் சேதுலட்சுமியை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில் மகேஷ் தாயும், நித்யாவின் மாமியாருமான கனகலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
என் மருமகள் நித்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளின் கால்கள் வீக்கமாக இருந்ததால், சுபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் சேதுலட்சுமி பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, பிரஷர் அதிகமா இருக்கிறது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியபடி ரூ 10 ஆயிரம் பணம் செலுத்தினோம். அதன் பின், நித்யாவை பெட்டில் படுக்க வைத்தனர். நள்ளிரவு 2 மணிக்கு நர்ஸ் வந்து பரிசோதனை செய்து பார்த்தார். நித்யாவுக்கு பிரஷர் குறையவில்லை என்ற அவர், டாக்டரிடம் போனில் பேசிவிட்டு நித்யாவுக்கு 3 ஊசிகளை போட்டார். அதன்பிறகு, நித்யாவின் கண்கள் உள்ளே சென்றன.
நித்யாவுடன் மகேஷ்
நித்யா, "மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறி வாயை திறந்து திறந்து மூடினாள். இதை நர்சிடம் கூறினோம். மயக்க ஊசி போட்டால் அப்படித்தான் இருக்கும் என நர்ஸ் கோபமாக தெரிவித்தார். அதிகாலை 5 மணிக்கு ஆபரேஷன் செய்ய நித்யாவை டாக்டர் அழைத்து சென்றார். 8 மணிக்கு பிறகு வெளியே வந்த டாக்டர், நித்யாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
உள்ளே சென்று பார்த்தபோது மருமகள் நிர்வாண நிலையில், வயிறு கிழிக்கப்பட்டு கிடந்தாள். வயிற்றில் தையல் கூட போடவில்லை. அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். அங்கிருந்த டாக்டர்கள் பார்த்துவிட்டு, உங்கள் மருமகள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார். ஏதோ தேவையில்லாத மருந்துகளை கொடுத்து என்னுடைய மருமகளையும், குழந்தையையும் டாக்டர் கொன்று விட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த என் மகன் டாக்டரை 2ம் தேதி கொலை செய்தான். அவன் 8 மாதம் தான் திருமண வாழ்க்கை வாழ்ந்தான். 6ம் தேதி மகனை ஜெயிலில் போய் பார்த்தோம். என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அழுது கொண்டே கூறினான். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். உதவுவதற்கு கூட யாரும் இல்லை. நாங்கள் எங்கே போவது. தமிழக முதல்வர்தான், என் மகனை மன்னித்து வெளியே விட வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுதார். பேட்டியின் போது கனகலட்சுமி கணவர் ராஜபாண்டியன் உடனிருந்தார்.
பொதுநலன் காவலர்கள் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "மரணமடைந்த நித்யாவின் குடும்பத்திற்கு சுபம் மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத்துறை இணைந்து ரூ 10  லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். நித்யாவின் மரணத்தின் உண்மையை அறிய நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த சம்பவத்தின் உண்மையை தமிழக முதல்வருக்கு மனுவாக கொடுத்துள்ளோம்” என்றார்.
தடை விதிக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. 99 சதவீதம் அரசு டாக்டர்கள் வெளியில் பணியாற்றுகின்றனர். இதனால், சிகிச்சை பலனின்றி ஏராளமான நோயாளிகள் இறக்கின்றனர். மத்திய அரசில் பணி புரியும் டாக்டர்கள் வெளியில் பணியாற்ற கூடாது என்று சட்டம் உள்ளது. இதேபோல், அரசு டாக்டர்கள் தனியாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

அதிர்ச்சி தகவல்கள் : மாணவர்களிடம் பரவும் புதுவித போதை பழக்கம்


பஞ்சர்ஒட்ட பயன்படும் சொல்யூசன்
ரப்பர் டியூப்புகளை ஒட்ட வும், பஞ்சர் ஒட்டவும் பயன்படும் சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும், புதுவித பழக்கம் மாணவர்கள் சிலரிடம் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளியில் இருந்து ஏராளமான சொல்யூசன் காலி டியூப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி விட்டு வீசி எறிந்த காலியான பசை டியூப்புகள்.
குமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே சமீப காலங்களாக புது வித போதை பழக்கம் பிரபலமாகி வருகிறது. வழக்கமாக சிகரெட், போதை பாக்குகள், புகையிலை என பயன்படுத்தும் மாணவர்கள் சிலர், இப்போது கெமிக்கல் வகைகளை போதைக்காக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ரப்பர் டியூப்புகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்யூசனை தண்ணீரில் கலந்து குடிப்பது, தீயில் வாட்டி பின்னர் சொல்யூசன் பேஸ்டை கையில் வைத்து நுகர்ந்து பார்ப்பது என்பன போன்ற செய்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திய சில நிமிடங்கள் போதை அப்படியே தலைக்கேறி நிற்கும் என்பது இதை பயன்படுத்தி பழக்கப்பட்ட மாணவர்கள் சிலர் , சக மாணவர்களிடம் சொல்லும் வாக்கு மூலமாக இருக்கிறது. போதை ஏறியதற்கான எந்த வித மணமும் இல்லாமல் இருப்பதால் இதை பயன்படுத்துபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பள்ளி இடைவேளை நேரத்தில் கூட சில மாணவர்கள் வாடிக்கையாக பயன்படுத்துகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இது போன்று சொல் யூசனை பயன்படுத்தி போடப் பட்ட காலி டியூப்புகள் கழிவறை மற்றும் பள்ளி வளாகங்களில் ஏராள மாக கிடப்பதாக தகவல் வந்ததன் பேரில், பொதுமக்கள் சிலர் நேற்று அந்த பள்ளிக்கு சென்று அவற்றை கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன், பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவற்றை கைப்பற்றினர். நேற்று (ஞாயிறு) பள்ளி விடுமுறை என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடிய வில்லை. இன்று காலை இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள் ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள்ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
மூளையை பாதிக்கும்
இது தொடர்பாக அருமநல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது :
வழக்கமாக கெமிக்கல் கலந்த பொருட்களை போதைக்காக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஷூ பாலிஷை கூட தண்ணீரில் கலந்து குடித்து, போதையை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கெமிக்கலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் சிந்தனை திறன் குறைந்து ஒரு மன நோயாளியாக கூட மாற்றி விடுவர். எனவே இது போன்ற பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஆகும் என்றார்.  (Dinakaran)

Saturday, 7 January 2012

2 எஸ்.ஐ. 2 போலீசார் கைது 3 போலீசார் தப்பி ஓட்டம் : மதுரை ஓட்டலில் சூதாட்டம்

மதுரையில் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 போலீசார் தப்பிச் சென்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் உத்தங்குடி சந்திப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்பி அஸ்ரா கர்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சின்னப்பாண்டி தலைமையில், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்பட பலர் இடம் பெற்ற தனிப்படையினர் நேற்று நள்ளிரவில் குறிப்பிட்ட ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு அறையில் 12 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சிக்கியவர்களில் பலரும் போலீசார் என தெரியவந்தது. இதனால் ரெய்டுக்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் ஸ்டேஷன் எஸ்.ஐ. கூத்தபெருமாள்(57), திலகர் திடல் ஸ்டேஷன் எஸ்.ஐ. கருப்பையா(53), திலகர் திடல் போக்குவரத்து பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணியன்(42), எஸ்எஸ் காலனி ஸ்டேஷன் போலீஸ்காரர் பாலமுருகன்(46), லாட்ஜ் உரிமையாளர் வேலு(51), ஜேம்ஸ்(42), ராஜேந்திரன்(38), தர்மர்(50), வீரையா(47) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பள கணக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் தனுஷ், திலகர் திடல் ஸ்டேஷனில் பணியாற்றும் அசோக், திடீர் நகர் ஸ்டேஷனில் பணியாற்றும் ரவி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கைதான 9 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சூதாட்ட வழக்கில் போலீசாரே சிக்கியுள்ளதும், ஒரே நேரத்தில் 7 போலீசார் சிக்கியதும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை : நள்ளிரவில் லஞ்சம்: தாசில்தார் கைது

மணல் குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க நள்ளிரவில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குளித்தலை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மோகன். மணல் குவாரி நடத்தி வருகிறார். இவரது மணல் குவாரியின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதில் சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் நீண்ட நாள் ஆகியும் மோகனுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து மோகன் நேற்று காலை குளித்தலை தாசில்தார் நேருவை நேரில் சந்தித்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். இதற்கு தாசில்தார் நேரு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்றிரவு குளித்தலையில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் தாசில்தார் நேருவின் வீட்டுக்கு மோகன் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தாசில்தார் நேரு, மோகனிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை வாங்கினார்.
அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதி மற்றும் போலீசார் நேருவை கையும் களவுமாக கைது செய்தனர். அதன்பின் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆசனவாயில் மறைத்து 1400 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் : அயன் படமா??

கொச்சி விமானநிலையத்தில் 1400 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த இலங்கை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து நேற்று கொச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானம் கொச்சியில் தரை இறங்குவதற்கு முன்பே விமானநிலையத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் தங்க பிஸ்கட்டுகள் எதுவும் சிக்கவில்லை. சோதனைக்கு அந்த நபர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தார். பல மணிநேரம் சோதனை நடத்தியும் அந்த நபரிடமிருந்து எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை.
ஆனால் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மிகவும் நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்திருந்ததால் அந்த வாலிபரை கூடுதல் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டுசென்றனர்.
மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தியபோது அந்த வாலிபரின் ஆசனவாயில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை மருத்துவர்களின் உதவியுடன் வெளியே எடுத்தபோது மொத்தம் 14 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடை கொண்டதாகும். மொத்த எடை 1400 கிராம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த ஆசாமியின் பெயர் அல்தாப் சாகுல் அமீது (47). கேரளாவிலிருந்து கிராம்பு, ஏலக்காய் உட்பட நறுமணப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்லும் இவர், அங்கிருந்து தங்க பிஸ்கட்டுகளை இந்தியாவுக்கு கடத்துவது வழக்கம்.
இதுவரை 13 முறை இவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தியுள்ளார். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய கடத்தல் புள்ளிக்காகவே தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாகவும், ஒரு முறைக்கு விமான டிக்கெட் போக 10,000 ரூபாய் தனக்கு கிடைக்கும் என்று அல்தாப் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அல்தாப்பை தீவிர விசாரணைக்குப் பின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
சென்னையை சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிக்கும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

பட்டாசு மேளம் அடிக்கும் விவசாயிகள் : நெற்பயிர்களை நாசமாக்கும் படர் குருவிகளை விரட்ட

குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்களில் பால் வடியும் பருவம் ஆகும். இந்த சமயங்களில் படர்குருவிகள் மொத்தமாக வந்து பயிர்களில் உள்ள பால்களை உறிஞ்சி சென்று விடும். இப்படி உறிஞ்சி சென்று விட்டால் அந்த பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் கருகி விடும். இதையடுத்து படர் குருவிகள் வருவதை தடுக்க, விவசாயிகள் சில நூதன வழிகளை கையாள்வது வழக்கம்.


இதே போல் வடசேரியில் உள்ள வயல்களில் தற்போது நெற்பயிர்கள் பால் வடியும் பருவத்தில் உள்ளன. இதனால் படர் குருவிகள் மொத்தமாக வருவதை தடுக்க, விவசாயிகள் அதிகாலையிலேயே பட்டாசுகள் கொளுத்தி யும், மேளம் அடித்தும் விரட்டுகிறார்கள். ஒரு வயலில் இருக்கும்போது பட்டாசு கொளுத்தினால் அடுத்த வயலுக்கு குருவிகள் சென்று விடும். இதனால் தொடர்ந்து பட்டாசு கொளுத்த வேண்டும். இதே போல் டப்பாவை கழுத்தில் கட்டிக்கொண்டு மேளம் போல் தொடர்ந்து அடித்து கொண்டே வயல்களில் செல்கிறார்கள்.
இது குறித்து வடசேரியை சேர்ந்த விவசாயிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோர் கூறும்போது, படர் குருவிகள் மொத்தமாக, மொத்தமாக வந்து வயலில் இறங்கும். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் வருவது உண்டு. இவைகள் நெற்பயிர்களில் இருக்கும் பாலை உறிஞ்சி சென்று விடுவதால், தொடர்ந்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். இதனால் தான் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றனர்.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பில் : ரூ 50 க்கு மேல்

செல்போனில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி விரிவான பில் பெறலாம் என்று டிராய் அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சம் ரூ 50 கட்டணம்.
இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்", வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் 2012ல் கூறியிருப்பதாவது:
செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் போன் நிறுவனங்கள் விரிவான பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் ரூ 50 கட்டணத்தில் வாடிக்கையாளர் இதை விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் போன் நிறுவனம் பில் அளிப்பது கட்டாயம். கட்டணம் செலுத்தி பெறும் அழைப்புகள் விவரம், நேரம், நிமிடங்கள், கட்டணம் ஆகிய விவரங்கள் மட்டுமின்றி வாடிக்கையாளரின் கட்டண திட்டம், கணக்கில் மீதமுள்ள தொகை, மதிப்பு கூட்டு சேவை விவரம் ஆகியவற்றை இலவசமாகவும் போன் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் வசதிக்காக கட்டண வவுச்சர்களும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளான், டாப் அப் மற்றும் ஸ்பெஷல் டேரிப் ஆகியவை அவை. இதனால், ஏராளமான கட்டண திட்டங்கள், டாப் அப் ப்ளான்கள் வாடிக்கையாளரை குழப்புவதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

உம்மன்சாண்டி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுப்பாடு தமிழகத்திற்கு வழங்கப்படாது

திருவனந்தபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் பின் முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், “முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையின் கட்டுப்பாடு தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுப்பாட்டை கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூட்டாக ஏற்கும். இது குறித்து உச்சநீதிமன்ற அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவில் 6ம் தேதி(நேற்று) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
உம்மன்சாண்டியின் இந்த பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனது கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்தை தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டி, அணைக்கு கூட்டு கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறவில்லை என்று பல்டி அடித்தார். இது தொடர்பாக அவர் கொச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்திருப்பதாக அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள் ளன. ஆனால் நான் அவ்வாறு கூறவே இல்லை. புதிய அணை கட்டும் போது அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்பான கட்டுப்பாடு குறித்துத்தான் நான் கூறியிருந்தேன். சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு ஆகிய அணைகளிலும் இதே போல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டியே கூறினேன். ஆனால் பத்திரிகைகள் தவறாக அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்கப்போவதாக நான் கூறியதாக பிரசுரித்து விட்டன. புதிய அணை கட்டினால் அணையின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க கேரளாவிடம்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் காய்கறி விலை குறைவு : அமெரிக்க மாணவிகள் பேட்டி

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று அமெரிக்க மாணவ, மாணவிகள் ஆய்வு நடத்தினர்.
அமெரிக்காவின் இதாக நகரில் அமைந்துள்ள கார்னல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நார்ப்பொருள் அறிவியல் துறை, வேளாண்மை திட்டங்கள் மேம்படுத்தும் துறை, பூக்கள் விற்பனை மேம்படுத்தும் துறை, விளைபொருட்களின் தர மேம்பாட்டு துறை உள்ளிட்ட 4 துறைகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் மற்றும் 6 பேராசிரியர்கள் கடந்த 2ம் தேதி முதல், வரும் 17ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
நேற்று முன்தினம் கோவை வேளாண்மை பல்கலைக்கு வந்த இவர்கள் அங்கு அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். சர்வதேச வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி என்ற பாடத் திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு பயிற்சிக்காக நேற்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பயிற்சியில் உழவர் சந்தையில் என்னென்ன காய்கறிகள், பழங்கள் உள்ளன. காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்வது, உழவர்கள் எப்படி நுகர்வோரிடம் நேரிடையாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறிகளின் தரத்தினை எவ்வாறு அறிவது, எந்தெந்த காய்கறிகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வது, மற்ற விற்பனை மையங்களைவிட உழவர் சந்தையில் எப்படி குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது, உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை நுகர்வோர் போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
ஆச்சரியமாக இருக்கு...
கார்னல் பல்கலை. மாணவிகள் சூசன்னா, ஜெசிகா, எலிசபெத், ஜோகில் ஆகியோர் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள கடைகளில் இந்தியாவில் உள்ளது போல விவசாயிகள் நேரடியாக வந்து காய்கறிகளை விற்பனை செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்தனி கடைகள் இருக்கும். ஆனால், இங்கு உழவர் சந்தையில் ஒரே கடையில் பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தனையும் புதுசாக (ப்ரெஷ்) உள்ளது. ஆனால், அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் காய்கறிகளின் விலையை காட்டிலும், அமெரிக்காவில் காய்கறிகளின் விலை அதிகளவில் உள்ளது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு : மீன் பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை

‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது’ என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக மீனவர்களுக்கு கப்பற்படை உயர் அதிகாரி மேற்பார்வையில், கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளர், கடலோர காவல் படை துணை இயக்குனர் ஜெனரல், வெளியுறவு செயலாளர் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இயக்குனர் தீபக்மித்தல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா & இலங்கை இடையே மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தம் 1976ல் ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் 13வது கடல் மைலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், அங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமம் கிடையாது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை, மீன் பிடி உரிமையாக தவறாக நினைத்து செயல்படுகின்றனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 
பின்னர், மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Friday, 6 January 2012

பெற்றோர் எதிர்ப்பு : பிளஸ் 2 காதல் ஜோடி ஊட்டியில் விஷம் குடித்தனர்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் ஊட்டியில் விஷம் குடித்தனர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே புல்வெளியில் ஒரு இளம்பெண் ணும், வாலிபரும் படுத்து கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நள்ளிரவு இருவருக்கும் மயக்கம் தெளிந்தது.
அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் மேலமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், கீழமுடிமானை சேர்ந்த 18 வயது இளம் பெண் என்பது தெரியவந்து. இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இது இருவரது பெற்றோருக்கும் தெரியவர ‘படிக்கிற வயசுல காதலா’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த இருவரும், கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி வந்தனர். இருவரையும் காணாமல் பெற்றோர் தவித்தனர். போலீசார் இவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஊட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இருவரும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ் 2 காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட பக்கிகளா காதல்னா என்னப்பா???
முதல்ல நல்ல படுச்சு வேலைக்கு போ!!!! நல்லா புடுச்ச பொண்ண பாரு!!!!! கல்யாணம் பண்ணு!!!
அப்ப LOVE பண்ணு........ குழந்தை பொறக்கும்... LOVE .... LOVE ... LOVE ... பண்ணிகிட்டே இரு..  சாகும் வரைக்கும்...
இந்த LOVE எல்லாம் சூடு குறைஞ்சா காத்துல பறந்துடும் தம்பி....
அதுதாண்டா LOVE... காதல் ... எல்லாமே!!!

மேற்குவங்காளம் : குமரி மத்திய ரிசர்வ் படை வீரரை சுட்டுக்கொன்றது கேரள வீர

இன்னொருவரை கொன்று தானும் தற்கொலை
மேற்குவங்காளத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மார்த்தாண்டம் சி.ஆர்.பி.எப் வீரரை அவருடன் பணியாற்றிய சக வீரரே சுட்டுக்கொலை செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மேலும் ஒருவரை கொன்று, தானும் தற்கொலை செய்துள்ளார்.
குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பம்பத்தைசேர்ந்தவர் குமார்(36). மேற்குவங்காளத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வந்தார். அங்குள்ள சீதாபுரா பகுதியில் குமார் உட்பட 183 வீரர்கள் நக்சலைட்டுகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்கி அவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் குமார் மற்றும் அவருடன் பணியாற்றிய திருவனந்தபுரத்தை சேர்ந்த துளசிதரன், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அகமதுபட் ஆகியோர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சீதாபுரா மாவட்ட எஸ்.பி திரிபாதி, சம்பவ இடத்திற்கு சென்று சக வீரர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், வீரர்களிடையே நடந்த மோதலில் 3 பேரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வீரர்கள் துளசிதரன், குமார், ரியாஸ் அகமதுபட் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துளசிதரன், ஏ.கே. ரக துப்பாக்கியால் குமாரை யும், ரியாஸ் அகமது பட்டையும் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர்.
இதனைத்தொடர்ந்து துளசிதரன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்
இதனிடையே பலியான மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்த வீரர் குமாரின் உடல் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து டிஎஸ்பி தினேஷ் தலைமையிலான வீரர்கள், துணை ராணுவ வாகனத்தில் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
அவரது உடலுக்கு குமரிமாவட்ட எஸ்.பி லட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  (Dinakaran)

தலைமையாசிரியர் சஸ்பெண்ட் : வேலை நேரம் முடியும் முன் பள்ளியை மூடிச் சென்றார்

விழுப் புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி விக்கிரவாண்டி ஒன்றியம் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு பார்வையிட வந்தார். அப்போது பள்ளி எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டிருந்தது. கிராம மக்களிடம் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் பள்ளியை, வேலை நேரம் முடிவதற்கு முன்பாக மாலை 3.45 மணிக்கே மூடிவிட்டு சென்றதாக கூறினர். பள்ளி பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மூடிவிட்டுச் சென்றதால், 55 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாக கூறி தலைமை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமத மாக வந்ததால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் வல்லம் ஒன்றியம் மேல் களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தபோது 6, 7, 8 வகுப்புகளில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் சரிவர மதிப்பிடப்படாமலும், மதிப்பெண் பதிவேட்டில் பதியப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தூர் : பால் : பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்

சாத்தூர் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து அதிசயித்து செல்கின்றனர். பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது குமாரரெட்டியாபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்புறம் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடியத் துவங்கியது. இதனை பொதுமக்கள் வந்து அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள ஊர்களுக்கும் பரவியது.
சாத்தூர், கத்தாழம்பட்டி, வாழவந்தாள்புரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால் வடியும் அதிசய வேப்பமரத்தை காண வந்தனர். மரத்திலிருந்து வடிந்த பால் மரத்தை சுற்றிலும் தேங்கி நின்றது. பொதுமக்கள் சிலர் வேப்பமரத்திற்கு மஞ்சள் நீரூற்றி அபிஷேகம் செய்து, சிவப்பு சேலை சுற்றி அம்மனாக வழிபடத் துவங்கினர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பால்வடியும் வேப்பமரத்தை கண்டு வணங்கினர்.
இதுகுறித்து கோயில் பூசாரி சீனிவாசன் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக, இதே வேப்பமரத்தில் பால் வடிந்தது, அப்போதும் ஊர்மக்கள் கூடி வேப்பமரத்தை அம்மனாக நினைத்து வழிபட்டனர். இன்று மீண்டும் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்துள்ளதாக கருதி பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர், என்றார்.
இதுகுறித்து தனியார் கல்லூரி தாவரவியல்துறை பேராசிரியர் தங்கப்பாண்டியன் கூறுகையில், மரங்களில் பால்வடிவது என்பது ஒரு சாதாரண விசயம். லேடக்ஸ் வகையை சேர்ந்த மரங்களில் குறிப்பிட்ட காலங்களில் ஒருவித திரவம் வழியத் துவங்கும். வெள்ளெருக்கு, பால் அட்டங்குலை மற்றும் வேப்பமரங்களில் லேடக்ஸ் வகைகளில் மட்டுமே குறிப்பிட்ட காலங்களில் இதுபோல் பால் போன்ற திரவம் வடிவது இயற்கையானது தான்.
இதையே கிராம மக்கள் வேப்பமரத்தில் பால் வடிந்தவுடன் அம்மன் அருள் என்று வணங்க ஆரம்பித்து விடுகின்றனர், என் றார்.

Women get raped by provoking Men : Police Chief

Andhra Pradesh police chief V Dinesh Reddy feels ‘women provoke men to rape them by wearing flimsy clothes.’
Last week, he said the police cannot be faulted for the rise in rape cases. ‘It can’t be attributed to police failure. One of the factors is that the accused are getting provoked as women are getting fashionable, even in rural areas… it is one of the factors provoking the accused (towards rape),’ Reddy said.


Later claiming that his comments had been misinterpreted, look what he said. ‘What I meant was one of the factors behind rape cases was the provocative dresses worn by women over which police has no control.’!

பசுமை மாணவர்கள் : பள்ளியில் செயல்படும் நர்சரி

இயற்கையை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்குகின்றனர் பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி மாணவர்கள். தங்களது சொந்த முயற்சியில் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள நர்சரி மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட யுக்தியினால் வெறும் மனித ஆற்றல் மூலம் இன்றைக்கு பெரிய நர்சரியையே பள்ளியில் உருவாக்கி உள்ளனர்.
இப்பள்ளி 15 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மரங்களைக் கொண்டுள்ளது. இவற்றை வைத்தே மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக நர்சரியை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இந்த மரங்களில் இருந்து விழும் விதைகளை பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.
பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒவ் வொரு வீடாகச் சென்று எண்ணெய் பாக்கெட் கவர்களை கீழே போடாமல் எங்களிடமே தாருங்கள் என்று கூறி குறிப்பிட்ட தினங்களில், சேகரித்து வைத்த கவர்களை பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு பகுதி மற்றும் கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் இப்பணிக்கு பொறுப்பேற்று பள்ளிக்கு பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கொண்டு வருகின்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து மண் எடுத்து நிரப்பி பக்குவப்படுத்தப்பட் விதைகளை அதில் ஊன்றி வளரச் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் 100 கன்றுகளுடன் ஆரம்பித்த நர்சரியில் தற்போது 10 ஆயிரம் மரக்கன்றுகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2 லட்சம் விதைகளும் உள்ளன. இதில் மயில்கொன்றை, வாகை உள்ளிட்ட விதைகள் 5 ஆண்டுகளானாலும் உழுத்துப்போகாமல் கெட்டித்தன்மையுடன் முளைக்கும் திறனுடன் இருக்கும்.
இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் திண்டுக்கல் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இலவசமாக அனுப்பப்படுகிறது. மரக்கன்றுகள் நடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளதா?, நீர் மற்றும் பராமரிக்கும் திறன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தே இவை வழங்கப்படுகிறது.
தற்போது மாவட்டத்தில் எங்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டாலும் உடன் பட்டிவீரன் பட்டி பள்ளியைத்தான் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் நாடி வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் கூறுகையில், மரம் வளர்ப்பினால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் இதில் பிளாஸ்டிக் ஒழிப்பும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இத்திட்டம் மூலம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிளாஸ்டிக் பையை வீதியில் எறியும் பழக்கத்தை மாற்றியுள்ளோம்.
இவற்றில் மரக்கன்று நடுவதின் மூலம் அதன் வீரியம் வெகுவாய் குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் அதில் உள்ள பாலிபுரோபின், நச்சுவாயுவாக மாறி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், மண்வளத்தையும் வெகுவாய் பாதிக்கும். தற்போது இதுபோன்ற அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் வளர்ந்த கன்றுகள் கூட எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. அழிந்து வரும் மரங்களான அரசமரம், ஆலமரம், பூவரசு உள்ளிட்டவற்றை முக்கியத்துவம் கொடுத்து அதிகம் விளைவித்து வருகிறோம். இந்த முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பள்ளியுமே ஒரு நர்சரியாக மாற முடியும் என்றார். 

உங்கள் வயது 18??? வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா???

இந்திய தேர்தல் ஆணையம் 18 & 19 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம் தமிழ்நாட்டில் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 1.1.2012 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். கல்லூரி மாணவர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பிரவீன்குமார் கூறினார்.
வாக்காளர் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ, தீயில் கருகி போனாலோ உரிய ஆதாரத்துடன் வாக்காளர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் ரூ 25 செலுத்தி, புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் 2 வாரங்களுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிடைக்கும். தமிழ் 

Wednesday, 21 December 2011

SEVAI Trust

Wishes all

A Very Merry Christmas



&
Prosperous New Year 2012


 

Tuesday, 20 December 2011

நாசரேத் : ஒரு ‘நவீன’ பிச்சைக்காரர் : ரூ.2000 கோல்ட் வாட்ச் : விலை உயர்ந்த செல்போனுடன்

நாசரேத் பகுதியில் தினமும் ஒரு வாலிபர் வருவோர் போவோரிடம் பிச்சை எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தர்மம் எடுப்பதையே தனது முழுநேர வேலையாகக் கொண்டுள்ளார். நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தைச்சேர்ந்த 35 வயது மதிக்க தக்க அந்த வாலிபர் தினமும் காலை 8 மணிக்கு பஸ் ஏறி நாசரேத் வந்துவிடுகிறார்.
வரும்போது சிறிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்து வருகிறார். நாசரேத் சந்தி பஜாரில் இறங்கும் அவர் தனது பணியை தொடங்கிவிடுகிறார். ரோட்டில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம், ரூ.5 கொடு...ரூ.10 கொடு என்று கேட்பார். யாரிடமும் அவர் தர்மம் போடுங்க சாமி என்று கேட்க மாட்டார்.
2 மணி நேரம் அங்கு நின்று கொண்டு பிச்சை எடுக்கும் அவர் அதன்பிறகு தனது எல்கையை மாற்றி அங்குள்ள சிஎஸ்ஐ தேவா லயம் பகுதிக்கு செல்கிறார். அங்குபிச்சை எடுக்கும் அவர் அங் குள்ள ஓட்டல்களில் மதிய உணவை சாப்பிட்டபின் நேராக நாசரேத் பஸ்நிலையம் பகுதிக்கு வருகிறார்.
இரவு 8 மணி ஆனதும் தனது பணியை முடித்துக்கொண்டு பஸ் ஏறி ஊர் சென்று விடுகிறார். மீண்டும் மறுநாள் தனது பணியை வழக்கம்போல் தொடங்கி விடுகிறார். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல ஆண்டுகளாக அவரது தர்மம் எடுக்கும் பணி தொடர்கிறது. அவர் தற்போது கையில் ரூ.2ஆயிரம் மதிப்புள்ள கோல்ட் வாட்ச் கட்டியுள் ளார். இதுபோல் விலை உயர்ந்த செல்போனும் வைத்துள்ளார். இவரது தினசரி வருமானம் ரூ.300ஐ தாண்டும் என்கிறார்கள்.
பணம் கேட்பது மட்டுமின்றி சிலரிடம் மீன் குழம்பு சாப்பாடு வாங்கி கொடு, மட்டன் சாப்பாடு வாங்கிக்கொடு என்று நச்சரிக்கிறார். இவரது தொல்லை தாங்காமல் பொதுமக்கள் மாற்று வழியாக செல்கிறார்கள்.
‘உனது பெயர் என்ன‘ என்று கேட்டால், முருகன் என்கிறார். உடம்புதான் நன்றாக இருக்கிறதே ஏன் இப்படி பிச்சை எடுக்கிறாய்? என்று யாராவது கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் புன்னகை மட்டும்தான். 
நமது நாடு எல்லாவிதத்திலும் அபரிதமான முன்னேற்ற பாதை யில் சென்று கொண்டிருந்தபோதிலும். பிச்சைக்காரர்கள் மட்டும் காலம் காலமாக அப்படித்தான் உள்ளனர். அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கினாலும் பிச்சைக்காரர்களை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. காரணம் அதில் கிடைக் கும் அதிகப்படியான வருமானம்தான். நாள் முழுக்க ரூ.200, ரூ.300 என்று பார்க்கும் இவர் எப்படி திருந்துவார்கள்? பொதுமக்கள் பிச்சை போடுவதை நிறுத்தினால் மட்டுமே இதை தடுக்கமுடியும்.        (தமிழ் முரசு)

Jyoti Amge : 62.8 cm Tall makes Guinness World Record (உலகின் மிக குள்ளமான பெண்)

Jyoti Amge - a high school student from Nagpur, Maharashtra has been recognized as world's shortest woman by Guinness World Records recently. She is 18, and is dreaming of make it in Bollywood one day!

"Jyoti Amge stood just 62.8 centimeters (24.7 inches) tall — shorter than the average 2-year-old". "I have put Nagpur on the world map. Now everyone will know where it is," said Amge, 

Jyoti dreams of working in a film one day ' alongside Salman Khan.
"Jyoti encourages us all to look beyond mere size and to just celebrate our differences," Guinness adjudicator Rob Molloy said.
"Last year, she passed her Class X exams with distinction and is now studying higher secondary at a junior college"
 "The title of shortest woman in history continues to be held by Pauline Musters, who lived in the Netherlands from 1876 to 1895 and stood 61 centimeters (24 inches) tall"
 "Like any other woman her age, Jyoti loves being fashionable. "I love ornaments," she said shyly, "and I like partying with friends"
"I feel grateful to be this size. It's bringing name and fame to my family," Jyoti said. "After all, if I weren't small and had not achieved these world records, I might never have been able to visit Japan and Europe and many other wonderful countries"

A Man's Life became cheaper than a Loan of Rs.40

Inability to repay a loan of a mere Rs 40 cost a man his life at Odisha's Sundargarh district, police said today.
Kailash Munda, a brick kiln labourer was allegedly beaten to death at Bhogopali village, about 140 km from here, by his niece yesterday after a fight over the return of the money he had taken from her.
Police later arrested the dead man's niece and her husband,both of them also brick kiln workers.

Team Anna Hazare threatened with HIV Needles : FIR Lodged

Last week the police received a letter that threatened to inject Anna Hazare and his supporters with needles contaminated with the HIV virus. The letter said if Anna remained adamant on his Lokpal agitation, they will be attacked with the deadly virus.



The police, now beginning to take the threat seriously, have registered an FIR and begun looking for those who sent the letter. The letter states that "a needle team, which has prepared 500 HIV positive needles, would inject the virus in atleast 1,000 people at the demonstration".

This anonymous letter was sent to DCP Central office on December 9.

Delhi Police has registered an FIR under sections 505 (2) - statements conducting to public mischief, 506 (criminal intimidation) and 507 (criminal intimidation by anonymous communication) of Indian Penal Code at Daryaganj police station last week and investigations have begun. The police suspect that "this letter seems to have been posted to the DCP's office from Delhi itself".

"We are trying to ascertain the identity of the sender though, after lot of discussions, we have also come to the conclusion that it might be a prank letter sent by some criminals. But since it is related to Anna Hazare, we don't want to take any chances as there is already a threat to his life and to the large number of people who congregate at his demonstrations," said a police officer.

The letter had stated that there are around 50 "volunteers in this needle group who are trained and they would use the needles cleverly on at least 1,000 people".  (Times of India)

1 வாழைப்பழம் = 4 ஆப்பிள் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்

"தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்" என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.
இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கூடங்குளம் : தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் : வி.எஸ்.அச்சுதானந்தன்

தமிழக மக்களின் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின்நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.
அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மார்த்தாண்டம் : 2-ம் திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

மனைவிக்கு தெரியாமல் 2- ம் திருமணம்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவருக்கும் நித்திரவிளை அடுத்த பாத்திமாபுரத்தை சேர்ந்த கமலாட்சி க்கும் 30.3.1992ல் திருமணம் நடந்தது. கமலாட்சி திருவனந்தபுரம் வேளாண் மை இயக்குனர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார். நிரந்தரமான வேலை இல்லாததால், திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவருக்கு பண உதவி செய்து வெளிநாட்டு வேலைக்கு கமலாட்சி அனுப்பினார். சில நாட்களில் திரும்பி வந்த சத்யராஜ், கமலாட்சியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார்.
இந்நிலையில், கடந்த 99-ம் ஆண்டு சத்யராஜ், படந்தாலுமூட்டை சேர்ந்த பிரீடா என்பவரை, 2-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த கமலாட்சி, கணவர் சத்யராஜ், பிரீடா, அவரது தந்தை யானோஸ், கணவரின் உறவினர்கள் ராஜன், ஜெயந்தி, மற்றும் ராபி ஆகியோர் மீது குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், சத்யராஜூக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமும், பிரீடாவுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.