Friday, 20 April 2012

குமரியில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் : நீர் உணவுகளை சாப்பிட வேண்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குமரியில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
குமரிமாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மழை பெய் துள்ள போதிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கியுள்ளது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்குகிறது.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு 0.25 சதவீதமாக குறைந்தது

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவின் முதல் சங்கமாக ,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2001ல் எச்ஐவியின் தாக்கம் 1.13 சதவீதமாக அதிகரித்திருந்தது.

இந்தியாவில் இனி யானைகளுக்கும் RC புத்தகம் : கேரள அறிமுகம்

வாகனங்களுக்கு இருப்பது போல் யானைகளுக்கும் ஆர்சி புத்தகம் வழங்கும் புதுமை திட்டத்தை கேரள அரசு இன்று முதல் தொடங்குகிறது. 
வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நடிகர் ஜெயராம் முதல் இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ் குமார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் தங்கள் வீடுகளில் யானைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். இது தவிர கேரளாவில் சிறிய கோயிலாக இருந்தாலும் கூட திருவிழா நடக்கும்போது அந்த கோயிலில் நெற்றிப்பட்டம் சூடிய யானையின் வீதி உலா கண்டிப்பாக இருக்கும்.

பொதுமக்கள் பூட்டு : அரசு அதிகாரிகள் திறந்தனர் : கிறிஸ்தவ தேவாலயத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப தேவலாயம் உள்ளது. இங்கு ஊர் நிர்வாகத்திற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் மகளுக்கு நேற்று (19.4.2012) திருமணம் நிச்சயமானது. திருமணத்தை கார்மல்நகர் தேவாலயத்தில் நடத்த அவர் ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தேவாலயத்தில் திருமணம் நடத்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு

ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3ல் சென்னையில் துவங்கியது. துவக்க விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாச நடனம் ஆடினர். அதனை போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விழா நிகழ்ச்சிகள் டிவியில்பார்த்த பெண்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Thursday, 19 April 2012

மீன் நோய் : இளம்பெண் அவதி : சில வகை கிழங்குகள் உணவு

இங்கிலாந்தின் யார்க் பகுதியை சேர்ந்தவர் கிளாரி ரோடஸ் (34). திருமணமாகி, 4 குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஒரு பாதிப்பு. உடலில் இருந்து திடீர் திடீரென அழுகிய மீன் நாற்றம் வீசும். சுற்றி இருப்பவர்கள் அலறி ஓடுவார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இதுபற்றி கிளாரி கூறியதாவது:
20 வயது முதல் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். ஆரம்பத்தில் குப்பென்று நாற்றம் வீசியது. வியர்வை, சிறுநீர் மட்டுமின்றி மூச்சு காற்றுகூட அழுகிய மீன் நாற்றம் அடிக்கும். எனக்கே பொறுக்க முடியவில்லை. வாய், பல்லில் இருந்து வருவதாக நினைத்தேன். பல் டாக்டரிடம் காட்டினேன். ஒரு பிராப்ளமும் இல்லை என்றார். ஆனாலும், வாயில் இருந்துதான் நாற்றம் வருவதாக உறுதியாக நம்பினேன். நாற்றம் தாங்காமல் ஒரு நாளுக்கு 20 முறை பல் துலக்கினேன்.

இளம்பெண்கள் நிர்வாண படங்கள் இன்டர்நெட்டில் வெளியிடு : ஏமாற நீங்கள் தயாரா??? ஏமாற்ற நிறைய பேர்!!!

சென்னை இளம்பெண் மற்றும் சேல்ஸ் கேர்ள் ஆகியோரின் நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மிரட்டிய 2 காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்.
online_scandals_bewareஐதராபாத் ராம் நகரை சேர்ந்தவர் விஷால் மடிபல்லி (24). அமெரிக்காவில் எம்.எஸ் படித்து வந்தார். அப்போது இன்டர்நெட் மூலம் பலருடன் தொடர்பு கொண்டார். இதில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி நெட்டில் சாட்டிங் செய்தனர். விஷால் மீது முழு நம்பிக்கை வந்தவுடன் தனது ஆன்லைன் பாஸ்வேர்டை அவருக்கு தந்தார். இதை வைத்து அப்பெண்ணை பற்றிய எல்லா தகவல்களையும் விஷால் சேகரித்தார். இதற்கிடையில், ‘ஸ்கைப்’ வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது விஷால் ஆசை வார்த்தைகள் கூறினார்.

Wednesday, 18 April 2012

காதலா!!! கள்ளகாதலா???.

prabhudeva_nayanthara_love

திருமணமான பிரபுதேவா
நயன்தாராவுடன் "காதல் "

திருமணமான அல்போன்சா
வினோத்துடன் "காதல் "

விகடனும் ..குமுதமும் ..தந்தியும்
இன்ன பிறவும் எழுதி மாய்ந்தன ....

குமரி வன பகுதியில் முறைகேடுகள் : ஆய்வுக்குழு வருகை

குமரி வன பகுதியில் வயர்லெஸ் கருவிகள் செயல் இழந்துள்ளன. இதனால் பல தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே இது குறித்து சிறப்பு குழு நியமித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாலும், விளை நிலங்களாக மாறுவதாலும் இம் மாவட்டத்தின் தனித்தன்மை மாறி வருகிறது. இங்குள்ள காடுகளில் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. எனவே காடு களையும், அதில் உள்ள விலங்குகளையும் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். வன பாதுகாப்பு தொடர்பாகவும், தகவல்களை எளிதில் பரிமாறி கொள்ளவும், இங்குள்ள வன காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

Cut Down Excise or We are going to hike Petrol Price Rs.9.60 per litre

State-run oil companies have served an ultimatum to the government that they will raise petrol prices by Rs 9.6 a litre if excise duty is not cut or they are not provided compensation for Rs 49-crore per day loss on fuel sale.

"We have been very patient, not raising prices since December despite our cost of production spiralling. But there is a limit to which we can borrow money and produce fuel for the country," Indian Oil Corp Chairman R S Butola said here.

Tuesday, 17 April 2012

மகேந்திரசிங் டோனிக்கு எம்பி பதவி

SEVAI Trust: MS Dhoni to Rajya Sabha : It's all about???
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.

ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 சுயேச்சைகள் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.

MS Dhoni to Rajya Sabha : It's all about???

Unimaginable it may sound to many, but untrue it is not.
Indian cricket captain Mahendra Singh Dhoni’s name is being considered for a Rajya Sabha nomination from Jharkhand by the state’s Opposition Jharkhand Vikas Morcha (JVM) led by former CM Babulal Marandi.
The JVM on Monday proposed Dhoni’s name for one of the two vacant seats from Jharkhand for which fresh polls are scheduled to be held on May 3 after the polls held on March 30 were cancelled amid widespread vote-buying allegations following seizure of about Rs 2.15 crore in cash from a car in state capital Ranchi.

IPL : Confidence of a 23 year old in Cheating : Home Minister's Son???


IPL_betel_leaf_seller’s_confidence_level_bangloreA 23-year-old betel leaf seller’s 'confidence level' in claiming to be the son of home minister R. Ashok allowed him to sit along side Royal Challengers Bangalore team owner Sidhartha Mallya and watch two back to back IPL matches at the Chinnaswamy Stadium in Bengaluru.

But he ran out of luck after an alert cop nabbed him on Sunday night.

குமரி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ரயில்வே திட்டம்

பைபாஸ் வழியாக அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
ananthapuri-gurvayur-express-trains-pass-through-bypass-nagercoil-town
அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் & மதுரை பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மக்களுக்கு பெரிதும் பயன்பாட்டில் இல்லாத நாகர்கோவில் டவுன் ரயில்நிலையம் வழியே மட்டும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

குளச்சல் மீனவர் மாயம்

குளச்சல் துறைமுகப்பகுதியைச் சேர்ந்தவர் கிராசையன் (80). மீன்பிடித்தொழிலாளி. கடந்த ஏப்.11ம் தேதி இந்தோனேஷியா சுமத்தராதீவில் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தை தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக் கை விடப்பட்டது.இதையடுத்து குளச் சல் கடற்கரை பகுதி மக்கள் அங்கிருந்து வெளி யேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற னர். பீதி விலகியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவன் படுகொலை


சந்தியா-கனகராஜ்-மோகன்-மணிகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நெல்லை துப்புரவு தொழிலாளி கொடைக்கானல் மலையிலிருந்து உருட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி அவரது கள்ளக்காதலன் உட்பட 4 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, 16 April 2012

மனைவி, பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன்.

இந்த புகைபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? தெரியவில்லையா, இவர் வேறு யாரும் அல்ல. மலையாள சினிமா துரையின் முன்னணி நடிகர் திலிப். ஆம் அவரே தான். "மாயமோகினி" என்னும் மலையாள படத்திற்காக அவர் நடித்த வேஷம் தான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்.
திலீப், லட்சுமி ராய், பிஜூ மேனன் நடித்துள்ள மலையாள படம், "மாயமோகினி". ஜோஸ் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடைவேளை வரை பெண்ணாக நடித்துள்ளார் திலீப். இந்தப் படம் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி திலீப் கூறியதாவது:

ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு

விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.

அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை

puducherry-minister-kalyana-sundaram-10th-exam-fraudபுதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் துவங்கியது

tamil-nadu-fishing-halt-for-1.5monthsதமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 13 கடலோர மாவட்டங்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை, விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நேற்று துவங்கியது. 

கருங்கல் அருகே வாலிபரை தாக்கிய போலீசார்

youth-attacked-by-police-near-karungalகருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கால்களில் கருங்கல் : குளச்சல் கடலில் மிதந்த சடலம்

35-years-old-man-found-dead-floating-in-colachel-seaகுளச்சல் வெட்டுமடை கடலில் கால்களில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரி யாத சடலம் மிதந்ததை தொடர்ந்து குளச்சல் பகுதியில் மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதியில் நேற்று முன் தினம் சடலம் ஒன்று மிதந்தது.

Wednesday, 11 April 2012

8.7 magnitude earthquake strikes off Indonesia : Tsunami Warning Given


An 8.7 magnitude earthquake struck off the coast of Indonesia on Wednesday, sending residents around the region dashing out of their homes and offices in fear.

The Pacific Tsunami Warning Center said a tsunami watch was in effect for the entire Indian Ocean and individual countries, including Thailand, Indonesia, Sri Lanka and India, issued tsunami warnings.

சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம்


சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.)

Tuesday, 10 April 2012

கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.

உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர்.