Saturday, 14 January 2012

தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் : தென் மண்டலம்

தென் மண்டல அஞ்சல் துறையின் கீழ் உள்ள 733 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேவையும் துரிதமாக நடைபெறும்.
தபால் பட்டுவாடா, பதிவு தபால் போக்குவரத்து, பார்சல் தபால் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, மணியார்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை செய்து வருகிறது.

3 சிறுமிகளை காப்பாற்றிய தர்மபுரி மாணவனுக்கு தேசிய விருது

R. Sudhakar, Superintendent of Police, handing over a cash prize to G. Parameswaran
தர்மபுரி அருகே குளத்தில் தத்தளித்த மூன்று சிறுமிகளை காப்பாற்றிய 9ம் வகுப்பு மாணவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இதை பிரதமர் வழங்குகிறார்.
தர்மபுரி மாவட்டம் அரகாசனஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரமேஸ்வரன்(14). இவர் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18.09.2010 அன்று நாகாவதி அணையின் கால்வாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை

சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 31.12.2011 தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Friday, 13 January 2012

Windows XP -ல் போல்டரை மறைத்து வைப்பது எப்படி???

உங்கள் கம்ப்யூட்டரில் (computer) ஒரு போல்டரை மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைத்து வைப்பது ( It has been tried in windows XP by me)  
  1. உங்கள் கம்ப்யூட்டரில் D டிரைவில் (drive) "xyz" என்ற போல்டெர் (Folder) இருப்பதாக எடுத்து கொள்வோம்.
  2. கம்ப்யூட்டரில் (computer) Start Menu => All Programs => Accessories => Command Prompt ஐ துவக்கவும் 
  3. இங்கே டைப் செய்திருப்பது போலே டைப் செய்யவும் ( attrib +s +h D:\xyz )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  4. இப்போது உங்கள் போல்டெர்  (Folder) மறைந்து போயிருக்கும். நீங்கள் அந்த போல்டரை மறைக்க பட்ட பைல், போல்டரை (hidden files and folders) காணும் முறை கொண்டும் காண முடியாது. 
  5. உங்கள் போல்டரை (Folder) திரும்ப கொண்டு வர இங்கே டைப் (type) செய்திருப்பது போலே டைப் (type) செய்யவும் ( attrib -s -h D:\xyz  )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  6. இது போன்று உங்கள் கம்ப்யூட்டரில் (computer) இருக்கும் எந்த ஒரு போல்டரையும் நீங்கள் மறைத்து வைக்கலாம். 

Turban case won by Sikh in UN

The UN's rights body has concluded that France had violated the religious freedom of a 76-year-old Sikh man when he was asked to remove his turban for his ID photograph, a US-based Sikh group has said.

China Women prefer Men with Apartment for Marriage

Marrying in China seems to have turned a herculean task for the male fraternity with majority of the women viewing ownership of an apartment as a pre-condition to marriage, a survey has found.

கேரளாவின் சாயம் வெளுக்கிறது : முல்லைப் பெரியாறில் புதிய அணை :

தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட வேண்டும்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது, தமிழகம் & கேரளாவுக்கு தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் : அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

மத்திய அரசின் சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தமிழக சிறப்பு அதிகாரி ஹென்றி திபேன் கூறினார்.

கன்னியாகுமரியில் சுற்றுலாபயணிகளுக்கு விரைவில் திறப்பு ஒலி ஒளி காட்சிக்கூடம்


ராட்சத விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இவை செயல்படத் தொடங்கும் என்று இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி அய்யாத்துரை தெரிவித்தார்.

பொங்கலுக்கு 5000 ஸ்பெஷல் பஸ்

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் மொத்தம் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.

Thursday, 12 January 2012

அமெரிக்க தூதரக ஆபீசில் தமிழ், இந்தி, மலையாளதில் விசாரணை

இந்திய, அமெரிக்க தொழில் வர்த்தக சபை சார்பில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கோலஸ் மேன்ரிங் பேசிய தாவது:
உலகில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சென்னையில் உள்ள தூதரகம் 10&வது மிகப்பெரிய தூதரகமாகும். கடந்த ஆண்டு மட்டும் இங்கு 1.75 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது.

பூனையை புலி என கூறி ரூ 10 லட்சத்துக்கு பேரம்

உடம்பில் வரிகள் கொண்ட காட்டு பூனையை, புலி என கூறி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடி வனப்பகுதியில் சிலர் புலிக்குட்டியை விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்றனர். சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரிடம் நைசாக பேச்சு கொடுத்தபோது, தங்களிடம் புலிக்குட்டி இருப்பதாகவும்,

1,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : நிர்ணயிக்கப்பட்டகுறைந்தபட்ச இடவசதி

மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச இடவசதி இல்லாத 1,000 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை தொடங்கி நடத்த அரசு குறைந்தபட்ச நில அளவை நிர்ணயித்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் 33 சென்ட், நகராட்சி பகுதியில் 1 ஏக்கர், பேரூராட்சி பகுதியில் 2 ஏக்கர், ஊராட்சி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மாதத்தில் உற்பத்தி தொடக்கம்

இந்திய அணுமின் கழக இயக்குநர் தகவல்
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கிடைத்தவுடன் 3 மாதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று இந்திய அணுமின் கழகத்தின் இயக்குநர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

பணம் தின்னும் ஆம்னி பஸ்கள் : அரசு கண்காணிக்குமா???

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக வசூல் வேட்டை தொடங்கியிருக்கிறது. 
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் மற்றும் கோயில் திருவிழா காலங்களில், சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பிறப்பு & இறப்பு சான்றிதழ் இணைய தளத்தில் பெறலாம்

சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பிறப்பு & இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் மீது குண்டுவீச்சு, பஸ் போக்குவரத்து முடங்கியது : தென் மாவட்டங்களில் பதற்றம்

பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.

Wednesday, 11 January 2012

அஞ்சுகிராமம் அருகே விளக்கு தவறி விழுந்து பயங்கர தீ குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

அஞ்சுகிராமம் அடுத்த மகாராஜபுரம் அருகே உள்ளது ஹரிதாசபுரம் கிராமம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் சுமார் 25 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனை வரும் கூலி தொழிலாளர்கள். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் இரு மகன்கள் செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன் தினம் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றனர். மகன்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்ற பிறகு செல்லத் துரை மனைவி செல்ல ராணி தனது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தார். விளக்கு அணை யாமல் இருக்க அதிக எண் ணெய் ஊற்றப்பட்டு இருந்தது.

Tuesday, 10 January 2012

Sri Lankan president Mahinda Rajapaksa's relative attacked in Rameshwaram

Thirukumaran Nadesan, husband of Sri Lankan Member of Parliament Nirupama Rajapaksa, was attacked on Tuesday in Rameswaram by a group of activists.

The attack was unleashed when he was coming out of a house after performing puja.
He was on a two-day visit to Rameswaram to offer prayer at Sri Ramanathaswamy temple.


The activists of Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) and Nam Tamilar Iyakkam, who came to know about the arrival of Mr. Nadesan, laid seize to a house at Nadutheru, where he was performing puja, protesting against the Sri Lankan President Mahinda Rajapaksa.

7 ஆண்டுகள் கடந்தும் நிரந்தர பாலம் இல்லை : மணக்குடி பாலப்பணி எப்போது முடியும்?

மணக்குடியில் 7 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் சேதமடைந்த பாலத்துக்கு பதிலாக இன்னும் புதிய பாலம் முழுமையாக கட்டப்படாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது நடந்து வரும், மணக்குடி நிரந்தர பாலத்தின் வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில், பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ரூ 8.47 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாலம் 2 ஆக உடைந்தது.

முல்லைப் பெரியாறும் கேரளா அரசின் நாடகங்களும்

முல்லைப் பெரியாறு விவகாரம் : கேரள அரசின் அழைப்பு நியாயம்தானா?
அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். அந்த அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்காமல் மவுனமாக நிராகரித்து விட்டார்.
இது குறித்து 5 மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். அப்பாஸ் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளா தொடர்ந்து முரண்பாடான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. 32 ஆண்டுகளாக தமிழக அரசு, கேரள அரசுக்கு சுமார் 40 கடிதங்கள் எழுதிவிட்டது. தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர்கள் பல முறை திருவனந்தபுரத்தில் பேச்சு நடத்தினர். அவை தோல்வியில் முடிந்தன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கடந்த 2001ம் ஆண்டில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றியது.

பேராசை பெரு நஷ்டம் : ரூ 5.50 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ 5.10 லட்சத்தை வாலிபர் இழந்தார்

செல்போன் எண்ணுக்கு ரூ 5.50 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் ரூ 5.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்கிருஷ்ணன்(27). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது செல்போன் எண் அதிர்ஷ்ட எண்ணாக தேர்வு செய்துள்ளோம். பல கோடி பரிசு காத்திருக்கிறது.

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட ரேடார் கருவி

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட சாட்டிலைட் இணைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவி ஒரு வாரத்திற்குள் செயல்பட துவங்க உள்ளது.

உலக வெப்பமயமாதலால் துருவப் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் மட்ட உயர்வை கணக்கிட ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் ‘ரேடார் கேஜ்’ கருவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய& பிரான்ஸ் (சரல்அல்டிகர்) நாடுகளின் கூட்டு முயற்சியில் குமரி மாவட்டம் குளச்சல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணம், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்சத்தீவுகளில் இது அமைக்கப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து ரேடார்களும் ‘சார்’ என்ற சாட்டிலைட்டுடன் இணைக்கப்படும். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் செயல்பாடுகளை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம் கண்காணிக்கும்.
இந்தியாவில் முதல் முதலாக குளச்சல் துறைமுக பாலத்தில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் சூரிய வெப்பசக்தியுடன் இயங்கும் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் இஸ்ரோ சார்பில் கடல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ஜோசப் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி துறைமுக அதிகாரி ஜாண்ஜெக செல்வம் மேற்பார்வையில் இதனை அமைத்துள்ளனர்.
இது குறித்து ஜாண் ஜெக செல்வம் கூறுகையில், "கடல் நீர் மட்டத்தை கணக்கிட குளச்சல் துறைமுக பாலத்தில் ரேடார் கேஜ் கருவியுடன், டவர், சோலார் பேனல், பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் இது ஒரு வாரத்திற்குள் சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டு செயல்பட துவங்கும்" என்றார்.

தமிழகத்தில் கோடிக்கணக்கில் புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டு கும்பல் சிக்கியது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவது, தேசிய புலனாய்வு அமைப்பு. இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்தேஷ்க் மற்றும் அவனது கூட்டாளி மார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சில கூட்டாளிகள் மூலம் சென்னையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பின் தென்மண்டல டிஐஜி சேதுராமன் மேற்பார்வையில் டிஎஸ்பி சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது, சென்னை அருகே பள்ளிக்கரணையில் நடத்தப்பட்ட சோதனையில், எஸ் கொளத்தூர் லேபர் காலனியில் தொழிலாளிகள் போல பதுங்கியிருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:
இந்தியா முழுவதும் நெட்வொர்க் வைத்து, இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ 1000, ரூ 500, ரூ 100 கள்ள நோட்டுக்களை வங்காள தேசத்துக்கு கடத்தி வந்து விடுவார்கள். பின்னர், அதை வங்காள தேச எல்லையில் வீசி விடுவார்கள். பின்னர், அவற்றை பொறுக்கி எடுத்து வந்து, நாடு முழுவதும் ஏஜென்டுகள் மூலம் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். மேலும், அடிக்கடி ரயில்கள் மூலம் தான் தமிழகத்துக்கு வந்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போல, தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகள், மதுக்கடைகள், ஆகிய இடங்களில் கள்ளநோட்டுக்களை கொடுத்து நல்ல நோட்டுக்களாக மாற்றியிருப்பது தெரிந்துள்ளது. இதில் சில ஏஜென்டுகளுக்கும் பங்கு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும், இவர்களது கூட்டாளிகள் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லியில் நடத்திய அதிரடி வேட்டையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ், ஐதராபாத்தில் சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசு, நொறுக்குத் தீனிக்கு தடை : பொதுக்குழு கூட்டத்தில்

பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழுவில் பரிசுப் பொருட்கள், கிப்ட் வவுச்சர்கள் தருவது, உணவு கூப்பன்கள் தருவது குற்றமாகும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு வருமாறு:
மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேனீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள், கூட்டம் நடக்கும் முன்பே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு (பங்கு தாரர்களுக்கு) தரப்பட வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் தவிர எந்த பரிசுப் பொருட் களையும் தரக்கூடாது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவு கூப்பன்கள், பரிசு கூப்பன்கள் ஆகியவற்றை தருவதும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும், கம்பெனிகள் சட்டம் பிரிவு 168ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி தரப்படும் பொருட்களுக்கு உரிய தொகையை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கொடுத்துவிட்டாலும், குற்றம் செய்ததாகவே கருதப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையை சரி செய்வதற்காகவும், செலவினங்களை குறைப்பதற்காகவும், மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.