Friday, 11 May 2012

எங்கு நோக்கினும் பெண்ணுரிமை குரல் : பெண்கள் எங்கே போகிறார்கள்?

கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கப்பல் கழக ஊழியருக்கும், மும்பையை சேர்ந்த பெண்ணுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
women-enterprenuer
திருமணத்துக்கு பிறகு கணவர் மும்பையில் 5 ஆண்டுகள் கப்பலில் வேலை செய்தார். 2005ம் ஆண்டு போர்ட் பிளேயருக்கு மாற்றப்பட்டார். அங்கு தன்னுடன் வந்த வாழும்படி மனைவியை அவர் அழைத்தார். ஆனால், மனைவி மறுத்து விட்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார்.

Haryana says "NO" to Jeans and T-Shirt

Directing its field staff to wear "decent" clothes to work, the women and child department (WCD) department in Haryana has asked them to desist from wearing jeans and T-shirts to work.

no-to-jeans-and-t-shirt-in-haryanaThe controversial order has virtually termed jeans and T-shirts as 'indecent' clothing. Its subject line read: "To wear decent clothes in office."

The circular, issued April 18, has been sent by the WCD director's office to all its field offices which run the Integrated Child Development Scheme (ICDS) and Integrated Child Protection Scheme (ICPS). 

நிதானம் (பொறுமை) தேவை : நிதானத்தை இழந்தால்???

ஓடும் ரயிலில் டிக்கெட் எடுக்காத பெண் பயணியை, அபராதம் கட்ட சொன்ன பெண் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
chennai-electric-train-route
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருப்பர் சசிரேகா (30). இவர், மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துணையுடன், சென்னை கடற்கரை& தாம்பரம் இடையிலான மின்சார ரயிலில், பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என்று ஒவ்வொரு பயணியாக நேற்று காலை விசாரித்து கொண்டிருந்தார்.

Thursday, 10 May 2012

30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதிக்காத கிராமம்

சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி கிராம மக்கள், 30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதித்ததில்லை. ஆச்சரியமாக உள்ளதா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஊஞ்சம்பட்டி. சுமார் 200 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தீப்பெட்டி தயாரிப்பு மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்தபோதும், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுகின்றனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் இக்கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கின்றனர். ஊர் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்கின்றனர்.

"பணம் இருந்தால் கடவுளும் வீடு தேடி வருவார்"

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
** ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி, ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதபுரம் ஆதிஜெகன்னாதபெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய கோயில்கள் உள்ளிட்ட 43 கோயில்களுக்கு ரூ 22.50 கோடி வழங்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tuesday, 8 May 2012

ஒரே டிக்கெட் : பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயிலில் பயணிக்கலாம்

SINGLE-PASS-FOR-MTC-METRO-TRAIN-CHENNAIபஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வர "ஒருங்கிணைந்த சென்னை மாநக போக்குவரத்து" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சிதம்பரம் பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

302 Women on Hunger Strike to Shut Down KKNPP : Government & Media remain Blind

Nuke-Power-people-say-no-to-koodankulam"Let's leave an Earth where our children and grandchildren can all play without worries."
- Yoko Kataoka, a retired baker from Japan

Some 25 men have been on the fast since May 1 and 302 women and 10 more men have joined the strike on May 4, 2012. 

Today the People of Koodankulam and Idinthakarai are going to submit the Voter ID Cards to the Radhapuram Tahsildar.

Is demanding ones right to live is a crime? These people are labelled as Naxals. Demanding the right to live become the act of Naxals.

ஹீமோபீலியா : சேலம் மாவட்டத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
89-people-in-salem-with-hemophiliaஇதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரண மாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ‘எக்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்’ குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபிலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும். காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும்.

குமரி குடிமகன்களின் நாட்டு சேவை : ஏப்ரலில் மதுபான விற்பனை 54.35 கோடி

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 நாட்களில் மட்டும் ரூ.54.35 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Monday, 7 May 2012

DIVORCE : Reasons and Documents

"Marriages are made in Heaven". "இறைவன் இணைத்ததை மனிதன் பிரிகாதிருக்கட்டும். இனி இவர்கள் இரு உடல் ஓர் உயிராய் இருப்பார்கள்"

Divorce is not the solution for every problem. Love has the power to cure any problem. Sharing and Understanding the problem and loving one another are the ultimate solution for every happy married life.

Divorce, though I don't support, the main reason for sharing this article is merely for knowledge and for the use of men and women, who are victims of marriage.

Saturday, 5 May 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : நொங்கு வண்டி

அனேகமாக நம்மில் பலரது சொந்த வாகன கனவை நிறைவேற்றி தந்தது இந்த வாகனமே!!!

பெண் பனையில் உருவாகும் பாளை நாளடைவில் பணம்காயாக உருவாகிறது. இளம் பனம்காய் நொங்கு எடுக்க உகந்தது. சரியான பருவம் முக்கியம். இல்லை எனில் கடுக்காய் எனப்படும் முதிர்ந்த நிலைக்கு சென்று விடும். அது சுவைக்காது!!

குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறை இல்லை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
Opening_Savings_Acccount_without_minimum_balanceகடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.

குழந்தை, சமையல், துணி மடித்தல் காரணங்களுக்காக விவாகரத்து கேட்க முடியாது

குடும்பத்தின் நிதி நிலையை கருதி மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதை காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
divorced_couple_maharashtraமகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரமேஷ் ஷெனாய் (30), இவருடைய மனைவி பிரீதி (26), இருவருக்கும் 2007, பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இருவரும் வேலை செய்கின்றனர்.

Friday, 4 May 2012

குவைத் : இஸ்லாமியத்தை பழித்தால் மரண தண்டனை

இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் குவைத்திலும் கொண்டு வர எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இஸ்லாமியம், முகமது நபிகளை பழித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹமத் அல்நகி என்பவரை குவைத் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"Peer education system" : suggested by Parliamentary Panel

Taking note of various studies and surveys showing poor learning capacity of students especially at the elementary level, a Parliamentary panel has suggested introduction of ‘peer education system’ as an option to address the issue.

"Under this concept, a higher grade student can adopt a low grade student and start teaching him. This would help the teaching student make his base strong. As an incentive, a provision of stipend could also be made available for him," the panel said.

உலகம் சிறிது : சிரித்து வாழ்வோம்


பணி நிமித்தம் நிற்கும் வரிசையில் ....
குறுக்கிடும் வேளையில்...
'பொறம்போக்கு' புலம்பல் வேண்டாம்


என்றேனும் ..உங்களுக்கு நானோ ..
எனக்கு நீங்களோ ..
குருதிகொடை செய்ய நேரிடலாம்


எங்காவது பார்க்க நேர்ந்தால்
பாங்காக சிரித்து வைப்போம் ..
'அலட்சிய' முகம் வேண்டாம் '


உங்களுக்கு நானோ..
எனக்கு நீங்களோ ...இன்னொருநாள்
கடவுளாய் உதவக்கூடும்

Thursday, 3 May 2012

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி

சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அஞ்சல் துறையின் புதிய அவதாரம் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா"

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
Post_office_Indiaவங்கி சேவை எட்டியு ள்ள மக்கள் எண்ணிக்கை 50 சதவீதத்துக் குள் நீடிக்கிறது. ஏனெனில், வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம், நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகின்றன. இதனால், பின்தங்கிய, கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.

தகவல் ஆணையம் தீர்ப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : உதயகுமார்

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
Dianuke_Udayakumar_Koodankulamகூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை&1 மற்றும் 2ன் பாதுகாப்பு ஆய்வறிக்கை, களஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22-ம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
+2_results_onlineஇதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.

Sunday, 29 April 2012

380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ghol_fishஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் - பட்டை சோறு

நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.

தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.

இலவச கட்டாய கல்வி உரிமை : ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
schoolas_in_tamil_naduநாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி வழங்குவதற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அரசின் முடிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அளவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உத்தரவையும் கடந்த நவம்பர் மாதமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணி தேர்வுகளுக்கு இணையதளத்தில்பதிவு செய்வது எப்படி?

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.

குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா

Sempattai_Kurumpanaiஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.