Friday, 20 January 2012
Thursday, 19 January 2012
சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : தமிழகம் & ராஜஸ்தான் பலப்பரீட்சை
தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்
வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.
Wednesday, 18 January 2012
6-ம் வகுப்பு முதல் பேன்ட், சல்வார் கமீஸ் : இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை
81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்க ஜெ. உத்தரவு
அரசு பள்ளிகளில் 1 முதல் 8&ம் வகுப்பு வரை படிக்கும் 46.85 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 6&ம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு பேன்ட்டும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படுகிறது. மேலும் 10&ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உறவினர்களுடன் கைதிகள் பேசலாம்
தமிழகத்தில் 13 மத்திய சிறைகளில் விரைவில் 54 பொது தொலைபேசிகள்
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் 54 பொது தொலைபேசிகள் வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
புழல், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், பாளை உள்பட 9 ஆண்கள் மத்திய சிறையும் புழல், வேலூர், திருச்சியில் பெண்கள் மத்திய சிறையும் உள்ளன. இந்த சிறைகளில் தூக்குதண்டனை கைதிகளும் ஆயுள் தண்டனை கைதிகளும் உள்ளனர். மேலும், பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை அதிகாரிகளின் முன் அனுமதியுடன் உறவினர்களை பார்த்து பேசி வருகின்றனர்.
35 கிலோ இலவச அரிசியுடன் மாதம் ரூ 400 உதவித்தொகை
யானைக்கால் நோயாளிகளுக்கு
பி.எச்.டி. இந்தியா நிறுவனத்தின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் சூசை மரியான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை மற்றும் அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
Saturday, 14 January 2012
ஓட்டலில் உணவு விலையை கட்டுப்படுத்த வேண்டும் : தோசை ரூ 45, சாப்பாடு ரூ 60
கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
நாகர்கோவிலில் சமீப காலமாக ஓட்டல்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல ஓட்டல்களின் விலைப்பட்டியல் வைப்பதில்லை. பண்டங்களை ஈக்கள் மொய்க்காமலும், தூசுகள் படியாமலும் மூடி வைப்பதில்லை. பெரும் கலப்படங்கள் நடைபெறுகிறது.
கொழுப்பை கரைக்கும் அக்ருட் : ஆராய்ச்சி தகவல்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ருட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.
மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் : அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கேட்டு வழக்கு
கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி. ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ பிரிவு கள், 11 அரசு மருந்தகங்கள், 7 பெண்கள் மற்றும் குழந் தைகள் மருத்துவமனைகள், 4 காசநோய் மருத்துவ மனை கள் மற்றும் 7 தொழுநோய் மருத்துவமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். சமுதாயத்திற்கு சேவையாற்றும் பொறுப்பு இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உள்ளது.
ரஞ்சி கோப்பை : பைனலில் தமிழகம்
தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் : தென் மண்டலம்
தென் மண்டல அஞ்சல் துறையின் கீழ் உள்ள 733 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேவையும் துரிதமாக நடைபெறும்.
தபால் பட்டுவாடா, பதிவு தபால் போக்குவரத்து, பார்சல் தபால் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, மணியார்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை செய்து வருகிறது.
3 சிறுமிகளை காப்பாற்றிய தர்மபுரி மாணவனுக்கு தேசிய விருது
![]() |
| R. Sudhakar, Superintendent of Police, handing over a cash prize to G. Parameswaran |
தர்மபுரி அருகே குளத்தில் தத்தளித்த மூன்று சிறுமிகளை காப்பாற்றிய 9ம் வகுப்பு மாணவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இதை பிரதமர் வழங்குகிறார்.
தர்மபுரி மாவட்டம் அரகாசனஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரமேஸ்வரன்(14). இவர் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18.09.2010 அன்று நாகாவதி அணையின் கால்வாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை
சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 31.12.2011 தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
























