Friday, 20 January 2012

தமிழக அரசின் அமைதி ஆச்சரியத்தை தருகிறது : ரஷ்ய நிபுணர்

கூடங்குளம் விவகாரம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில் ‘கூடங்குளம் அணுமின் நிலையம் & ஒரு யதார்த்த பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. மாநிலக்குழு தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஆதீனம் நூலை வெளியிட, கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய நிபுணர் குழுத்தலைவர் டட்கின் வெவ்ஜின் பெற்றுக்கொண்டார்.

பெற்றோரை கைவிட்டால் 3 மாதம் சிறைதண்டனை

குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன்படி பெற்றோர்களை புறக்கணித்து செல்வது குற்றமாகும். ஒவ்வொரு உட்கோட்டங்கள் அளவில் கோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனு 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும்.

ஏப்ரல் முதல் பி.எப் ரிட்டன்ஸ் இ பைலிங் முறை

பி.எப் ரிட்டன்ஸ்களை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதை ஏப்ரல் முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு?

கோவையில் வினோத புகார்.. போலீசார் அதிர்ச்சி
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.

புயலால் பாதித்தோருக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளம் தர முடிவு


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல் மஜீத், மாநில தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் இரா.தாஸ், பொருளாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Flyer to get Rs 1 lakh from Kingfisher for cancelled flight

The Mumbai Suburban District Consumer Disputes Redressal Forum recently ordered Kingfisher Airlines to pay Rs 1 lakh as compensation to a chartered accountant whose family had to go through a trying time after their Mumbai-bound flight from Kolkata was cancelled a night before departure.

Modi starts one-day fast at Godhra - 'Sadbhavna Mission'

Gujarat Chief Minister Narendra Modi began a day-long fast here on Friday as part of his 'Sadbhavna Mission', which is aimed at building bridges between the members of all communities.

வேகத்தடை மூலம் மின்சாரம் : கொடுப்பைக்குழி மாணவன்


குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் +1 வகுப்பு படித்து வருபவர் விக்னேஷ் (16). இவர் தக்கலையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற நூதன இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்வு கட்டண இறுதி தேதி அறிவிப்பு

குழப்பத்தில் பல்மருத்துவ மாணவர்கள்
பல்மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முறையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பெண், இன்டர்னல் தேர்வுக்கு 100 மதிப்பெண் என்றும் தனியாக செய்முறைக்கு 100 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்தது. இந்த தேர்வு முறையால் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

ரூ 250 கோடி செலவில் தாம்பரத்தில் 3வது ரயில் முனையம்

எழும்பூர் ரயில் முனையம் மாற்றம் இல்லை
வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களை நிறுத்த சென்னையில் 3-வது ரயில் முனையம் தாம்பரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் தெரிவித்தார்.

வாகன விபத்துகளை தடுக்க மதுரை இன்ஜினியரிங் மாணவர் நவீன கேமரா கண்டுபிடிப்பு

வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமராவை மதுரையை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் கண்டு பிடித்துள்ளார்.

5 மாநில தேர்தலில் அன்னா குழு பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு செய்துள்ளது. ஹரித்துவாரில் நாளை பிரசாரம் தொடங்குகிறது.

இப்படியும் வங்கி : பள்ளி ஆசிரியர் சேமிப்பு கணக்கில் 49,000,00,00,000 ரூபாய்

உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் திடீரென பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? சூப்பர் அதிர்ச்சி அடைந்து அப்படியே மயக்கம் போட்டிருப்பீர்கள்தானே...

Thursday, 19 January 2012

சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.

குமரியில் குளங்கள் தூர்வாருதல் குழு

குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வாருதல் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு டி.ஆர்.ஓ. தலைமையில் குளங்கள் தூர்வாருதல் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. இடம் பெற்றுள்ளார்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : தமிழகம் & ராஜஸ்தான் பலப்பரீட்சை

நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழக அணி மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்

வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.

ரயில்களில் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிக்கெட் முறைகேடுகளை தடுக்க, ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற புதிய சட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் நேற்று கூறியதாவது:

பொங்கல் சிறப்பு பஸ்கள் : அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ 24 கோடி வருமானம்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு ரூ 23.66கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கலையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

பொங்கல் : 276 கோடிக்கு மதுபானம் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ் மாக் கடைகளில் ரூ 276 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.பொங்கல் பண்டி கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனையானதை விட, இந்த ஆண்டு மதுபானங்கள் ரூ 35 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

Wednesday, 18 January 2012

6-ம் வகுப்பு முதல் பேன்ட், சல்வார் கமீஸ் : இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை

81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்க ஜெ. உத்தரவு
அரசு பள்ளிகளில் 1 முதல் 8&ம் வகுப்பு வரை படிக்கும் 46.85 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 6&ம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு பேன்ட்டும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படுகிறது. மேலும் 10&ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உறவினர்களுடன் கைதிகள் பேசலாம்

தமிழகத்தில் 13 மத்திய சிறைகளில் விரைவில் 54 பொது தொலைபேசிகள்
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் 54 பொது தொலைபேசிகள் வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
புழல், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், பாளை உள்பட 9 ஆண்கள் மத்திய சிறையும் புழல், வேலூர், திருச்சியில் பெண்கள் மத்திய சிறையும் உள்ளன. இந்த சிறைகளில் தூக்குதண்டனை கைதிகளும் ஆயுள் தண்டனை கைதிகளும் உள்ளனர். மேலும், பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை அதிகாரிகளின் முன் அனுமதியுடன் உறவினர்களை பார்த்து பேசி வருகின்றனர்.

பெற்றோருக்காக மனம் மாறினார் : காதலனை கைவிட்டார்


மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிரேசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. அருகே உள்ள மேலக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இன்ஜினியரிங் மாணவர். இவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே பழக்கம் இருந்துள்ளது.

35 கிலோ இலவச அரிசியுடன் மாதம் ரூ 400 உதவித்தொகை

யானைக்கால் நோயாளிகளுக்கு
பி.எச்.டி. இந்தியா நிறுவனத்தின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் சூசை மரியான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை மற்றும் அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.