Friday, 3 February 2012

தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் : கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன் : ஜெயலலிதா

‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத் தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்’’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இன்று கூடங்குளமும் சட்டசபையும் : அணுமின் நிலையத்தால் மின் தட்டுப்பாடு நீங்காது

சட்டசபையில் கூடங்குளம் பற்றி உறுப்பினர்கள் பேசியதாவது:

கடலரிப்பால் முள்ளூர்துறை சாலை அபாயம் : நடவடிக்கை எடுக்கப்படுமா???

தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் தொடர் கடலரிப் பால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, 2 February 2012

ஹீரோவுக்கு கை, கால் அமுக்கணும் முகத்துக்கு நேர் கால் போடுவார் ஹீரோயின்

கிழக்கு சீமையிலே, கடல்பூக்கள், தமிழ்ச்செல்வன் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ரத்னகுமார். செங்காத்து பூமியிலே என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர் கூறியதாவது:

குமரியில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண் : என்னதான் நடக்குது???

குமரியில் திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றியதாக வாலிபர் தவித்து வருகிறார்.

காதலும்!!! கருக்காடியும்

ஓர் கடலோர கவிதை                                             

பார்க்கும்
                கண்ணாடியிலும் உன் முகம்
                கருக்காடியிலும் உன் முகம்

"திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா!!!"

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

Wednesday, 1 February 2012

அவளின் கிறுக்கல்கள் - 9

போய் வருகிறேன் கண்மணி
நீண்ட காலத்துக்கு பின் என்று போகும் போது சொன்னாய் ... 
நான் போய் வருகிறேன் கண்மணி.. 
இந்த வார்த்தைகளுக்காக இரு கண் மணியும் உறங்காது...
பலநாள் தவம், கிடந்தேன் காதலா ....

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம் அழைத்து சென்று லஞ்ச பணம் வசூல் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம்மில் லஞ்ச பணம் எடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாளை முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இதில், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

திருமணம் ஓகே... குழந்தை கூடாது : நக்சலைட்கள் நிபந்தனையாம்!!!

சட்டீஸ்கர் மாநில நக்சல் இயக்கத்தில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கூவத்தில் விழுந்த முதியவரை ஷூ கயிற்றால் காப்பாற்றிய தலைமைக் காவலர்


தலைமைக் காவலர் ரவி
அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், நேற்று அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

Tuesday, 31 January 2012

"நல்லவர்களை கெடுக்கும் கோபம்" : படித்ததில் பிடித்தது


ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்கள் மீதான மதிப்பு, மரியாதையை முடிவு செய்கிறது. ஒரு சிலர் இருக்கிறார்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பேசுவார்கள். எதிரில் இருக்கும் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படும்.

விந்தணு எண்ணிக்கை குறைக்க அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை

குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இயங்கிய154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கிய, 154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதியின் குடும்பத்தை காக்க சட்டீஸ்கர் அரசு புதுமை திட்டம்

கைதியின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தை பாதுகாக்க சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

"ஸ்பாட் பைன்" : 15 லட்சத்தை தாண்டியது : உஷார்!!!

ஒரே நாளில் 10,000 வழக்கு
வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ 15 லட்சத்துக்கு மேல் வசூலானது.

இந்தியா ஒளிர்கிறது : பார்ட்டிக்கு போக வசதியாக நள்ளிரவு குழந்தை காப்பகம்

ஒரு இரவு பராமரிக்க ரூ 750
வாரஇறுதி நாட்களில் கைக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

Monday, 30 January 2012

பணகுடி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பிவிட்ட டிரைவர் : உஷார்!!!

பல பெண்களை ஏமாற்றினாரா?
இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வேன் டிரைவர் அதை செல்போனில் ஊரெல்லாம் பரப்பி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரை ‘வேறொரு’ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம்

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம் என மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த விழாவில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

காதல்??? இது மோகம்!!! : வாழ்க்கை வாழ்வதற்கே : 2 திருமணங்கள் முடித்தவருடன் காதல்

காதல் : கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து பலியானது ஏன்?
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நேற்று முன் தினம் காலையில் மூதாட்டி, இளம்பெண் ஆகியோர் அடுத்தடுத்து ரயில்களில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் தாய், மகளாக இருக்குமா? என்ற சந்தேகமும் வந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோக்சனா, பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

வேலை நிறுத்தம் : டாக்டர்கள் கையை வெட்டுவேன்

வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடினால், டாக்டர்களின் கையை வெட்டுவேன்” என்று பீகார் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Criminals = Politicians = Criminals : Is it TRUE?

As many as 109 candidates contesting the first phase of Uttar Pradesh Assembly elections have criminal cases pending against them, according to a monitoring group.

எச்ஐவி பாதித்தவர்கள் பட்டியல்

விழிப்புணர்வால் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்தது
வேலூரில் கடந்த ஆண்டு 1487 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் கட்டணம் 12% வரை உயர்த்தப்படலாம்


ரயில்களில் பயணிகள் கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 12% வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.