Thursday, 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி

மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க  ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

Wednesday, 22 February 2012

அட அப்ரண்டீசுகளா!!! மரணத்துக்கு பிறகும் பேஸ்புக் : உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை


பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் சமீபகாலமாக வித்தியாசமான கலாசாரம் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:

வியாபார கல்வியும் சைடு பிசினஸ் வாத்தியார்களும்


விவசாயம், பைனான்ஸ், கடை பிரைவேட் டியூஷன் என ஆசிரியர்கள் வேறு வேலைகள் பார்ப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்படி சைடு பிசினஸ் நடத்தும் ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு பெற்றோர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.

மானேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு வங்கி கடன் இல்லை

தொழிற்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்(மானேஜ்மென்ட் கோட்டா) சேரும் மாணவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் : வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் தேவையில்லை???

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள், இந்த ஆண்டு முதல் வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் : இணையதளத்தில் சரிபார்க்கலாம்

வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை, இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Tuesday, 21 February 2012

MLA arrested for slapping Woman Police


Ruling BJD MLA Subarna Nayak was arrested today for allegedly slapping and misbehaving with a woman homeguard.

நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை


கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தை வியாபாரம் : ஒரு குழந்தை ரூ 2 - 3 லட்சம்


மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது.

Saturday, 18 February 2012

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.

Friday, 17 February 2012

ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை : உச்ச நீதிமன்றம்


மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2,500 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைக்கும் : மின்வாரியம்


தமிழ்நாட்டில் வரும் மே, ஜூன் மாதங்களில் காற்றாலை மூலம் 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Thursday, 16 February 2012

கள்ளக்காதலியுடன் சுற்றிய மருமகன் : மாமனார், மாமியார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன், வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபருக்கு சொந்தமான காரில் இவர்கள் உல்லாசமாக உலா வர தொடங்கினர்.

குமரியில் இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை


குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே பள்ளியில் / மாதத்தில் 2வது சம்பவம் : மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

உடுமலை பள்ளி விடுதியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனது தற்கொலைக்கு பொருளாதார ஆசிரியரே காரணம் என அதில் எழுதப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் எதிரொலி : தமிழக பேரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை : உஷாரையா!!! உஷார்!!!


கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அவர்கள் அவசரமாக தொலைபேசி பேச பேரவை லாபியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தை பசுமையாக்க மாபெரும் மரம் நடும் திட்டம்

மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற அரசின் வாசகங்கள் பலர் வாயில் ஒலித்தாலும், இப்போது மர நட நேரமோ, இடமோ இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், நகர்புறங்களின் வேகமான வளர்ச்சி, உறைவிட தேவை ஆகிய காரணங்கள் வானளாவிய மரங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.

கப்பலில் இருந்து துப்பாக்கி சூடு : 2 மீனவர்கள் பலி : ஒருவர் இரையுமன்துறையை சேர்ந்தவர்

கேரள கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Wednesday, 15 February 2012

Girl ends Life : Lecturers arrested of harassment


A second year Inter-mediate student hanged herself to death after she was allegedly harassed by lecturers in her college at Munchinguputtu in Vizag Agency on Tuesday.

ADMK weds Congress : but needs CM (Jayalalitha's) Nod


Here’s a love affair that needs Poes Garden nod to bloom. Laasya, 26, and Naveen, 30, belong to different political backgrounds and cannot marry without Tamil Nadu CM J. Jayalalithaa’s permission.

Tuesday, 14 February 2012

ரேபீஸ் நோய் : இந்தியாவில் ஆண்டுக்கு 20,000 பேர் பலி : குழந்தைகள் அதிகம்

இந்தியாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயிரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

திருவட்டார் : கணவன் வெளிநாட்டில் : இளம்பெண் தற்கொலை


திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் கடுகனூர்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவர் பல வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தக்கலையை அடுத்துள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த ஜாஸ் மின்(31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இரயுமன்துறை : எம்.பி.ஏ மாணவர் பைக் விபத்தில் பலி


நித்திரவிளை அருகே உள்ள இரயுமன்துறை குருசடி வளாகத்தை சேர்ந்தவர் கிபின்(24). சென்னையில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கிபின், அதே பகுதியை சேர்ந்த கிளின்டன் (20) என்பவருடன் தூத்தூரில் இருந்து இரயுமன்துறைக்கு பைக்கில் புறப்பட்டார்.