Thursday, 23 February 2012
அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி
மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.
Wednesday, 22 February 2012
Tuesday, 21 February 2012
நாளை திருநீற்று புதன் (தவக்காலம் துவக்கம்) : ஏப்.8-ல் உயிர்ப்பு பண்டிகை
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனிகள் நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
Saturday, 18 February 2012
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : 8 முதல்வர்கள் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் இந்த மையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 8 மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர்.
Friday, 17 February 2012
Thursday, 16 February 2012
கள்ளக்காதலியுடன் சுற்றிய மருமகன் : மாமனார், மாமியார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன், வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபருக்கு சொந்தமான காரில் இவர்கள் உல்லாசமாக உலா வர தொடங்கினர்.
தமிழகத்தை பசுமையாக்க மாபெரும் மரம் நடும் திட்டம்
மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற அரசின் வாசகங்கள் பலர் வாயில் ஒலித்தாலும், இப்போது மர நட நேரமோ, இடமோ இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், நகர்புறங்களின் வேகமான வளர்ச்சி, உறைவிட தேவை ஆகிய காரணங்கள் வானளாவிய மரங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.
Wednesday, 15 February 2012
Tuesday, 14 February 2012
இரயுமன்துறை : எம்.பி.ஏ மாணவர் பைக் விபத்தில் பலி
நித்திரவிளை அருகே உள்ள இரயுமன்துறை குருசடி வளாகத்தை சேர்ந்தவர் கிபின்(24). சென்னையில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கிபின், அதே பகுதியை சேர்ந்த கிளின்டன் (20) என்பவருடன் தூத்தூரில் இருந்து இரயுமன்துறைக்கு பைக்கில் புறப்பட்டார்.
Subscribe to:
Posts (Atom)























