ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரவாணிகள் ஏறிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொடுக்காத பயணிகளை திட்டி ரகளை செய்வதாகவும் போலீசுக்கு புகார் வந்தது. குறிப்பாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்&மங்களூர் எக்ஸ்பிரசில் அரவாணிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் வந்தது.






















