Monday, 7 May 2012

DIVORCE : Reasons and Documents

"Marriages are made in Heaven". "இறைவன் இணைத்ததை மனிதன் பிரிகாதிருக்கட்டும். இனி இவர்கள் இரு உடல் ஓர் உயிராய் இருப்பார்கள்"

Divorce is not the solution for every problem. Love has the power to cure any problem. Sharing and Understanding the problem and loving one another are the ultimate solution for every happy married life.

Divorce, though I don't support, the main reason for sharing this article is merely for knowledge and for the use of men and women, who are victims of marriage.

Saturday, 5 May 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : நொங்கு வண்டி

அனேகமாக நம்மில் பலரது சொந்த வாகன கனவை நிறைவேற்றி தந்தது இந்த வாகனமே!!!

பெண் பனையில் உருவாகும் பாளை நாளடைவில் பணம்காயாக உருவாகிறது. இளம் பனம்காய் நொங்கு எடுக்க உகந்தது. சரியான பருவம் முக்கியம். இல்லை எனில் கடுக்காய் எனப்படும் முதிர்ந்த நிலைக்கு சென்று விடும். அது சுவைக்காது!!

குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறை இல்லை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
Opening_Savings_Acccount_without_minimum_balanceகடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.

குழந்தை, சமையல், துணி மடித்தல் காரணங்களுக்காக விவாகரத்து கேட்க முடியாது

குடும்பத்தின் நிதி நிலையை கருதி மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதை காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
divorced_couple_maharashtraமகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரமேஷ் ஷெனாய் (30), இவருடைய மனைவி பிரீதி (26), இருவருக்கும் 2007, பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இருவரும் வேலை செய்கின்றனர்.

Friday, 4 May 2012

குவைத் : இஸ்லாமியத்தை பழித்தால் மரண தண்டனை

இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் குவைத்திலும் கொண்டு வர எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இஸ்லாமியம், முகமது நபிகளை பழித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹமத் அல்நகி என்பவரை குவைத் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"Peer education system" : suggested by Parliamentary Panel

Taking note of various studies and surveys showing poor learning capacity of students especially at the elementary level, a Parliamentary panel has suggested introduction of ‘peer education system’ as an option to address the issue.

"Under this concept, a higher grade student can adopt a low grade student and start teaching him. This would help the teaching student make his base strong. As an incentive, a provision of stipend could also be made available for him," the panel said.

உலகம் சிறிது : சிரித்து வாழ்வோம்


பணி நிமித்தம் நிற்கும் வரிசையில் ....
குறுக்கிடும் வேளையில்...
'பொறம்போக்கு' புலம்பல் வேண்டாம்


என்றேனும் ..உங்களுக்கு நானோ ..
எனக்கு நீங்களோ ..
குருதிகொடை செய்ய நேரிடலாம்


எங்காவது பார்க்க நேர்ந்தால்
பாங்காக சிரித்து வைப்போம் ..
'அலட்சிய' முகம் வேண்டாம் '


உங்களுக்கு நானோ..
எனக்கு நீங்களோ ...இன்னொருநாள்
கடவுளாய் உதவக்கூடும்

Thursday, 3 May 2012

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி

சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அஞ்சல் துறையின் புதிய அவதாரம் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா"

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
Post_office_Indiaவங்கி சேவை எட்டியு ள்ள மக்கள் எண்ணிக்கை 50 சதவீதத்துக் குள் நீடிக்கிறது. ஏனெனில், வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம், நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகின்றன. இதனால், பின்தங்கிய, கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.

தகவல் ஆணையம் தீர்ப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : உதயகுமார்

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
Dianuke_Udayakumar_Koodankulamகூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை&1 மற்றும் 2ன் பாதுகாப்பு ஆய்வறிக்கை, களஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22-ம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
+2_results_onlineஇதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.

Sunday, 29 April 2012

380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ghol_fishஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் - பட்டை சோறு

நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.

தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.

இலவச கட்டாய கல்வி உரிமை : ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
schoolas_in_tamil_naduநாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி வழங்குவதற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அரசின் முடிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அளவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உத்தரவையும் கடந்த நவம்பர் மாதமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணி தேர்வுகளுக்கு இணையதளத்தில்பதிவு செய்வது எப்படி?

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.

குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா

Sempattai_Kurumpanaiஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.

Thursday, 26 April 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : தூக்கணாம் குருவி கூடு

சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.

தங்களுக்கு வாழ தகுதியான இடத்தை தெளிவாக தேர்வு செய்து சிறுக சிறுக பொருள் சேமித்து துல்லியமாக தனக்கும் குஞ்சுகளுக்கும் ஏற்ற அனைத்து வசதிகளுடன் அவை தங்கள் வாழ்விடங்களை அமைக்கும் விதம் புதிரானது.

இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.

இன்று முதல் 10 - ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம்

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

மனைவிக்காக ரூ.9,50,000 கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய முன்னாள் டிஜிபி

ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

Police_ex_DGP_rathoreஅரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.

பரத்பூர் கலெக்டர் அதிரடி : திருமண பத்திரிகையில் பிறந்த தேதி கட்டாயம்

குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இறக்கும் மீனவர் பிள்ளைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் மற்றும் பல : சட்டசபையில் அமைச்சர் ஜெயபால் பேசியது

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயபால் சட்டசபையில் நேற்று பேசியதாவது:  
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.

Wednesday, 25 April 2012

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு காதல் : பிடிபட்ட காதலர்கள் : இன்டர்நெட் தாக்கம்

இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏற்பட்ட நட்பால், நாகர்கோவில் மாணவியின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து மாதம் ஒருமுறை நள்ளிரவில் வந்து சென்ற மாணவர் சிக்கினார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரை எச்சரித்து அனுப்பினர்.
Nagercoil_loversநாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இன்டர்நெட் சாட்டிங்கில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு சென்னையில் உள்ள ஒரு இன்ஜினிரியங் மாணவரின் நட்பு கிடைத்தது.

விலை ரூ 300 இல் தானாகவே 108க்கும் உறவினர்களுக்கும் தகவல் தரும் கருவி

விபத்தில் சிக்கினால் 108 மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை லாயோலா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் ஐசன் ஐசக், விவோ, மன்பிரீத், மார்ட்டீன். இவர்கள் 4 பேரும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலா ரூ 1 கோடி நஷ்டஈடு : கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி கப்பல் நிறுவனம் வழங்கியது

கொல்லம் கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ 1  கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
கொல்லம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த அஜீஸ் பிங்கோ, குளச்சலை (தற்போது கொல்லத்தில் வசித்தவர்) சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர்.

Tuesday, 24 April 2012

தொடர் மதிப்பீட்டுமுறை அறிமுகம் : வரும் கல்வியாண்டு (1 - 8 வகுப்பு வரை)

நாடகம், குவிஸ், உரை யாடல் என்று பன்முக திறமையாளர்களாக மாணவ மாணவியர் விளங்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு முழு மை யான தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மனப்பாட முறை கல்வி யில் இருந்து செயல்வழி கல்விக்கு தமிழக கல்வி முறை மாற்றம் பெற்ற நிலையில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணுதல் மற்றும் சிந்தனைதிறன்சார் மதிப்பீடு முறை தவிர்த்து முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.