Thursday 7 June 2012

மூலிகை நிறுவன மோசடி : ஆசை காட்டி காசை பறிக்கும் வேலை

உடல் எடை குறைப்பதாக ரூ 4 லட்சம் ஏமாற்றி பறித்து விட்டதாக மூலிகை நிறுவனம் மீது பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த பூங்கொடி கணவர் அசோக்குமாருடன் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Wednesday 6 June 2012

A Doctor : really a dedicated Human : 1 Rupee Dam

Somli-riverAnil Joshi had a clinic here since 1994 and knew most of the gaonwallahs. “Some of my patients were farmers who obtained 100-200 quintals of food grain during harvesting season but after eight years of meager rains, they were in a very bad situation and had to buy food grain to feed their family,” says 39-year-old Joshi. The situation was so bad that patients couldn’t pay his fee either.

As a resident of Mandsaur, (the district HQ) Joshi has seen better days when rains were sufficient and farmers harvested enough to sustain their families. Things had taken a turn for the worse after 1999 as rainfall began to decrease.In 2008, the village faced its worst drought and water scarcity.

Tuesday 5 June 2012

மத்திய அரசு கூடுதல் வரி திட்டத்தால் டீசல் கார் விலை உயரும்?

டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வரி உயர்வு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று தெரிவித்தார்.
india-diesel-car-price-to-go-upடீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. அப்படியிருந்தும் டீசலின் விலையில் லிட்டருக்கு ரூ 15.35 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, டீசல் கார்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை குறையும். அதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும் என மத்திய அரசு கருதுகிறது.

டெங்குவை தொடர்ந்து பரவுகிறது சிக்குன் குனியா!

tirunelveli-nagercoil-mosquito-feverதமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Saturday 2 June 2012

"கொடுமைக்கார மனைவியுடன் கணவன் எப்படி முழு மனதுடன் வாழ முடியும்?" : ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு

"கொடுமைக்கார மனைவியுடன் எந்த கணவனால் தான் சேர்ந்து முழு மனநிலையுடன் வாழ முடியும்? மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது" என்று ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
wives-become-horrible
முன்னாள் எம்எல்ஏ சண்முகத்தின் மகள் ஹேமலதாவுக்கும் வேளச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

ஜாமீன் வழங்க ரூ 5 கோடி லஞ்சம் வாங்கிய நீதிபதி

ரூ 5 கோடி லஞ்சமாக பெற்றுக் கொண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிபதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
corrupted-judge-pattaabi-raama-raoஆந்திரா & கர்நாடகா எல்லையில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் கர்நாடக முன்னாள் அமைச்சர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டிக்கு சொந்தமானது. சுரங்க நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

Thursday 31 May 2012

புகையிலையை முற்றிலும் ஒழித்து வழிகாட்டும் கிராம மக்கள்

ஆந்திராவில் ஒரு கிராமத்தினர் புகையிலையை முற்றிலும் ஒழித்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மடுகுலா தாலுகாவில் உள்ளது பொங்கலிபகா கிராமம். 1,600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் புகையிலை ஒழிக்க கிராமத் தலைவரும் மக்களும் முடிவு செய்தனர். புகையிலையை ஒழிக்க பாடுபட்டு வரும் இந்திய இயற்கை சுகாதார அறக்கட்டளையும் கிராம மக்களுக்கு ஊக்கம் அளித்தது. இந்த அறக்கட்டளையும் கிராம மக்களும் செய்த முயற்சியால் பொங்கலிபகா கிராமம் இன்று புகையிலை இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

பேஸ்புக் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற பேஸ்புக் இணையதளத்தின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
Delhi-High-courtபல்வேறு மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெறுவதாக கூறி டெல்லியை சேர்ந்த முப்தி அஜாஸ் என்பவர் பேஸ்புக், கூகுள், யாஹூ மற்றும் சில இணையதளங்களுக்கு எதிராக டெல்லி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் கட்டணம் வசூல் : தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக இருந்தவர் பால்ராஜ். கடந்த 2006ம் ஆண்டு மாணவர்களிடம் ரூ 7 லட்சத்து 41,501 ரூபாயை கூடுதல் கட்டணமாக வசூலித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.

Thursday 24 May 2012

ஜப்பானில் படிக்க கல்வி உதவி தொகை : தூதரகம் அறிவிப்பு


ஜப்பானில் படிக்க ஜப்பான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
scholarship-for-abroad-studiesசர்வதேச மாணவர்கள், ஜப்பானில் தங்கி இளநிலைக் கல்வி (யுஜி) படிப்பதற்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது. கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (மெக்ஸ்ட்) கீழ் இயங்கும் சர்வதேச மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளநிலை கல்வி படிக்கலாம். ஏப்ரல் 2013 முதல் 3, 4 மற்றும் 5ம் ஆண்டுகளில் உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வி கடையின் அட்டூழியங்கள்

"ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டி.சி.யை தபாலில் அனுப்பிய திருவில்லிபுத்தூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
virudhunagar-school-head-master-arrestedவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் கடந்தாண்டு "ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ 3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இதற்கான வகுப்புகள் நடைபெறவில்லை.

Wednesday 23 May 2012

“விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது."

agriculture-universities-colleges-in-Indiaகோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, மதுரை, தேனி, நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் விவசாய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டு வளர்ப்பு), பி.டெக் (பயோ டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி, வேளாண்மை பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிஎஸ் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்) என 13 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கல்லூரிகளிலும் கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6 ஆகும்.

Tuesday 22 May 2012

குளச்சல் : 2 மீனவர்கள் மாயம் : 2வது நாளாக தேடுகிறார்கள்

குளச்சல் அருகே மாயமான 2 மீனவர்களை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
kanyakumari-fishermen
குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர்கள் மரியடேவிட்(36), எடிசன்(34). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் பைபர் வள்ளத்தில் கடலில் மீன்பிடிக்க  சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இருவரும் நேற்று மாலை ஆகியும் கரை திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர்.

Monday 21 May 2012

பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் வருமானத்திற்கு ஏதுவாக கத்தரி, வெண்டை, மிளகாய் என பல்வேறு வாணிப பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய் சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். சமப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பர். குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் மேல் பகுதியில் வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். இதில் கொடியை ஏற்றி படர செய்வர். 150 நாட்கள் வரை பயன்தர கூடிய பயிராகும். 45 நாட்களில் கொடிகளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

அரசு பாலிடெக்னிக்குகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு இன்று (21ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக்களில் முதலாம் ஆண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர பட்டய படிப்பில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (21ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு பாலிடெக்னிக் களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தூத்தூர் பகுதி மீனவர்கள் கோஷ்டி மோதல்

தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மீது குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆன்றனி ஆரோக்கியதாஸ்(30) என்பவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் தனக்கு சொந்தமான படகை கடலுக்குள் தள்ளி கொண்டு சென்றபோது அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு மீது மோதியுள்ளது. இதில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் தங்கள் படகு மீது ஏன் மோதினாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி ஆன்றனி ஆரோக்கியதாசுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் செல்வம், சிபுநேஸ், சிலுவை அடிமை ஆகியோர் படுகாயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடபடுகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
+2-result-sms-on-mobileதேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் மதிப்பெண்களுடன் SMS பெற உங்கள்...


பதிவு எண் :
பெயர் : 
மொபைல் நம்பர் :

பதிவு செய்யவும்
 click here : Get your +2 result SMS to your mobile with marks


பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர்.

Saturday 19 May 2012

மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை தேர்வு 22,884 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். பள்ளி மேல்நிலை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுது தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர்கள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது.

கோடிமுனை : ரயிலில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.
kodimunai-kanyakumari-Distஇதில் ரெமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது செல்போனில் இருந்த சிம்கார்டு கிடைத்தது. அதை வைத்து நடத்திய விசாரணையில் அவர் குமரி மாவட்டம் கோடிமுனையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Thursday 17 May 2012

சுப்ரீம் கோர்ட் : கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. : போலீசாருக்கு பாக்கெட் நிறையும்.

traffic-police-fining-driversகார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க கருப்பு பிலிம் ஒட்டப்படுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு காருக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பெரும்பாலானவற்றில் கருப்பு நிறத்தில் இந்த பிலிம்கள் ஒட்டப்படுகின்றன. இதை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் டிரைவர்களுக்கு முன்பின் வரும் வாகனங்கள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிடுகிறது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘இந்தியா முழுவதிலும் மே மாதத்திலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. அதை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

கேரளா : 21 வயது ஆனவர்களுக்கு மட்டுமே மது

கேரளாவில் இனிமேல் 21 வயது ஆனவர்கள் மட்டுமே ஒயின் ஷாப்புகளில் மது வாங்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கு ரேஷன் கடைகளில் இருக்கும் கியூவை விட ஒயின் ஷாப்புகளின் முன் நிற்கும் கியூதான் அதிகமாக இருக்கும். கேரளாவில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனைக் கழகம் சார்பில் மூலைமுடுக்குகளில் கூட சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Monday 14 May 2012

சேலத்தில் சோகம் : சீட் பிடிக்க உயிர் போன பரிதாபம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ஓடும் ரயிலில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறிய 2 குழந்தைகளின் தந்தை, அவர்கள் கண் முன்னே ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
salem-junction-railway-station
கோவையிலிருந்து மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.30 மணிக்கு வந்தது. 4வது பிளாட்பாரத்தில் வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர்.

60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க அனுமதி

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil-nadu-ration-card-application
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

Sunday 13 May 2012

ஒருதலை பட்சத்தின் விளைவுகள் : எது பெண்ணுரிமை?

கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
bomb-threat-to-templesமுதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு கடந்த 9-ம் தேதி இரவு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இ-மெயில் திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் மற்றும் திருவில்லிபுத்தூர் போலீசார் அக்கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜூன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil-Nadu-SSLC-Exam-rsultsதமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. அதில் 10,312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் முறையாக இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வு நடந்தது. இந்த முறையின் கீழ், 19,574 மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.