Wednesday, 14 December 2011

62 year Old lady breaks traffic rules 1500 times [62 வயது பாட்டிக்கு 62 லட்சம் அபராதம்]

An elderly British woman, living in Italy, has been finally slapped with motoring fines totalling over $118,000 (6 lacs) after being tracked for many days by Italian police investigators.
The 62-year-old woman, who has not been identified, was traced after her Mercedes Benz car was photographed breaking city speed limits and entering traffic restricted areas 1,500 times in a matter of weeks, the Daily Mail reported.
Initially, Italian police in Florence were hampered in their attempts to trace her, as her car carried a British number plate and they were not allowed access to vehicle registration systems in other countries.
The woman, who lives in Florence, the capital city of Tuscan region, was eventually nabbed after police spotted the Mercedes parked in a street in the city and waited for her to return to it.
Just as she arrived, policemen handed over the details of the staggering amount of unpaid fines.

[காரில் ஓவர் ஸ்பீடு : இத்தாலியின் டஸ்கன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று அதிவேகமாக செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். நோ பார்க்கிங் பகுதிகளில் அந்த கார் நிறுத்தப்படுகிறது. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் செல்கிறது என்றும் தெரியவந்தது. இங்கிலாந்து பதிவெண் கொண்டிருந்ததால் அதன் சொந்தக்காரர் யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கார் கடந்த சில நாட்களுக்குள் 1,500 முறை ஓவர் ஸ்பீடில் போனது தெரியவந்தது. 
இந்நிலையில், பிளாரன்ஸ் பகுதியில் ஒரு கடை வாசலில் அந்த கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்றனர். காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றிருந்த 62 வயது மூதாட்டியை கையும் களவுமாக பிடித்தனர். போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக அவருக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.]

அப்பப்பா!!! ஒரு பால் உறவு : கோட்டாறு பகுதியில் : கணவன்களை உதறிவிட்டு ‘இணைந்து’ வாழ்ந்த பெண்கள்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வசிக்கும் இரு பெண்கள் இடையே லெஸ்பியன் உறவு இருந்து வந்தது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் பழக்கத்தை நீட்டித்து வந்தனர். அரசல், புரசலாக இருந்த இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. குடும்ப நலன் கருதி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கிடையே இரண்டு பேரில் ஒரு பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்றார். மற்றொரு பெண்ணின் கணவன் தனது மனைவியை தகாத பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் இரு பெண்களையும் அழைத்து பேசி அறிவுரைகள் வழங்கினர். ஆனால் இந்த பழக்கத்தில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் மாயமானார்கள். பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
உறவினர்கள் சென்று இரு பெண்களையும் மீட்டனர். நேற்றிரவு அவர்களை கோட்டாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் பல்வேறு அறிவுரைகளை கூறினர். இருப்பினும் இரு பெண்களையும் பிரிக்க முடியவில்லை.
எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம் என இருவரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து ஊர் பிரமுகர்களை அழைத்து பேசிய போலீசார் இரு பெண்களையும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைத்தனர்.

எஜமானுக்காக உயிரை கொடுத்த நாய் [ Dog Sacrifices Life for Master]


தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி (40), இரண்டு நாய்க் குட்டி வளர்த்தார். வழக்கம்போல, நேற்றும் அவருக்கு அருகிலேயே நாய்க் குட்டிகள் படுத்து தூங்கின. நள்ளிரவு நேரத்தில் அசந்து தூங்கியபோது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. எஜமானரின் அருகில் பாம்பு செல்வதை பார்த்து குரைத்த ‘மகாலட்சுமி’ என்ற நாய்க் குட்டி, பாம்புடன் போராடி அதன் தலையை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தி விஷம் ஏறியதில் நாய்க் குட்டியும் பரிதாபமாக இறந்தது. பாம்பை கவ்விய நிலையில் உயிர் விட்ட நாய்க் குட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பழனி.          (Tamil Murasu)

10 ஆயிரம் பெண்கள் மறியல் : 10&வது நாளாக இன்றும் படையெடுப்பு லாரி, வேன்களில் அணிவகுப்பு

கேரள அரசை கண்டித்து 10&வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லை நோக்கி திரண்டனர். எல்லையில் 10 ஆயிரம் பெண்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட கேரள & தமிழக எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க போலீசார் கடந்த இரு நாட்களாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.
தேனி நகர் பகுதியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. கேரள பிரமுகருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. 10-வது நாளாக இன்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரையில் இருந்து தேனிக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தேனியில் இருந்து கம்பம், கூடலூர் பகுதிக்கு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 20-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கம்பத்தில் உழவர்சந்தை அடைக்கப்பட்டு, வியாபாரிகள் பேரணியாக சென் றனர்.
உத்தமபாளையம் அருகே கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓபுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று காலை கேரள மாநிலம் குமுளி நோக்கி புறப்பட்டனர். 500&க்கும் அதிகமான பைக்குகள், மினிலாரிகளில் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூரில் 10 ஆயிரம் பெண்கள் இன்று காலை திரண்டு ஊர்வலமாக வந்தனர். லோயர்கேம்ப் செல்ல முயன்ற அவர் களை போலீசார் தடுத்தனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மயிலாடும்பாறை அருகே உள்ள தழையூத்து கிராமத்தில் கேரள பிரமுகருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இன்று காலை எஸ்டேட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அங்கு பதற்றம் இன்னும் தணியவில்லை.
வெற்றி நம் பக்கம்தான்’ வீதி வீதியாக தண்டோரா
பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்ககோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களின் தீவிரத்தை குறைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கலெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தேனி மாவட்டம் முழுவதும் இன்று காலை தண்டோரா செய்யப்பட்டது.
‘அணை விவகாரத்தில் கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. வெற்றி நம் பக்கம்தான். இதனால் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். 999 ஆண்டு உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது.
பதற்றம் அதிகமாக உள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் பகுதிகளிலும் போலீசார் மைக்கில் இதை அறிவித்தபடி சென்றனர்.
சாப்பாட்டுக்கு தவிக்கும் போலீசார்
கடந்த ஒரு வாரமாக கூடலு£ர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் காரணமாக அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மறியல், உருவ பொம்மை எரிப்பு, ஊர்வலம் என்று பல பிரச்னைகளை அவர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே, சரியான சாப்பாடு கிடைக்காமல் போலீசார் சோர்ந்து போகின்றனர். பலர் பழம், பிரட் என கிடைத்ததை உண்டு பசியாறி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு : சுற்றுலா பயணிகள் குறைந்ததால் வெறிச்சோடும் தேக்கடி, மூணாறு

முல்லைப் பெரியாறு பிரச்னையால் பதற்றம் நிலவுவதால், கேரளாவின் புகழ் பெற்ற தேக்கடி, மூணாறில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது. கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், இந்த வழியாக கேரளாவுக்குள் கடந்த 2 வாரங்களாக எந்த போக்குவரத்தும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து குமுளி சோதனைச் சாவடி வழியாக சரக்குகள் எதுவும் செல்லாததால், கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
சுற்றுலா செல்பவர்கள், சபரிமலை செல்பவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால், கேரளாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கேரளாவின் முக்கிய வருமானங்களில் சுற்றுலா வருமானம் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில்தான் சர்வதேச சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மூணாறு ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த இடங்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில்தான் அதிகளவில் பயணிகள் வருவார்கள்.
வனத்துறையின் அதிகாரபூர்வ கணக்கின்படி கடந்த 2010, நவம்பரில் 62,148 உள்ளூர் பயணிகளும், 4,600 வெளிநாட்டினரும் தேக்கடி வந்துள்ளனர். இதே ஆண்டு, டிசம்பரில் 70,468 உள்ளூர் பயணிகளும், 4238 வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த நவம்பரில் 52,298 உள்ளூர் பயணிகளும், 3,736 வெளிநாட்டினரும் வந்துள்ளனர்.
உச்சக்கட்ட சீசன் நேரமான இந்த டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஓட்டல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூணாறில் உள்ள பல ஸ்டார் ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெரும்பாலான அறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தேக்கடி, மூணாறில் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதால் கேரள சுற்றுலாத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
படகு சவாரிக்கு ஆளில்லை
தேக்கடியில் படகில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், சில தினங்களாக பயணிகள் இன்றி படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் தேக்கடியில் நடந்த படகு விபத்தில் 45 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால், ஓராண்டுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்து இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் சகஜநிலை திரும்பி, பயணிகள் வருகை அதிகமானது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது, முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தேக்கடியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் ரன் குவிப்பு : முகுந்த் 220, பத்ரிநாத் 102 கார்த்திக் 103* விளாசல்

குஜராத் அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் (எலைட், பி பிரிவு), தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 445 ரன் குவித்துள்ளது. அபினவ் முகுந்த் (220), பத்ரிநாத் (102) கார்த்திக் (103 அபாரமாக சதம் விளாசினர்.
அகமதாபாத், சர்தார் பட்டேல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர். விஜய் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஈஸ்வர் சவுத்ரி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.
அடுத்து முகுந்த்துடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 223 ரன் சேர்த்து அசத்தியது. பத்ரிநாத் 102 ரன் (214 பந்து, 14 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க முகுந்த் ரன் வேட்டையை தொடர்ந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்துள்ளது. முகுந்த் 150 ரன் (264 பந்து, 22 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். குஜராத் பந்துவீச்சில் சவுத்ரி 2 விக்கெட் கைப்பற்றினார். விளாசல்

கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளிடம் போராட்டக் குழுவினர் சோதனை : 16, 17, 18 தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்குள் செல்லும் அதிகாரிகளிடம் போராட்டக்குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலைய பணிக்கு செல்பவர்களை கண்காணிக்க வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போராட்டக்குழுவினர் ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. வரும் 15ம் தேதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து ஒப்பந்த பணியாளர்களும் வெளியேற வேண்டும். அன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய, மாநிலக்குழுக்களுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எவை அத்தியாவசியப்பணிகள் என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்ற கோ ரிக்கைகள் ஏற்கப்பட்டன.
நேற்று முதல் அணுமின்நிலைய ஊழியர்கள் செல்லும் பஸ்கள் முதல் அதிகாரிகள் செல்லும் கார்கள் வரை வழிமறித்து விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் போராட்டக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சோதனையிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை போராட்டக் குழுவினர் அடையாள அட்டையை காட்டக்கூறி கேட்டனர். அணுமின்நிலையத்திற்குள் அந்நியர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பில் ஈடுபடும் எங்களை எந்த அதிகாரமும் இல்லாதவர்கள் சோதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று மனம் குமுறுகின்றனர்.
கூடங்குளத்தில் தற்போது செய்யப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் விவரம் குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் ராஜகிருபாகரன்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நிம்மதியான பணிச்சூழல் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் வரும் கல்வியாண்டில் சென்னை கல்பாக்கத்திலோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு அணுமின்நிலையங்களிலோ மாறுதல் பணி கேட்க தொடங்கி விட்டனர். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கூடுதல் அணுஉலைகளை நிறுவுவதற்காக 3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் 16ம் தேதி ரஷ்யா செல்கிறார். இதையடுத்து 16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடங்குளத்தில் கடையடைப்பு நடத்தவும், கடலோர கிராமங்களில் மீன்பிடிக்க செல்லாமல் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

பத்திரங்கள் பதிவு செய்வதற்கு பொதுமக்களே ஆவணங்கள் எழுதலாம்

இணையதளத்தில் படிவங்கள் 
தாங்களாகவே ஆவணங்களை எழுதி தாக்கல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்கள் இணைய தளத்தில் உள்ளது என கலெக்டர் மதுமதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள், ஆவண எழுத்தர்கள் மூலமாக எழுதப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் தாமாகவே ஆவணங்கள் தயாரிக்க உதவிடும் வகையில் எளிய மாதிரி படிவங்கள் பத்திரப்பதிவுத்துறை மூலமாக வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி படிவங்களை பதிவுத்துறை இணையதளத்தில் www.tnreginet.net பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகங்களில் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மாதிரி ஆவணங்களை பயன்படுத்தி ஆவணதாரர்களே ஆவணம் எழுதி தாக்கல் செய்ய ஏதுவாக தாங்கள் பதிவு செய்ய வேண்டிய பொருள் குறித்த விவரங்களை இணையதளத்திலோ, அலுவலகத்திலோ தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தின் மதிப்பிற்கு ஏற்ப பத்திரங்கள் வாங்கி பிழைகள் இல்லாமல் தயார் செய்து பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருமணங்கள் பதிவு செய்யவும், வில்லங்கச் சான்று நகல் மனு பெறவும் தேவையான விண்ணப்பப் படிவங்களும் பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாதிரி படிவங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் செய்து பயனடையலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை : கல்லூரிகளில் செமஸ்டர் போல

அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டு முதல் முப்பருவ தேர்வு (ட்ரைமஸ்டர்) முறை நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கெனவே மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த கருத்தை ஏற்று கடந்த முறை ஆட்சியில்இருந்த திமுக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தது.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், முழுக் கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்களை 3 பருவங்களாக பிரித்து படிக்கும் வகையில் முப்பருவ தேர்வு முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: வரும் கல்வி ஆண்டு (2012 & 2013) முதல் இந்த முப்பருவ தேர்வு முறை 1 முதல் 8ம் வகுப்புவரை நடைமுறைக்கு வருகிறது. பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும்.
மேலும், ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக, தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம வகுப்புகளுக்கு 2013 & 2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும்.
முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது.
முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள்.
ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும், பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை சிடி : பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தயாரித்தது

கேரள முகத்திரையை கிழிக்கும் : தமிழகம் முழுவதும் விநியோகம்.
முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்த குறும்பட சிடியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.



முல்லை பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் "டேம் 999" படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், கேரள அரசின் பொய் பிரசாரத்தை தோலுரித்து காட்டும் விதமாகவும் தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளனர். சிடியாக உருவாகியுள்ள இந்த குறும்படத்தை தமிழகம் முழுவதும் தமிழர் அமைப்புகள் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றுடன் துவங்கும் இந்த குறும்படத்தில், முல்லை பெரியாறு அணை பிரச்னையும், அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் முழு விளக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. பாலாறு, காவிரி தண்ணீரை ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்களால் தரமறுக்கப்படும் நிலையில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை தண்ணீரையும் 142 அடியாக உயர்த்த விடாமல் கேரளா தடுத்து வருகிறது.
தற்போது உள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழ் 50 அடி பள்ளத்தில் புதிய அணையை கட்டுவதன் மூலம், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவை குறைக்கலாம் என்றும், அத்துடன் இடுக்கி அணைக்கு கூடுதல் தண்ணீரை கொண்டு சென்று மின் உற்பத்தியை அதிகரிக்கலாம் என திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது என தெளிவாக வரைபடங்களுடன் எடுத்துரைக்கப்படுகிறது.

Tuesday, 13 December 2011

பெண் மந்திரவாதியின் தலை துண்டிப்பு : சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் பில்லி சூனியம் வைத்து மந்திரம் செய்து வந்த பெண்ணின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. நாட்டில் மந்திரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமினா பின்ட் அப்துல்ஹலிம் நாசர் என்ற பெண் பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் பரவியதும், அமினாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜாவ்ப் நகரில் நேற்று அமினாவின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை சட்டவிரோதமாக செயல்பட்ட 73 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமரி (மார்த்தாண்டம்) தொடர் சோகம் : ரூ 650 : பெண் தீக்குளித்து தற்கொலை - கணவரும் கருகினார்

எதுவும் அறியாத 2 குழந்தைகள் 
மார்த்தாண்டம் அருகே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கடவிளை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (35). லோடுமேன். இவரது மனைவி விஜயா (33). இவர்களுக்கு சுதீஸ் (9), ரதீஸ் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் தனது சட்டை பையில் ரசல்ராஜ் ரூ.650 வைத்திருந்தார். அந்த பணத்தை கணவருக்கு தெரியாமல் விஜயா எடுத்து, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறார். நேற்று மாலை இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு தெரியாமல் ஏன் பணம் எடுத்தாய்? என மனைவியிடம் ரசல்ராஜ் கேட்டார். அதற்கு அவர் நான் பணம் எடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை தான் வாங்கினேன் என கூறினார். கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் , மனைவியை ரசல்ராஜ் கடுமையாக திட்டி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று, வாசல் அருகில் ரசல்ராஜ் நின்று கொண்டிருந்தார். வீட்டுக்குள் இருந்த விஜயா தனது கணவர் திட்டியதால் மன வேதனையில், மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். 
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரசல்ராஜ் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகி அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை விஜயா இறந்தார். ரசல்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். (Tamil Murasu)
என்னதான் சொல்ல???? அனுதாபம் தெரிவிப்பதா??? கோபத்தை கொட்டி தீர்ப்பதா???
ஏன் இந்த பெண் தான் பெற்ற குழந்தைகள் வாழ்க்கையை கூட எண்ணி பார்க்க வில்லை???
ஒரு நொடி பொழுதின்... சஞ்சலம்... ஆத்திரம்.... குடும்பத்தை குதறி விட்டது.

42 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு : டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி :

ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம் : முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசு துறை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்மூலம் நடத்தப்படும் கால்நடை இன்ஸ்பெக்டர், பல் மருத்துவர் மற்றும் குரூப் 1 உள்ளிட்ட பல தேர்வுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, டிஎன்பிசி முன்னாள் சேர்மன் செல்லமுத்து மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 14 பேரின் வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 8 பேர் வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். ஒரே நேரத்தில் பல இடங்களில் ரெய்டு நடந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் எஸ்பியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் மணி. இவர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்தார். சென்னை வேளச்சேரி சீதாபதி நகரில் உள்ள இவரது வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை போட்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள முருகானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றியவர்.
சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றுபவர் செந்தில்குமார். காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் உள்ள இவரது வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் இன்று காலை சோதனை நடத்தினர். ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக இருப்பவர் சங்கரன். வானவில் நகரில் உள்ள இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பிரபல தொழில் அதிபர்கள், புரோக்கர்களின் வீடுகள் என சென்னையில் 14 இடங்களில் ரெய்டு நடத்தினர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீஸ் உட்கோட்ட டிஎஸ்பி அன்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையிலான குழுவினர் இன்று காலை சோதனை தொடங்கினர். டிஎஸ்பி அன்பு விடுமுறையில் இருப்பதால் ஆம்பூர் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டையில் டிஎஸ்பி ஒருவரின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏவீட்டிலும் சோதனை :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாதையன். அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். இவரது வீடு, ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ளது. இங்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று காலை 7 மணிக்கு சோதனை நடத்தினர். மாதையனுக்கும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சென்னையில் மட்டும் 14 இடங்களில் இன்று ரெய்டு நடந்தது. தவிர மதுரையில் 7, சேலம் 5, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 2, தேனி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் ரெய்டு நடந்தது.

புதிய அணையை எதிர்த்து கேரளாவில் தமிழர்கள் போராட்டம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. கேரளாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தேனி மாவட்ட மக்கள் கொந்தளிந்து எழுந்துள்ளனர். அங்கு, 9வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் ஏலத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் இன்று கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 1500 பேர் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஆட்டோக்கள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை.
கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுவால் ஒருவரின் உயிரை பறித்து விட்டு வாழ்வை தொலைத்து நிற்கும் குமரி இஞ்சினிரியிங் வாலிபர்கள்

"ஆபாசமாக திட்டியதால் கொன்றோம்."
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் புலிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபு (24), ரத்தீஸ் (24) என்பது தெரிந்தது. தூங்கிக் கொண்டு இருந்தபோது அந்த வாலிபரின் காலை மிதித்ததால் ஏற்பட்ட தகராறில், மணலை வாயில் திணித்து கொன்று விட்டதாக போலீசில் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், "நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். "தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், எனது சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு விட்டது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் மேஸ்திரியாக வேலை செய்கிறேன். ரத்தீஸ் கொத்தனாராக வேலை செய்கிறார்.
எங்களுடன் 7 பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று வேலை எதுவும் இல்லை. அதனால், ராயப்பேட்டையில் உள்ள கான்ட்ராக்டர் சேகர் என்பவரை சந்திப்பதற்காக சென்றோம். அவர் கூலிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.
மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றோம். அங்கு மது அருந்து விட்டு குளித்தோம். மீண்டும் இரவிலும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து, கலங்கரை விளக்கம் அருகில் மது அருந்தினோம்.
போதையேறிய பிறகு கடற்கரை மணலில் தூங்குவதற்காக நடந்து சென்றோம். அப்போது, வழியில் வாலிபர் ஒருவர் படுத்து இருந்தார்.
போதையில் தள்ளியாடியபடி சென்றபோது, அந்த வாலிபரை மிதித்து விட்டோம். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், எங்களை பார்த்து ஆபாச வார்த்தைகளில் திட்டினார்.
இதனால், எங்களுக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அந்த வாலிபரை அடித்து உதைத்தோம். அதனால் "காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள்” என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு யாரும் வந்து விடக்கூடாது என பயந்து, அந்த வாலிபரின் கைகளை ரத்தீஸ் பிடித்துக்கொள்ள, அவரது வாயில் மணலை திணித்தேன்.
இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதே பகுதியில் மணலை தோண்டி புதைத்தோம். இடுப்பு வரை புதைத்து விட்ட பிறகு, போலீசார் வந்து எங்களை பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

வேலை நேரம் அதிகரிப்பு??? : ஜனவரி 2ம் தேதி முதல் அமலாகிறது அரசு பள்ளிகளில்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியது. இதை அதிமுக அரசு, இக்கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்க முயன்றது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து இந்த கல்வித்திட்டத்தை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. இது தவிர, உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தியதால் பள்ளிகளில் பாடங்களை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தையும் அரை மணி நேரம் அதிகரித்து, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை 9.30 மணிக்கு முதல் பாடவேளை தொடங்குகிறது. மதியம் 12.40 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு மாலை 4.10 மணி வரை வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் 11.10 வரையிலும், மாலையில் 3.20 முதல் 3.30 வரையிலும் குழந்தைகளுக்கு இடைவேளை விடப்படுகிறது. புதிய உத்தரவுப்படி, இனி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மாலை 4.40 மணி வரை செயல்படும். இந்த உத்தரவுக்கு ஆசிரியர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பள்ளிகளின் வேலை நாள் குறைந்ததால் ஏற்கனவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமைகள் பணி நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி வேலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுவர். அரை மணி நேரம் கூடுதலாக வகுப்புகளை செயல்படுத்துவதை காட்டிலும், மதிய உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தாலே போதும்’’ என்றனர்.

Rs.43 Lakhs Phone Bill in just 20 Days : Man arrested for Fraud

In Mumbai a VSNL customer has been arrested in supporting the fake address while enrolling for a wireless connection where he wants to make International calls,As VSNL was shocked with one telephone bill.As in the Last week, VSNL officials were in search for one of their customer who made the bill for about 43 lakhs in the span of 20 days whp had recently signed up for a wireless connection. 
Further, in order to evade bill payment, the accused registered himself with a fake address to throw the police off his trail. However, he was arrested on Saturday for cheating and forgery. 
According to the police, the accused, identified as Rishikesh Shukla (30), took a VSNL wireless connection on September 14. He requested for STD and ISD services from the service provider. But VSNL officials got suspicious when they discovered that he made virtually nonstop international calls, running up a bill of Rs 42,52,480 in less than three weeks. He made all the calls between November 3 and 23. On Friday, the officials decided to visit him at his residence only to realise that the address was fake. They registered an FIR against him with the Badlapur police.
After investigations, the Badlapur police succeeded in arresting Shukla, a resident of Kolsewadi, from Kalyan on Saturday. 
"I have arrested Shukla under Section 420 (cheating and dishonesty), 468 (forgery for purpose of cheating of documents), 469 (forgery for purpose of harming reputation) and 471 (using as genuine a forged document or electronic record) of the Indian Penal Code (IPC). I have also demanded the details of the calls which Shukla had made," said Vijay Kumar Bagal, senior inspector, Badlapur police station. The purpose for which he made the calls will become known after officials get the call details, cops said. 
An officer said, As cops got surprised how the accused got a wireless conncetion without a proper authentication from VSNL employees.In case if any one wants a connection, The VSNL officials should demand proper identity proof. It is surprising how they gave the connection to Shukla without asking for any valid proof,"

மாதந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், விடுதியில் தங்காமல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும்;
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதேபோன்று, விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.250 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

முல்லைப் பெரியாறு : ஆக்ரமித்து கட்டிடங்கள் : அரசு உடந்தையாக உள்ளது : பொறியாளர்களுக்கு பாதுகாப்பு : ஐகோர்ட் உத்தரவு

தமிழக பொறியாளர்களுக்கு பாதுகாப்பு 
பெரியாறு அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் தலைமை பொறியாளருமான விஜயகுமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீசாரை நீக்கிவிட்டு, மத்திய போலீசாரை நியமிக்க வேண்டும், போதுமான அளவு தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டும், நவீன தீயணைப்பு கருவிகளை நிறுவ வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை ஏற்கனவே அணையை ஆய்வு செய்த குழு, மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அமல்படுத்தவில்லை. அணைப்பகுதியை கேரளாவை சேர்ந்தவர்கள் ஆக்ரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதற்கு கேரள அரசு உடந்தையாக உள்ளது. அந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம், கேரள அரசின் தலைமை செயலாளர்களுக்கும், தேனி கலெக்டர், எஸ்.பி.க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடையடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் தினமும் 1500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படும். இதன்மூலம் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இவற்றில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. பொள்ளாட்சி, பாலக்காடு வழியாகவும், கம்பம், போடி மெட்டு, குமுளி வழியாகவும், நாகர்கோவில், நெல்லை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் அனுப்பப்படுவது வழக்கம். மீதி 20 சதவீத காய்கறிகளே தமிழகத்தில் விற்கப்படும்.
கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய சுமார் 1000 டன் காய்கறிகள் தடைபட்டுள்ளது.

Monday, 12 December 2011

‘மர்ம குரல்’ : அமெரிக்காவில் கைக்குழந்தையை ஆற்றில் வீசிய தமிழக பெண் :

‘மர்ம குரல்’ கூறியதாக வாக்குமூலம் : மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு
அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண், கைக்குழந்தையை ஆற்றில் வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர் தேவி சில்வியா. வயது 34. இவருடைய கணவர் டோமினிக் பிருத்விராஜ். இவர்களுக்கு மூத்த மகள் ஒருத்தியும், ஜெசிகா என்ற 21 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தமிழகத்தில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் சில்வியா. கணவர் அமெரிக்காவில் வேலை செய்வதால் இங்கு குடியேறினார்.
நியூயார்க் நகரில் ஓடும் ஹட்சன் ஆற்றுக்கு கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையுடன் சில்வியா சென்றார். அங்கு திடீரென தனது கைக்குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை முயன்றார். தகவல் அறிந்து மீட்டு படையினர் விரைந்து சென்றனர். அதற்குள் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
மீட்புப் படையினர் விரைந்து சென்று குழந்தையையும் சில்வியாவையும் மீட்டனர். சிகிச்சைக்கு பின் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்து கொண்டனர். இதையடுத்து சில்வியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சில்வியா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘‘சில்வியா குற்றமற்றவர். அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பைபோலார் என்ற மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்’’ என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த போது, ‘குழந்தையை ஆற்றில் வீசினீர்களா?’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு, ‘ஆமாம், ஆனால், என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. யாரோ என்னிடம் பேசும் குரல் கேட்கிறது. குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு என்னையும் குதிக்க சொன்னார்கள். அதன்படி செய்தேன். என்ன செய்தேன் என்பது தெரியவில்லை’ என்று சில்வியா பதில் அளித்தார்.
இதையடுத்து சில்வியாவுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்வியா தற்போது ஜாமீனில் உள்ளார். இவருடைய 2 குழந்தைகளையும் உறவினர்கள் இந்தியாவுக்கு அழைத்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரியில் பிரமாண்ட குடில்கள் அமைக்கும் பணி தீவிரம் : கருங்கலில் ரூ.10 லட்சம், பாலபள்ளத்தில் ரூ.7 லட்சம்

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் விழாவானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் 25&ந் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவை உலகின் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் இந்த விழாவை வரவேற்கும் விதமாக 1 மாதத்திற்கு முன்பே வீடுகளில் மின்விளக்குகள், மற்றும் ஸ்டார்கள் கட்டி தொங்கவிட்டு விழாவை சிறப்பிப்பது நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 1 ம் தேதி முதல் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பாடல் ஊர்வலங்கள் போன்றவை நடக்கின்றன. மேலும் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து அதில் வண்ண மின்விளக்குகள் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த வகையில் ஆண்டுதோறும் குமரியில் கருங்கல் மற்றும் பாலபள்ளம் போன்ற பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்படும். இந்த வருடம் கருங்கல் பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் மிக பிரமாண்டமான குடில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குடில் அமைப்பு வல்லுனர்கள் ஜஸ்டின், மெர்ஜின் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த குடிலானது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா அரண்மனை வடிவில் உருவாக்கப்படுகிறது. குடில் உள்ளே பைபிள் நிகழ்வுகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வரலாறு போன்றவை கண்களை கூசச்செய்யும் மின்விளக்கு அலங்காரங்களுடன் சித்தரிக்கப்படுகிறது. 100 அடி நீளம், 65 அடி உயரத்தில் இந்த குடில் பிரமாண்டமாக உருவாக்கப்படுவதாக இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெரால்டு, செயலாளர் சந்தோஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுபோன்று பாலபள்ளம் வின்ஸ் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் பிரமாண்ட குடில் உருவாக்கப்படுகிறது. 110 அடி நீளம், 55 அடி உயரத்தில் உருவாகும் இந்த குடில் சீனாவில் போதி தர்மர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹாராவெய்க் என்ற அரண்மனையின் மாதிரியில் உருவாக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், புதுக்கடை, முஞ்சிறை உள்பட பல்வேறு பகுதிகளிலும் புல் குடில்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த குடில்கள் அனைத்தும் 23 ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படுகின்றன. இவற்றை பார்வையிட குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பேர் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது கருங்கல், பாலபள்ளத்தில் நடை பெரும் நிகழ்வு அல்ல... குமரி மாவட்டம் முழுவதும் மக்கள் போட்டிபோட்டு கொண்டு செய்ய கூடியது. மக்கள் திரளாக, குடும்பங்களுடன் வந்து கண்டு மகிழ்வார்கள். நல்ல ஒரு நிகழ்வு. 
உண்மையில் நாம் இவற்றை எதற்காக அமைக்கிறோம்????
கிறிஸ்துமஸ் என்பது நம்பில் யார் பெரியவன் என காட்டி / போட்டி போட்டு கொள்வதற்காகவா???
ஒற்றுமையும், பிறரை மதித்து, பகிர்ந்து, சகோதர உணர்வுடன் இறைவனின் வருகையை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவோம்.  சண்டைகளை தவிப்போம்... ஒற்றுமையுடன் வாழ்வோம்.

அஞ்சுகிராமம் : பொதுமக்கள் முன் மனைவி கழுத்தை அறுத்து கொலை

இன்ஜினியரிங் கல்லூரி ஊழியர் கைது : கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் கொடூரம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் செல்வராஜ்குமார்(36). டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து மகள் அனிதா(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன.
செல்வராஜ்குமார் செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் அசிஸ்டென்டாக வேலை பார்த்து வருகிறார். பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். செல்வராஜ்குமாருக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இரவில் யாரோ அடிக்கடி ஜன்னல் கதவை தட்டியதாக கூறி ஜன்னல் கதவுகளில் மின்சார ஷாக் கொடுத்து வைத்திருந்தார். ஏற்கனவே ஒருமுறை மனைவி மீது சந்தேகம் அதிகரித்ததால் அவருடன் தகராறு செய்து தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மனைவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் செல்வராஜ் மும்பை சென்றார். நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். அப்போது ஊரில் சிலரிடம் மனைவி தன்னை பைத்தியம் எனக் கூறுவதாகவும், அதற்காக மின்சார ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின், வீட்டில் தனியே இருந்த மனைவியிடம் தகராறு செய்தார். திடீரென, எனக்கு மின்சார ஷாக் வைக்க திட்டமிட்டுள்ளாயா? எனக் கூறி மனைவியின் கை மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அனிதாவின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைப் பார்த்த செல்வராஜ்குமார் மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் அனிதாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று செல்வராஜ்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அஞ்சுகிராமம் எஸ்ஐ முத்துராஜ் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் செல்வராஜ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு ஊர்திரும்பிய அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

2012 ஏப்ரல் முதல் பி.எப் பாஸ்புக் வழங்க திட்டம் :

ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டம் & 1952ன்படி, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பி.எப் பங்கேற்பாளர் அட்டை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் மாதந்தோறும் இருப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால், எந்த ஒரு நிறுவனமும் இதை பின்பற்றவில்லை.
இந்நிலையில், 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுமார் 5 கோடி பி.எப் சந்தாதாரர்களுக்கு பங்கேற்பாளர் அட்டை வழங்குவது குறித்து, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள பி.எப் அமைப்பின் அதிகாரம் படைத்த மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அட்டையில், கணக்கு எண், இருப்புத் தொகை, பிறந்த தேதி, வாரிசுதாரர் என பி.எப் கணக்கு பற்றிய அனைத்து விவரங்களும் இதில் இடம் பெறும்.
ஏற்கனவே, கட்டுமானத் தொழில் உட்பட அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பி.எப் பாஸ்புக் வழங்க வாரியம் திட்டமிட்டது. எனினும், ஊழியர்கள் அடிக்கடி நிறுவனம் மாறுவதால் சிக்கல் ஏற்படும் என கருதி இந்த திட்டத்தை கைவிட்டது. அதேநேரம், இதுபோன்ற பிரச்னையை சமாளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

Eunuch declared CM Candidate : முதல்வர் பதவிக்கு திருநங்கை போட்டியிடுகிறார்

உ.பி முதல்வர் பதவி வேட்பாளராக திருநங்கை ஒருவரை ராஷ்ட்ரிய விக்லாங் கட்சி அறிவித்துள்ளது.
உ.பி சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ராஷ்ட்ரிய விக்லாங் கட்சி என்ற சிறிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பில் புரட்சியை ஏற்படுத்தி உள் ளது.
வேட்பாளர் பட்டியலில், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியலிலேயே 5 திருநங்கைகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விரேந்திர குமார் கூறுகையில், ‘‘உ.பி. பேரவை தேர்தலில் மொத்தம் 50 திருநங்கைகளை வேட்பாளர்களாக நிறுத்துவோம். முதல்வர் பதவிக்கான வேட்பாளராக திருநங்கை முன்நிறுத்தப்படுவார். அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். நேர்மையான ஒருவர்தான் தங்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். திருநங்கைகள் நேர்மையானவர்கள் என்பதால், அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளோம்’’ என்றார்.
[The little-known Rashtriya Viklang Party (RVP) has declared an eunuch as its chief ministerial candidate. The party has also decided to field about 50 eunuchs in the coming 2012 UP elections.

"The party has decided to field at least 50 eunuchs from different assembly seats and five names have already been announced," party's national general secretary and UP incharge Virendra Kumar told reporters. "National president of Kinnar Morcha Shobha Bua has been named candidate for Dhaulana assembly seat in Ghaziabad. Shobha will also be chief ministerial candidate of the party," he added. Kumar said first eunuch MLA of the country Shabnam Mausi will be party's candidate from Kanpur cantonment seat.

He said that people want good candidates, as political parties have failed to deliver. Eunuchs are a marginalised section of the society, but their honesty and ability cannot be ignored, he said.

Kumar said that party's election manifesto includes various issues related to eunuchs such as quota in accordance with their population, pension to eunuchs above 40 years, right to live like a common citizen and rehabilitation. He said that while eunuchs neither have children, nor families, therefore they have no reason to indulge in corruption.]

நெய்வேலியில் மேல்நோக்கி குலை தள்ளும் அதிசய வாழை

முக்கனிகளில் ஒன்று வாழை. நெய்வேலியில் வாழை மரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக வாழைமர குருத்தில் இருந்துதான் வாழைக்குலை தள்ளுவது வழக்கம். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் 18வது வட்டம் மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் உள்ள வாழைமரத்தில், தண்டின் நடுவில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி வாழைக் குலை தள்ளியுள்ளது. 
அதிசய வாழை...! நெய்வேலியில் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் வளர்ந்துள்ள அதிசய வாழை.
இந்த அதிசய வாழையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வாழை மரம் வைத்தவுடன் வளரும் பக்க கன்றுகளை ஆரம்பத்தில் இருந்தே அதனை வெட்டிவிடுவது நடைமுறையில் உள்ளதாகும். பக்க கன்று களை வெட்டிவிடும் போது அந்த தண்டில் இருக்கும் செல் முதிர்ச்சி நிலை அடைந்து விடுகிறது. ஆயினும் முதிர்ச்சி அடைந்த செல்கள் தண்டின் நடுப்பகுதியில் இருப்பதால் இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடக்கிறது என ஓய்வுபெற்ற தோட்டக்கலை பராமரிப்பாளர் பழனி யப்பன் தெரிவித்துள்ளார்.