Wednesday, 11 January 2012

அஞ்சுகிராமம் அருகே விளக்கு தவறி விழுந்து பயங்கர தீ குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

அஞ்சுகிராமம் அடுத்த மகாராஜபுரம் அருகே உள்ளது ஹரிதாசபுரம் கிராமம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் சுமார் 25 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனை வரும் கூலி தொழிலாளர்கள். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் இரு மகன்கள் செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன் தினம் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றனர். மகன்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்ற பிறகு செல்லத் துரை மனைவி செல்ல ராணி தனது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தார். விளக்கு அணை யாமல் இருக்க அதிக எண் ணெய் ஊற்றப்பட்டு இருந்தது.

Tuesday, 10 January 2012

Sri Lankan president Mahinda Rajapaksa's relative attacked in Rameshwaram

Thirukumaran Nadesan, husband of Sri Lankan Member of Parliament Nirupama Rajapaksa, was attacked on Tuesday in Rameswaram by a group of activists.

The attack was unleashed when he was coming out of a house after performing puja.
He was on a two-day visit to Rameswaram to offer prayer at Sri Ramanathaswamy temple.


The activists of Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) and Nam Tamilar Iyakkam, who came to know about the arrival of Mr. Nadesan, laid seize to a house at Nadutheru, where he was performing puja, protesting against the Sri Lankan President Mahinda Rajapaksa.

7 ஆண்டுகள் கடந்தும் நிரந்தர பாலம் இல்லை : மணக்குடி பாலப்பணி எப்போது முடியும்?

மணக்குடியில் 7 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் சேதமடைந்த பாலத்துக்கு பதிலாக இன்னும் புதிய பாலம் முழுமையாக கட்டப்படாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது நடந்து வரும், மணக்குடி நிரந்தர பாலத்தின் வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில், பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ரூ 8.47 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாலம் 2 ஆக உடைந்தது.

முல்லைப் பெரியாறும் கேரளா அரசின் நாடகங்களும்

முல்லைப் பெரியாறு விவகாரம் : கேரள அரசின் அழைப்பு நியாயம்தானா?
அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். அந்த அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்காமல் மவுனமாக நிராகரித்து விட்டார்.
இது குறித்து 5 மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். அப்பாஸ் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளா தொடர்ந்து முரண்பாடான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. 32 ஆண்டுகளாக தமிழக அரசு, கேரள அரசுக்கு சுமார் 40 கடிதங்கள் எழுதிவிட்டது. தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர்கள் பல முறை திருவனந்தபுரத்தில் பேச்சு நடத்தினர். அவை தோல்வியில் முடிந்தன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கடந்த 2001ம் ஆண்டில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றியது.

பேராசை பெரு நஷ்டம் : ரூ 5.50 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ 5.10 லட்சத்தை வாலிபர் இழந்தார்

செல்போன் எண்ணுக்கு ரூ 5.50 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் ரூ 5.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்கிருஷ்ணன்(27). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது செல்போன் எண் அதிர்ஷ்ட எண்ணாக தேர்வு செய்துள்ளோம். பல கோடி பரிசு காத்திருக்கிறது.

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட ரேடார் கருவி

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட சாட்டிலைட் இணைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவி ஒரு வாரத்திற்குள் செயல்பட துவங்க உள்ளது.

உலக வெப்பமயமாதலால் துருவப் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் மட்ட உயர்வை கணக்கிட ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் ‘ரேடார் கேஜ்’ கருவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய& பிரான்ஸ் (சரல்அல்டிகர்) நாடுகளின் கூட்டு முயற்சியில் குமரி மாவட்டம் குளச்சல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணம், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்சத்தீவுகளில் இது அமைக்கப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து ரேடார்களும் ‘சார்’ என்ற சாட்டிலைட்டுடன் இணைக்கப்படும். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் செயல்பாடுகளை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம் கண்காணிக்கும்.
இந்தியாவில் முதல் முதலாக குளச்சல் துறைமுக பாலத்தில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் சூரிய வெப்பசக்தியுடன் இயங்கும் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் இஸ்ரோ சார்பில் கடல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ஜோசப் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி துறைமுக அதிகாரி ஜாண்ஜெக செல்வம் மேற்பார்வையில் இதனை அமைத்துள்ளனர்.
இது குறித்து ஜாண் ஜெக செல்வம் கூறுகையில், "கடல் நீர் மட்டத்தை கணக்கிட குளச்சல் துறைமுக பாலத்தில் ரேடார் கேஜ் கருவியுடன், டவர், சோலார் பேனல், பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் இது ஒரு வாரத்திற்குள் சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டு செயல்பட துவங்கும்" என்றார்.

தமிழகத்தில் கோடிக்கணக்கில் புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டு கும்பல் சிக்கியது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவது, தேசிய புலனாய்வு அமைப்பு. இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்தேஷ்க் மற்றும் அவனது கூட்டாளி மார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சில கூட்டாளிகள் மூலம் சென்னையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பின் தென்மண்டல டிஐஜி சேதுராமன் மேற்பார்வையில் டிஎஸ்பி சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது, சென்னை அருகே பள்ளிக்கரணையில் நடத்தப்பட்ட சோதனையில், எஸ் கொளத்தூர் லேபர் காலனியில் தொழிலாளிகள் போல பதுங்கியிருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:
இந்தியா முழுவதும் நெட்வொர்க் வைத்து, இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ 1000, ரூ 500, ரூ 100 கள்ள நோட்டுக்களை வங்காள தேசத்துக்கு கடத்தி வந்து விடுவார்கள். பின்னர், அதை வங்காள தேச எல்லையில் வீசி விடுவார்கள். பின்னர், அவற்றை பொறுக்கி எடுத்து வந்து, நாடு முழுவதும் ஏஜென்டுகள் மூலம் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். மேலும், அடிக்கடி ரயில்கள் மூலம் தான் தமிழகத்துக்கு வந்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போல, தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகள், மதுக்கடைகள், ஆகிய இடங்களில் கள்ளநோட்டுக்களை கொடுத்து நல்ல நோட்டுக்களாக மாற்றியிருப்பது தெரிந்துள்ளது. இதில் சில ஏஜென்டுகளுக்கும் பங்கு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும், இவர்களது கூட்டாளிகள் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லியில் நடத்திய அதிரடி வேட்டையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ், ஐதராபாத்தில் சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசு, நொறுக்குத் தீனிக்கு தடை : பொதுக்குழு கூட்டத்தில்

பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழுவில் பரிசுப் பொருட்கள், கிப்ட் வவுச்சர்கள் தருவது, உணவு கூப்பன்கள் தருவது குற்றமாகும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு வருமாறு:
மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேனீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள், கூட்டம் நடக்கும் முன்பே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு (பங்கு தாரர்களுக்கு) தரப்பட வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் தவிர எந்த பரிசுப் பொருட் களையும் தரக்கூடாது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவு கூப்பன்கள், பரிசு கூப்பன்கள் ஆகியவற்றை தருவதும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும், கம்பெனிகள் சட்டம் பிரிவு 168ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி தரப்படும் பொருட்களுக்கு உரிய தொகையை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கொடுத்துவிட்டாலும், குற்றம் செய்ததாகவே கருதப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையை சரி செய்வதற்காகவும், செலவினங்களை குறைப்பதற்காகவும், மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Monday, 9 January 2012

சவுதி அரேபியாவில் இறந்த குமரி மீனவர் உடலை கொண்டுவர நடவடிக்கை

பள்ளம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஆன்ட்றின்(32). மீனவர். இவருக்கு ஜோன்ஸ் பென்சா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பென்சா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சகாய ஆன்ட்றின் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடந்த 7ம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆன்ட்றின் இறந்தார்.
அவரது உடல் தற்போது சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் ஹெலன்டேவிட்சன் எம்பியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து ஹெலன்டேவிட்சன் எம்பி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வயலார்ரவி மற்றும் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் பைஸ் அகமது ஆகியோரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“கட்டிங்” வெட்டினால் அரைமணியில் கிடைக்கும் : பிறப்பு & இறப்பு சான்றிதழ்

நாகர்கோவில் நகராட்சியில் அலைக்கழிக்கும் அதிகாரிகள்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு & இறப்பு சான்றிதழுக்கு 20 நாட்களுக்கு மேல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு இறப்புகளை பதிவு செய்ய கிருஷ்ணன்கோயில், அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையம், கோட்டார் கழுதை சந்தை, மயில்வாகனம் சோப் கம்பெனி தெரு, வட்டவிளை, கணபதி நகர், குருசடி, வாட்டர் டேங்க் ரோடு ஆகிய 14 இடங்களில் டிவிசன் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் மூலம் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் நகராட்சி ஆவணங்களில் பதியப்படுகின்றன. இந்த சான்றுகளை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் அரசு வேலை நாட்களில் காலை 10 &1, மதியம் 2 & 430 மணிவரை கட்டணம் செலுத்தி 3 நாட்களில் பெறலாம். இதற்காக விண்ணப்படிவம் ரூ. 2 வசூலிக்கப்படும். பின்னர் அதில் ரூ.2க்கான நீதிமன்ற வில்லை ஒட்டி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.15 வீதம் செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போது நீதிமன்ற வில்லை ஒட்டிய விண்ணப்படிவத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களுக்கான பணத்தை செலுத்திய பின்னர் ஒரு வாரம் கழித்து வருமாறு அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு வாரம் கழித்த பின்னர் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சான்று கிடைக்கும். சான்றிதழ் கிடைக்க குறைந்தது 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் சேவை மையத்தில் இன்று சான்று வரவில்லை. நாளை வாருங்கள் என தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.
இதனால் அவசர காரியங்களுக்கோ அல்லது வெளியூர் வாசிகள் என்றாலோ அடையும் அவஸ்தைக்கு அளவில்லை. இதனால் கவலை தோய்ந்த முகங்களுடன் நிற்பவர்களை குறிவைக்கும் ஊழியர்கள் அவர்களிடம் சான்றிதழ் உடன் வாங்கித்தர சற்று செலவாகும் எனக்கூறி தகுதிக்கேற்ப பல நூறுகளை பெற்றுக்கொண்டு அரை மணி நேரத்தில் சான்றிதழ்களை சம்மந்தப்பட்டவர்களின் கைகளில் தருகின்றனர்.
எனவே நகராட்சி உடனடியாக சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தாணுப்பிள்ளை கூறியதாவது:
3 நாட்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். எனினும் 16 பேர் பணியாற்றிய இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். விண்ணப்ப படிவத்திற்கு கட்டணமாக ரூ.2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ.10 வசூலிக்கப்படவில்லை. கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் : மன்மோகன் சிங்

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
வெளிநாட்டு இந்தியர்களின் 10வது மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், 60 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 1,900 பேர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள், தங்களுக்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்று, ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தொழிலாளர்களிடையே தங்கள் வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தாதாரர் சார்பிலும் அரசு ஆண்டுக்கு ரூ 1000 செலுத்தும். அதே நேரத்தில், சந்தாதாரர்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பெண்களுக்கு அரசு தனது பங்காக ரூ 2 ஆயிரம் செலுத்தும்.
வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக எகிப்து, லிபியாவில் புரட்சி ஏற்பட்டுள்ளது. லிபியாவில் சிக்கிக் கொண்ட 16 ஆயிரம் இந்தியர்களை அவசரமாக வெளியேற்றும் பணியை இந்தியா மேற்கொண்டது. இதுபோன்ற அபாய காலங்களில் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இதுபோன்ற காலங்களில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

குலசேகரம் அரசு மருத்துவமனையின் அவலம் : பாம்புகள் படையெடுப்பு; நோயாளிகளே காயத்துக்கு கட்டு போடுகின்றனர்

குலசேகரத்தை சுற்றியுள்ள ஏராள மான மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்க ளின் உயிர்நாடியாக இருப் பது குலசேகரம் அரசு மருத்துவமனை. இதனை நம்பி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
முதல்படம் மருத்துவமனை நுழைவு வாயில்
தாலுகா மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகளும் இங்குள்ளது. ஆனால் நிர்வாக சீர்கேடுகளால் இம்மருத்துவமனை கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 5 மருத்துவர்கள், 5 நர்ஸ், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளனர். இதில் ஒரே நாள் இரண்டு மருத்துவர், 2 நர்ஸ் பணியில் இருப்பது அபூர்வமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறுவதில்லை.
நர்ஸ்கள் குறைவாக இருப்பதால் காயங்களுடன் வரும் நோயாளிகள் தாங்களே கட்டு போடவேண்டிய நிலையுள்ளது. உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பெட்சீட், தலையணை போன்றவை கிழிந்து கந்தையானதாகவும், சலவை செய்யப்படாமலும் வழங்கப்படுகிறது. இதனால் எளிதில் நோய் கிருமிகள் தொற்றி கொள்ளும் நிலையுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உள்ளது என்று போர்டு மட்டும் தொங்குகிறது. ஆம்புலன்ஸ் நிறுத்துமிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஜெனரேட்டர் வசதியுள்ளது. டீசல் பற்றாக்குறையினால் அது இயக்கப்படுவதில்லை.
திருவட்டார், குலசேகரம் காவல்நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளில் அடி, தடியினால் காயம்படுபவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையில் காவலர்கள் இல்லாததால் மருத்துவமனைக்குள் புகுந்து பழிவாங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. வெளிநோயாளிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை சுற்றிலும் புதர் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதேபோன்று மருத்துவமனை கட்டிடங்களை தவிர பிற பகுதிகள் முழுவதிலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது.
மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இருக்கும் பணியாளர்கள் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுவதால் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். மருத்துவமனை புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிட வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ 52 லட்சம் நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதால் அந்த நிதி திரும்ப எடுத்து கொள்ளும் நிலையுள்ளது.
பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டு உள்ள கழிவறை.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய நோயாளிகள் நலசங்க கூட்டம் நடைபெறாமல் உள்ளது. மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டிய மினி பஸ்கள் அந்த வழியாக செல்வதில்லை. இதனால் நோயாளிகள் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர்தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இவ்வாறு எல்லா வசதிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டிய குலசேகரம் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடுகளால் சீரழிந்து வருகிறது.
நோயாளிகள் அவதி : இரவில் மருத்துவர்கள் இருப்பதில்லை
இது குறித்து நோயாளிகள் நல சங்கத்தை சேர்ந்த மணி கூறுகையில், ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற வருகின்றனர். நோயாளிகள் வருகைகேற்ற மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இரவு நேரத்தில் மருத்துவர்கள் எவரும் பணியில் இருப்பதில்லை. இதனால் முழுநேர மருத்துவர்கள் நியமிக்கவேண்டும். உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தரமான உணவு மற்றும் சுகாதாரமான போர்வைகள் வழங்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு
குலசேகரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடம் உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்குரிய மருத்துவர்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டும். அல்லது பிற மருத்துவமனைகளை நாடி செல்லவேண்டும். தற்போது குடும்பகட்டுப்பாடு மற்றும் சில நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருக்கின்றனர். மயக்க மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
புதர் மண்டியுள்ளது
மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர்கள்.
மருத்துவமனை வளாகம் புதர் மண்டி கிடப்பதால் அவ்வப்போது நச்சு பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் போன்றவை தலைகாட்டி செல்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன் இதேபோன்று புதர் வளர்ந்திருந்ததை சமூக அமைப்பு ஒன்று அப்புறப்படுத்தியது. தற்போது அரசு கண்டு கொள்ளாததால் மீண்டும் புதர் மண்டியுள்ளது.

தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை விவகாரம் : தவறான சிகிச்சையால் மருமகள் பலி

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டராக சேதுலட்சுமி பணியாற்றினார். தனியாக சுபம் மருத்துவமனை நடத்தி வந்தார். இவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நித்யா மரணம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யாவின் கணவர் மகேஷ் நண்பர்களுடன் சென்று கடந்த 2ம் தேதி டாக்டர் சேதுலட்சுமியை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில் மகேஷ் தாயும், நித்யாவின் மாமியாருமான கனகலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
என் மருமகள் நித்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளின் கால்கள் வீக்கமாக இருந்ததால், சுபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். டாக்டர் சேதுலட்சுமி பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, பிரஷர் அதிகமா இருக்கிறது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியபடி ரூ 10 ஆயிரம் பணம் செலுத்தினோம். அதன் பின், நித்யாவை பெட்டில் படுக்க வைத்தனர். நள்ளிரவு 2 மணிக்கு நர்ஸ் வந்து பரிசோதனை செய்து பார்த்தார். நித்யாவுக்கு பிரஷர் குறையவில்லை என்ற அவர், டாக்டரிடம் போனில் பேசிவிட்டு நித்யாவுக்கு 3 ஊசிகளை போட்டார். அதன்பிறகு, நித்யாவின் கண்கள் உள்ளே சென்றன.
நித்யாவுடன் மகேஷ்
நித்யா, "மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறி வாயை திறந்து திறந்து மூடினாள். இதை நர்சிடம் கூறினோம். மயக்க ஊசி போட்டால் அப்படித்தான் இருக்கும் என நர்ஸ் கோபமாக தெரிவித்தார். அதிகாலை 5 மணிக்கு ஆபரேஷன் செய்ய நித்யாவை டாக்டர் அழைத்து சென்றார். 8 மணிக்கு பிறகு வெளியே வந்த டாக்டர், நித்யாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
உள்ளே சென்று பார்த்தபோது மருமகள் நிர்வாண நிலையில், வயிறு கிழிக்கப்பட்டு கிடந்தாள். வயிற்றில் தையல் கூட போடவில்லை. அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். அங்கிருந்த டாக்டர்கள் பார்த்துவிட்டு, உங்கள் மருமகள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார். ஏதோ தேவையில்லாத மருந்துகளை கொடுத்து என்னுடைய மருமகளையும், குழந்தையையும் டாக்டர் கொன்று விட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த என் மகன் டாக்டரை 2ம் தேதி கொலை செய்தான். அவன் 8 மாதம் தான் திருமண வாழ்க்கை வாழ்ந்தான். 6ம் தேதி மகனை ஜெயிலில் போய் பார்த்தோம். என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அழுது கொண்டே கூறினான். நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். உதவுவதற்கு கூட யாரும் இல்லை. நாங்கள் எங்கே போவது. தமிழக முதல்வர்தான், என் மகனை மன்னித்து வெளியே விட வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுதார். பேட்டியின் போது கனகலட்சுமி கணவர் ராஜபாண்டியன் உடனிருந்தார்.
பொதுநலன் காவலர்கள் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "மரணமடைந்த நித்யாவின் குடும்பத்திற்கு சுபம் மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத்துறை இணைந்து ரூ 10  லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். நித்யாவின் மரணத்தின் உண்மையை அறிய நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த சம்பவத்தின் உண்மையை தமிழக முதல்வருக்கு மனுவாக கொடுத்துள்ளோம்” என்றார்.
தடை விதிக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. 99 சதவீதம் அரசு டாக்டர்கள் வெளியில் பணியாற்றுகின்றனர். இதனால், சிகிச்சை பலனின்றி ஏராளமான நோயாளிகள் இறக்கின்றனர். மத்திய அரசில் பணி புரியும் டாக்டர்கள் வெளியில் பணியாற்ற கூடாது என்று சட்டம் உள்ளது. இதேபோல், அரசு டாக்டர்கள் தனியாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

அதிர்ச்சி தகவல்கள் : மாணவர்களிடம் பரவும் புதுவித போதை பழக்கம்


பஞ்சர்ஒட்ட பயன்படும் சொல்யூசன்
ரப்பர் டியூப்புகளை ஒட்ட வும், பஞ்சர் ஒட்டவும் பயன்படும் சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும், புதுவித பழக்கம் மாணவர்கள் சிலரிடம் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளியில் இருந்து ஏராளமான சொல்யூசன் காலி டியூப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி விட்டு வீசி எறிந்த காலியான பசை டியூப்புகள்.
குமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே சமீப காலங்களாக புது வித போதை பழக்கம் பிரபலமாகி வருகிறது. வழக்கமாக சிகரெட், போதை பாக்குகள், புகையிலை என பயன்படுத்தும் மாணவர்கள் சிலர், இப்போது கெமிக்கல் வகைகளை போதைக்காக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ரப்பர் டியூப்புகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்யூசனை தண்ணீரில் கலந்து குடிப்பது, தீயில் வாட்டி பின்னர் சொல்யூசன் பேஸ்டை கையில் வைத்து நுகர்ந்து பார்ப்பது என்பன போன்ற செய்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திய சில நிமிடங்கள் போதை அப்படியே தலைக்கேறி நிற்கும் என்பது இதை பயன்படுத்தி பழக்கப்பட்ட மாணவர்கள் சிலர் , சக மாணவர்களிடம் சொல்லும் வாக்கு மூலமாக இருக்கிறது. போதை ஏறியதற்கான எந்த வித மணமும் இல்லாமல் இருப்பதால் இதை பயன்படுத்துபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பள்ளி இடைவேளை நேரத்தில் கூட சில மாணவர்கள் வாடிக்கையாக பயன்படுத்துகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இது போன்று சொல் யூசனை பயன்படுத்தி போடப் பட்ட காலி டியூப்புகள் கழிவறை மற்றும் பள்ளி வளாகங்களில் ஏராள மாக கிடப்பதாக தகவல் வந்ததன் பேரில், பொதுமக்கள் சிலர் நேற்று அந்த பள்ளிக்கு சென்று அவற்றை கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன், பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவற்றை கைப்பற்றினர். நேற்று (ஞாயிறு) பள்ளி விடுமுறை என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடிய வில்லை. இன்று காலை இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள் ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள்ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
மூளையை பாதிக்கும்
இது தொடர்பாக அருமநல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது :
வழக்கமாக கெமிக்கல் கலந்த பொருட்களை போதைக்காக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஷூ பாலிஷை கூட தண்ணீரில் கலந்து குடித்து, போதையை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கெமிக்கலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் சிந்தனை திறன் குறைந்து ஒரு மன நோயாளியாக கூட மாற்றி விடுவர். எனவே இது போன்ற பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஆகும் என்றார்.  (Dinakaran)

Saturday, 7 January 2012

2 எஸ்.ஐ. 2 போலீசார் கைது 3 போலீசார் தப்பி ஓட்டம் : மதுரை ஓட்டலில் சூதாட்டம்

மதுரையில் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 போலீசார் தப்பிச் சென்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் உத்தங்குடி சந்திப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்பி அஸ்ரா கர்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சின்னப்பாண்டி தலைமையில், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்பட பலர் இடம் பெற்ற தனிப்படையினர் நேற்று நள்ளிரவில் குறிப்பிட்ட ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு அறையில் 12 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சிக்கியவர்களில் பலரும் போலீசார் என தெரியவந்தது. இதனால் ரெய்டுக்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மீனாட்சி கோயில் ஸ்டேஷன் எஸ்.ஐ. கூத்தபெருமாள்(57), திலகர் திடல் ஸ்டேஷன் எஸ்.ஐ. கருப்பையா(53), திலகர் திடல் போக்குவரத்து பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணியன்(42), எஸ்எஸ் காலனி ஸ்டேஷன் போலீஸ்காரர் பாலமுருகன்(46), லாட்ஜ் உரிமையாளர் வேலு(51), ஜேம்ஸ்(42), ராஜேந்திரன்(38), தர்மர்(50), வீரையா(47) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பள கணக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் தனுஷ், திலகர் திடல் ஸ்டேஷனில் பணியாற்றும் அசோக், திடீர் நகர் ஸ்டேஷனில் பணியாற்றும் ரவி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கைதான 9 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சூதாட்ட வழக்கில் போலீசாரே சிக்கியுள்ளதும், ஒரே நேரத்தில் 7 போலீசார் சிக்கியதும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை : நள்ளிரவில் லஞ்சம்: தாசில்தார் கைது

மணல் குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க நள்ளிரவில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குளித்தலை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மோகன். மணல் குவாரி நடத்தி வருகிறார். இவரது மணல் குவாரியின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதில் சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் நீண்ட நாள் ஆகியும் மோகனுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து மோகன் நேற்று காலை குளித்தலை தாசில்தார் நேருவை நேரில் சந்தித்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். இதற்கு தாசில்தார் நேரு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்றிரவு குளித்தலையில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் தாசில்தார் நேருவின் வீட்டுக்கு மோகன் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தாசில்தார் நேரு, மோகனிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை வாங்கினார்.
அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதி மற்றும் போலீசார் நேருவை கையும் களவுமாக கைது செய்தனர். அதன்பின் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆசனவாயில் மறைத்து 1400 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் : அயன் படமா??

கொச்சி விமானநிலையத்தில் 1400 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த இலங்கை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து நேற்று கொச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானம் கொச்சியில் தரை இறங்குவதற்கு முன்பே விமானநிலையத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் தங்க பிஸ்கட்டுகள் எதுவும் சிக்கவில்லை. சோதனைக்கு அந்த நபர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தார். பல மணிநேரம் சோதனை நடத்தியும் அந்த நபரிடமிருந்து எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை.
ஆனால் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மிகவும் நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்திருந்ததால் அந்த வாலிபரை கூடுதல் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டுசென்றனர்.
மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை நடத்தியபோது அந்த வாலிபரின் ஆசனவாயில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை மருத்துவர்களின் உதவியுடன் வெளியே எடுத்தபோது மொத்தம் 14 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடை கொண்டதாகும். மொத்த எடை 1400 கிராம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த ஆசாமியின் பெயர் அல்தாப் சாகுல் அமீது (47). கேரளாவிலிருந்து கிராம்பு, ஏலக்காய் உட்பட நறுமணப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்லும் இவர், அங்கிருந்து தங்க பிஸ்கட்டுகளை இந்தியாவுக்கு கடத்துவது வழக்கம்.
இதுவரை 13 முறை இவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்தியுள்ளார். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய கடத்தல் புள்ளிக்காகவே தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதாகவும், ஒரு முறைக்கு விமான டிக்கெட் போக 10,000 ரூபாய் தனக்கு கிடைக்கும் என்று அல்தாப் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அல்தாப்பை தீவிர விசாரணைக்குப் பின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
சென்னையை சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிக்கும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

பட்டாசு மேளம் அடிக்கும் விவசாயிகள் : நெற்பயிர்களை நாசமாக்கும் படர் குருவிகளை விரட்ட

குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்களில் பால் வடியும் பருவம் ஆகும். இந்த சமயங்களில் படர்குருவிகள் மொத்தமாக வந்து பயிர்களில் உள்ள பால்களை உறிஞ்சி சென்று விடும். இப்படி உறிஞ்சி சென்று விட்டால் அந்த பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் கருகி விடும். இதையடுத்து படர் குருவிகள் வருவதை தடுக்க, விவசாயிகள் சில நூதன வழிகளை கையாள்வது வழக்கம்.


இதே போல் வடசேரியில் உள்ள வயல்களில் தற்போது நெற்பயிர்கள் பால் வடியும் பருவத்தில் உள்ளன. இதனால் படர் குருவிகள் மொத்தமாக வருவதை தடுக்க, விவசாயிகள் அதிகாலையிலேயே பட்டாசுகள் கொளுத்தி யும், மேளம் அடித்தும் விரட்டுகிறார்கள். ஒரு வயலில் இருக்கும்போது பட்டாசு கொளுத்தினால் அடுத்த வயலுக்கு குருவிகள் சென்று விடும். இதனால் தொடர்ந்து பட்டாசு கொளுத்த வேண்டும். இதே போல் டப்பாவை கழுத்தில் கட்டிக்கொண்டு மேளம் போல் தொடர்ந்து அடித்து கொண்டே வயல்களில் செல்கிறார்கள்.
இது குறித்து வடசேரியை சேர்ந்த விவசாயிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோர் கூறும்போது, படர் குருவிகள் மொத்தமாக, மொத்தமாக வந்து வயலில் இறங்கும். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் வருவது உண்டு. இவைகள் நெற்பயிர்களில் இருக்கும் பாலை உறிஞ்சி சென்று விடுவதால், தொடர்ந்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். இதனால் தான் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றனர்.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பில் : ரூ 50 க்கு மேல்

செல்போனில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி விரிவான பில் பெறலாம் என்று டிராய் அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சம் ரூ 50 கட்டணம்.
இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்", வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் 2012ல் கூறியிருப்பதாவது:
செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் போன் நிறுவனங்கள் விரிவான பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் ரூ 50 கட்டணத்தில் வாடிக்கையாளர் இதை விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் போன் நிறுவனம் பில் அளிப்பது கட்டாயம். கட்டணம் செலுத்தி பெறும் அழைப்புகள் விவரம், நேரம், நிமிடங்கள், கட்டணம் ஆகிய விவரங்கள் மட்டுமின்றி வாடிக்கையாளரின் கட்டண திட்டம், கணக்கில் மீதமுள்ள தொகை, மதிப்பு கூட்டு சேவை விவரம் ஆகியவற்றை இலவசமாகவும் போன் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் வசதிக்காக கட்டண வவுச்சர்களும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளான், டாப் அப் மற்றும் ஸ்பெஷல் டேரிப் ஆகியவை அவை. இதனால், ஏராளமான கட்டண திட்டங்கள், டாப் அப் ப்ளான்கள் வாடிக்கையாளரை குழப்புவதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

உம்மன்சாண்டி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுப்பாடு தமிழகத்திற்கு வழங்கப்படாது

திருவனந்தபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் பின் முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், “முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையின் கட்டுப்பாடு தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுப்பாட்டை கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூட்டாக ஏற்கும். இது குறித்து உச்சநீதிமன்ற அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவில் 6ம் தேதி(நேற்று) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
உம்மன்சாண்டியின் இந்த பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனது கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்தை தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டி, அணைக்கு கூட்டு கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறவில்லை என்று பல்டி அடித்தார். இது தொடர்பாக அவர் கொச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்திருப்பதாக அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள் ளன. ஆனால் நான் அவ்வாறு கூறவே இல்லை. புதிய அணை கட்டும் போது அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்பான கட்டுப்பாடு குறித்துத்தான் நான் கூறியிருந்தேன். சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு ஆகிய அணைகளிலும் இதே போல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டியே கூறினேன். ஆனால் பத்திரிகைகள் தவறாக அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்கப்போவதாக நான் கூறியதாக பிரசுரித்து விட்டன. புதிய அணை கட்டினால் அணையின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க கேரளாவிடம்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் காய்கறி விலை குறைவு : அமெரிக்க மாணவிகள் பேட்டி

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று அமெரிக்க மாணவ, மாணவிகள் ஆய்வு நடத்தினர்.
அமெரிக்காவின் இதாக நகரில் அமைந்துள்ள கார்னல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நார்ப்பொருள் அறிவியல் துறை, வேளாண்மை திட்டங்கள் மேம்படுத்தும் துறை, பூக்கள் விற்பனை மேம்படுத்தும் துறை, விளைபொருட்களின் தர மேம்பாட்டு துறை உள்ளிட்ட 4 துறைகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் மற்றும் 6 பேராசிரியர்கள் கடந்த 2ம் தேதி முதல், வரும் 17ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
நேற்று முன்தினம் கோவை வேளாண்மை பல்கலைக்கு வந்த இவர்கள் அங்கு அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். சர்வதேச வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி என்ற பாடத் திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு பயிற்சிக்காக நேற்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பயிற்சியில் உழவர் சந்தையில் என்னென்ன காய்கறிகள், பழங்கள் உள்ளன. காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்வது, உழவர்கள் எப்படி நுகர்வோரிடம் நேரிடையாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறிகளின் தரத்தினை எவ்வாறு அறிவது, எந்தெந்த காய்கறிகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வது, மற்ற விற்பனை மையங்களைவிட உழவர் சந்தையில் எப்படி குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது, உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை நுகர்வோர் போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
ஆச்சரியமாக இருக்கு...
கார்னல் பல்கலை. மாணவிகள் சூசன்னா, ஜெசிகா, எலிசபெத், ஜோகில் ஆகியோர் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள கடைகளில் இந்தியாவில் உள்ளது போல விவசாயிகள் நேரடியாக வந்து காய்கறிகளை விற்பனை செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்தனி கடைகள் இருக்கும். ஆனால், இங்கு உழவர் சந்தையில் ஒரே கடையில் பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தனையும் புதுசாக (ப்ரெஷ்) உள்ளது. ஆனால், அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் காய்கறிகளின் விலையை காட்டிலும், அமெரிக்காவில் காய்கறிகளின் விலை அதிகளவில் உள்ளது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு : மீன் பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை

‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது’ என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக மீனவர்களுக்கு கப்பற்படை உயர் அதிகாரி மேற்பார்வையில், கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளர், கடலோர காவல் படை துணை இயக்குனர் ஜெனரல், வெளியுறவு செயலாளர் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இயக்குனர் தீபக்மித்தல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா & இலங்கை இடையே மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தம் 1976ல் ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் 13வது கடல் மைலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், அங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமம் கிடையாது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை, மீன் பிடி உரிமையாக தவறாக நினைத்து செயல்படுகின்றனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 
பின்னர், மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Friday, 6 January 2012

பெற்றோர் எதிர்ப்பு : பிளஸ் 2 காதல் ஜோடி ஊட்டியில் விஷம் குடித்தனர்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் ஊட்டியில் விஷம் குடித்தனர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே புல்வெளியில் ஒரு இளம்பெண் ணும், வாலிபரும் படுத்து கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நள்ளிரவு இருவருக்கும் மயக்கம் தெளிந்தது.
அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் மேலமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், கீழமுடிமானை சேர்ந்த 18 வயது இளம் பெண் என்பது தெரியவந்து. இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இது இருவரது பெற்றோருக்கும் தெரியவர ‘படிக்கிற வயசுல காதலா’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த இருவரும், கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி வந்தனர். இருவரையும் காணாமல் பெற்றோர் தவித்தனர். போலீசார் இவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஊட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இருவரும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ் 2 காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட பக்கிகளா காதல்னா என்னப்பா???
முதல்ல நல்ல படுச்சு வேலைக்கு போ!!!! நல்லா புடுச்ச பொண்ண பாரு!!!!! கல்யாணம் பண்ணு!!!
அப்ப LOVE பண்ணு........ குழந்தை பொறக்கும்... LOVE .... LOVE ... LOVE ... பண்ணிகிட்டே இரு..  சாகும் வரைக்கும்...
இந்த LOVE எல்லாம் சூடு குறைஞ்சா காத்துல பறந்துடும் தம்பி....
அதுதாண்டா LOVE... காதல் ... எல்லாமே!!!

மேற்குவங்காளம் : குமரி மத்திய ரிசர்வ் படை வீரரை சுட்டுக்கொன்றது கேரள வீர

இன்னொருவரை கொன்று தானும் தற்கொலை
மேற்குவங்காளத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மார்த்தாண்டம் சி.ஆர்.பி.எப் வீரரை அவருடன் பணியாற்றிய சக வீரரே சுட்டுக்கொலை செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மேலும் ஒருவரை கொன்று, தானும் தற்கொலை செய்துள்ளார்.
குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பம்பத்தைசேர்ந்தவர் குமார்(36). மேற்குவங்காளத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வந்தார். அங்குள்ள சீதாபுரா பகுதியில் குமார் உட்பட 183 வீரர்கள் நக்சலைட்டுகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்கி அவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் குமார் மற்றும் அவருடன் பணியாற்றிய திருவனந்தபுரத்தை சேர்ந்த துளசிதரன், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அகமதுபட் ஆகியோர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சீதாபுரா மாவட்ட எஸ்.பி திரிபாதி, சம்பவ இடத்திற்கு சென்று சக வீரர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், வீரர்களிடையே நடந்த மோதலில் 3 பேரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வீரர்கள் துளசிதரன், குமார், ரியாஸ் அகமதுபட் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துளசிதரன், ஏ.கே. ரக துப்பாக்கியால் குமாரை யும், ரியாஸ் அகமது பட்டையும் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர்.
இதனைத்தொடர்ந்து துளசிதரன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்
இதனிடையே பலியான மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்த வீரர் குமாரின் உடல் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து டிஎஸ்பி தினேஷ் தலைமையிலான வீரர்கள், துணை ராணுவ வாகனத்தில் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
அவரது உடலுக்கு குமரிமாவட்ட எஸ்.பி லட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  (Dinakaran)

தலைமையாசிரியர் சஸ்பெண்ட் : வேலை நேரம் முடியும் முன் பள்ளியை மூடிச் சென்றார்

விழுப் புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி விக்கிரவாண்டி ஒன்றியம் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியை நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு பார்வையிட வந்தார். அப்போது பள்ளி எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டிருந்தது. கிராம மக்களிடம் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் பள்ளியை, வேலை நேரம் முடிவதற்கு முன்பாக மாலை 3.45 மணிக்கே மூடிவிட்டு சென்றதாக கூறினர். பள்ளி பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மூடிவிட்டுச் சென்றதால், 55 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாக கூறி தலைமை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமத மாக வந்ததால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் வல்லம் ஒன்றியம் மேல் களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தபோது 6, 7, 8 வகுப்புகளில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் சரிவர மதிப்பிடப்படாமலும், மதிப்பெண் பதிவேட்டில் பதியப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.