Thursday 31 May 2012

புகையிலையை முற்றிலும் ஒழித்து வழிகாட்டும் கிராம மக்கள்

ஆந்திராவில் ஒரு கிராமத்தினர் புகையிலையை முற்றிலும் ஒழித்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மடுகுலா தாலுகாவில் உள்ளது பொங்கலிபகா கிராமம். 1,600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் புகையிலை ஒழிக்க கிராமத் தலைவரும் மக்களும் முடிவு செய்தனர். புகையிலையை ஒழிக்க பாடுபட்டு வரும் இந்திய இயற்கை சுகாதார அறக்கட்டளையும் கிராம மக்களுக்கு ஊக்கம் அளித்தது. இந்த அறக்கட்டளையும் கிராம மக்களும் செய்த முயற்சியால் பொங்கலிபகா கிராமம் இன்று புகையிலை இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

பேஸ்புக் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற பேஸ்புக் இணையதளத்தின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
Delhi-High-courtபல்வேறு மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெறுவதாக கூறி டெல்லியை சேர்ந்த முப்தி அஜாஸ் என்பவர் பேஸ்புக், கூகுள், யாஹூ மற்றும் சில இணையதளங்களுக்கு எதிராக டெல்லி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் கட்டணம் வசூல் : தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக இருந்தவர் பால்ராஜ். கடந்த 2006ம் ஆண்டு மாணவர்களிடம் ரூ 7 லட்சத்து 41,501 ரூபாயை கூடுதல் கட்டணமாக வசூலித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.

Thursday 24 May 2012

ஜப்பானில் படிக்க கல்வி உதவி தொகை : தூதரகம் அறிவிப்பு


ஜப்பானில் படிக்க ஜப்பான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
scholarship-for-abroad-studiesசர்வதேச மாணவர்கள், ஜப்பானில் தங்கி இளநிலைக் கல்வி (யுஜி) படிப்பதற்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது. கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (மெக்ஸ்ட்) கீழ் இயங்கும் சர்வதேச மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளநிலை கல்வி படிக்கலாம். ஏப்ரல் 2013 முதல் 3, 4 மற்றும் 5ம் ஆண்டுகளில் உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வி கடையின் அட்டூழியங்கள்

"ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டி.சி.யை தபாலில் அனுப்பிய திருவில்லிபுத்தூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
virudhunagar-school-head-master-arrestedவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் கடந்தாண்டு "ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ 3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இதற்கான வகுப்புகள் நடைபெறவில்லை.

Wednesday 23 May 2012

“விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது."

agriculture-universities-colleges-in-Indiaகோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, மதுரை, தேனி, நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் விவசாய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டு வளர்ப்பு), பி.டெக் (பயோ டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி, வேளாண்மை பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிஎஸ் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்) என 13 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கல்லூரிகளிலும் கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6 ஆகும்.

Tuesday 22 May 2012

குளச்சல் : 2 மீனவர்கள் மாயம் : 2வது நாளாக தேடுகிறார்கள்

குளச்சல் அருகே மாயமான 2 மீனவர்களை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
kanyakumari-fishermen
குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர்கள் மரியடேவிட்(36), எடிசன்(34). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் பைபர் வள்ளத்தில் கடலில் மீன்பிடிக்க  சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இருவரும் நேற்று மாலை ஆகியும் கரை திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர்.

Monday 21 May 2012

பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் வருமானத்திற்கு ஏதுவாக கத்தரி, வெண்டை, மிளகாய் என பல்வேறு வாணிப பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய் சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். சமப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பர். குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் மேல் பகுதியில் வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். இதில் கொடியை ஏற்றி படர செய்வர். 150 நாட்கள் வரை பயன்தர கூடிய பயிராகும். 45 நாட்களில் கொடிகளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

அரசு பாலிடெக்னிக்குகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக்குகளில் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு இன்று (21ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
அரசு பாலிடெக்னிக்களில் முதலாம் ஆண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேர பட்டய படிப்பில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (21ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு பாலிடெக்னிக் களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தூத்தூர் பகுதி மீனவர்கள் கோஷ்டி மோதல்

தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் மீது குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆன்றனி ஆரோக்கியதாஸ்(30) என்பவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் தனக்கு சொந்தமான படகை கடலுக்குள் தள்ளி கொண்டு சென்றபோது அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு மீது மோதியுள்ளது. இதில் இனயத்தை சேர்ந்த சிபுநேஸ்(19), சிலுவை அடிமை(47) ஆகியோர் தங்கள் படகு மீது ஏன் மோதினாய் என கேட்டு தகாத வார்த்தை பேசி ஆன்றனி ஆரோக்கியதாசுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் செல்வம், சிபுநேஸ், சிலுவை அடிமை ஆகியோர் படுகாயங்களுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடபடுகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
+2-result-sms-on-mobileதேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் மதிப்பெண்களுடன் SMS பெற உங்கள்...


பதிவு எண் :
பெயர் : 
மொபைல் நம்பர் :

பதிவு செய்யவும்
 click here : Get your +2 result SMS to your mobile with marks


பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர்.

Saturday 19 May 2012

மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை தேர்வு 22,884 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். பள்ளி மேல்நிலை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுது தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர்கள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது.

கோடிமுனை : ரயிலில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.
kodimunai-kanyakumari-Distஇதில் ரெமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது செல்போனில் இருந்த சிம்கார்டு கிடைத்தது. அதை வைத்து நடத்திய விசாரணையில் அவர் குமரி மாவட்டம் கோடிமுனையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Thursday 17 May 2012

சுப்ரீம் கோர்ட் : கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. : போலீசாருக்கு பாக்கெட் நிறையும்.

traffic-police-fining-driversகார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க கருப்பு பிலிம் ஒட்டப்படுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு காருக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பெரும்பாலானவற்றில் கருப்பு நிறத்தில் இந்த பிலிம்கள் ஒட்டப்படுகின்றன. இதை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் டிரைவர்களுக்கு முன்பின் வரும் வாகனங்கள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிடுகிறது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘இந்தியா முழுவதிலும் மே மாதத்திலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. அதை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

கேரளா : 21 வயது ஆனவர்களுக்கு மட்டுமே மது

கேரளாவில் இனிமேல் 21 வயது ஆனவர்கள் மட்டுமே ஒயின் ஷாப்புகளில் மது வாங்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கு ரேஷன் கடைகளில் இருக்கும் கியூவை விட ஒயின் ஷாப்புகளின் முன் நிற்கும் கியூதான் அதிகமாக இருக்கும். கேரளாவில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனைக் கழகம் சார்பில் மூலைமுடுக்குகளில் கூட சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Monday 14 May 2012

சேலத்தில் சோகம் : சீட் பிடிக்க உயிர் போன பரிதாபம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ஓடும் ரயிலில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறிய 2 குழந்தைகளின் தந்தை, அவர்கள் கண் முன்னே ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
salem-junction-railway-station
கோவையிலிருந்து மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.30 மணிக்கு வந்தது. 4வது பிளாட்பாரத்தில் வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர்.

60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க அனுமதி

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil-nadu-ration-card-application
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

Sunday 13 May 2012

ஒருதலை பட்சத்தின் விளைவுகள் : எது பெண்ணுரிமை?

கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
bomb-threat-to-templesமுதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு கடந்த 9-ம் தேதி இரவு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இ-மெயில் திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் மற்றும் திருவில்லிபுத்தூர் போலீசார் அக்கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜூன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil-Nadu-SSLC-Exam-rsultsதமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. அதில் 10,312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் முறையாக இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வு நடந்தது. இந்த முறையின் கீழ், 19,574 மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.

களியக்காவிளை : இரு மாநிலங்களின் உறவை கெடுக்கும் கேரளா போலீஸின் திமிர்

களியக்காவிளை ஒற்றாமரம் சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்து துறையினர் வழங்கிய டூரிஸ்ட் அனுமதி ரசீதை கேரள போலீசார் கிழித்து எறிந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர் தலையிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள் இங்கு வரி செலுத்தி உரிய அனுமதி பெற்றுச் செல்வது வழக்கம்.

Friday 11 May 2012

எங்கு நோக்கினும் பெண்ணுரிமை குரல் : பெண்கள் எங்கே போகிறார்கள்?

கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கப்பல் கழக ஊழியருக்கும், மும்பையை சேர்ந்த பெண்ணுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
women-enterprenuer
திருமணத்துக்கு பிறகு கணவர் மும்பையில் 5 ஆண்டுகள் கப்பலில் வேலை செய்தார். 2005ம் ஆண்டு போர்ட் பிளேயருக்கு மாற்றப்பட்டார். அங்கு தன்னுடன் வந்த வாழும்படி மனைவியை அவர் அழைத்தார். ஆனால், மனைவி மறுத்து விட்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார்.

Haryana says "NO" to Jeans and T-Shirt

Directing its field staff to wear "decent" clothes to work, the women and child department (WCD) department in Haryana has asked them to desist from wearing jeans and T-shirts to work.

no-to-jeans-and-t-shirt-in-haryanaThe controversial order has virtually termed jeans and T-shirts as 'indecent' clothing. Its subject line read: "To wear decent clothes in office."

The circular, issued April 18, has been sent by the WCD director's office to all its field offices which run the Integrated Child Development Scheme (ICDS) and Integrated Child Protection Scheme (ICPS). 

நிதானம் (பொறுமை) தேவை : நிதானத்தை இழந்தால்???

ஓடும் ரயிலில் டிக்கெட் எடுக்காத பெண் பயணியை, அபராதம் கட்ட சொன்ன பெண் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
chennai-electric-train-route
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருப்பர் சசிரேகா (30). இவர், மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துணையுடன், சென்னை கடற்கரை& தாம்பரம் இடையிலான மின்சார ரயிலில், பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என்று ஒவ்வொரு பயணியாக நேற்று காலை விசாரித்து கொண்டிருந்தார்.

Thursday 10 May 2012

30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதிக்காத கிராமம்

சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி கிராம மக்கள், 30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதித்ததில்லை. ஆச்சரியமாக உள்ளதா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஊஞ்சம்பட்டி. சுமார் 200 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தீப்பெட்டி தயாரிப்பு மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்தபோதும், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுகின்றனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் இக்கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கின்றனர். ஊர் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்கின்றனர்.

"பணம் இருந்தால் கடவுளும் வீடு தேடி வருவார்"

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
** ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி, ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதபுரம் ஆதிஜெகன்னாதபெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய கோயில்கள் உள்ளிட்ட 43 கோயில்களுக்கு ரூ 22.50 கோடி வழங்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tuesday 8 May 2012

ஒரே டிக்கெட் : பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயிலில் பயணிக்கலாம்

SINGLE-PASS-FOR-MTC-METRO-TRAIN-CHENNAIபஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வர "ஒருங்கிணைந்த சென்னை மாநக போக்குவரத்து" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சிதம்பரம் பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

302 Women on Hunger Strike to Shut Down KKNPP : Government & Media remain Blind

Nuke-Power-people-say-no-to-koodankulam"Let's leave an Earth where our children and grandchildren can all play without worries."
- Yoko Kataoka, a retired baker from Japan

Some 25 men have been on the fast since May 1 and 302 women and 10 more men have joined the strike on May 4, 2012. 

Today the People of Koodankulam and Idinthakarai are going to submit the Voter ID Cards to the Radhapuram Tahsildar.

Is demanding ones right to live is a crime? These people are labelled as Naxals. Demanding the right to live become the act of Naxals.

ஹீமோபீலியா : சேலம் மாவட்டத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
89-people-in-salem-with-hemophiliaஇதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரண மாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ‘எக்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்’ குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபிலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும். காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும்.

குமரி குடிமகன்களின் நாட்டு சேவை : ஏப்ரலில் மதுபான விற்பனை 54.35 கோடி

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 நாட்களில் மட்டும் ரூ.54.35 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Monday 7 May 2012

DIVORCE : Reasons and Documents

"Marriages are made in Heaven". "இறைவன் இணைத்ததை மனிதன் பிரிகாதிருக்கட்டும். இனி இவர்கள் இரு உடல் ஓர் உயிராய் இருப்பார்கள்"

Divorce is not the solution for every problem. Love has the power to cure any problem. Sharing and Understanding the problem and loving one another are the ultimate solution for every happy married life.

Divorce, though I don't support, the main reason for sharing this article is merely for knowledge and for the use of men and women, who are victims of marriage.

Saturday 5 May 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : நொங்கு வண்டி

அனேகமாக நம்மில் பலரது சொந்த வாகன கனவை நிறைவேற்றி தந்தது இந்த வாகனமே!!!

பெண் பனையில் உருவாகும் பாளை நாளடைவில் பணம்காயாக உருவாகிறது. இளம் பனம்காய் நொங்கு எடுக்க உகந்தது. சரியான பருவம் முக்கியம். இல்லை எனில் கடுக்காய் எனப்படும் முதிர்ந்த நிலைக்கு சென்று விடும். அது சுவைக்காது!!

குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறை இல்லை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
Opening_Savings_Acccount_without_minimum_balanceகடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.

குழந்தை, சமையல், துணி மடித்தல் காரணங்களுக்காக விவாகரத்து கேட்க முடியாது

குடும்பத்தின் நிதி நிலையை கருதி மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதை காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
divorced_couple_maharashtraமகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரமேஷ் ஷெனாய் (30), இவருடைய மனைவி பிரீதி (26), இருவருக்கும் 2007, பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இருவரும் வேலை செய்கின்றனர்.

Friday 4 May 2012

குவைத் : இஸ்லாமியத்தை பழித்தால் மரண தண்டனை

இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் குவைத்திலும் கொண்டு வர எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இஸ்லாமியம், முகமது நபிகளை பழித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹமத் அல்நகி என்பவரை குவைத் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"Peer education system" : suggested by Parliamentary Panel

Taking note of various studies and surveys showing poor learning capacity of students especially at the elementary level, a Parliamentary panel has suggested introduction of ‘peer education system’ as an option to address the issue.

"Under this concept, a higher grade student can adopt a low grade student and start teaching him. This would help the teaching student make his base strong. As an incentive, a provision of stipend could also be made available for him," the panel said.

உலகம் சிறிது : சிரித்து வாழ்வோம்


பணி நிமித்தம் நிற்கும் வரிசையில் ....
குறுக்கிடும் வேளையில்...
'பொறம்போக்கு' புலம்பல் வேண்டாம்


என்றேனும் ..உங்களுக்கு நானோ ..
எனக்கு நீங்களோ ..
குருதிகொடை செய்ய நேரிடலாம்


எங்காவது பார்க்க நேர்ந்தால்
பாங்காக சிரித்து வைப்போம் ..
'அலட்சிய' முகம் வேண்டாம் '


உங்களுக்கு நானோ..
எனக்கு நீங்களோ ...இன்னொருநாள்
கடவுளாய் உதவக்கூடும்

Thursday 3 May 2012

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி

சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அஞ்சல் துறையின் புதிய அவதாரம் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா"

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
Post_office_Indiaவங்கி சேவை எட்டியு ள்ள மக்கள் எண்ணிக்கை 50 சதவீதத்துக் குள் நீடிக்கிறது. ஏனெனில், வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம், நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகின்றன. இதனால், பின்தங்கிய, கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.

தகவல் ஆணையம் தீர்ப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : உதயகுமார்

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
Dianuke_Udayakumar_Koodankulamகூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை&1 மற்றும் 2ன் பாதுகாப்பு ஆய்வறிக்கை, களஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22-ம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
+2_results_onlineஇதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.