Sunday 29 April 2012

380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ghol_fishஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் - பட்டை சோறு

நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.

தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.

இலவச கட்டாய கல்வி உரிமை : ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
schoolas_in_tamil_naduநாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி வழங்குவதற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அரசின் முடிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அளவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உத்தரவையும் கடந்த நவம்பர் மாதமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணி தேர்வுகளுக்கு இணையதளத்தில்பதிவு செய்வது எப்படி?

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.

குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா

Sempattai_Kurumpanaiஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.

Thursday 26 April 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : தூக்கணாம் குருவி கூடு

சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.

தங்களுக்கு வாழ தகுதியான இடத்தை தெளிவாக தேர்வு செய்து சிறுக சிறுக பொருள் சேமித்து துல்லியமாக தனக்கும் குஞ்சுகளுக்கும் ஏற்ற அனைத்து வசதிகளுடன் அவை தங்கள் வாழ்விடங்களை அமைக்கும் விதம் புதிரானது.

இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.

இன்று முதல் 10 - ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம்

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

மனைவிக்காக ரூ.9,50,000 கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய முன்னாள் டிஜிபி

ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

Police_ex_DGP_rathoreஅரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.

பரத்பூர் கலெக்டர் அதிரடி : திருமண பத்திரிகையில் பிறந்த தேதி கட்டாயம்

குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இறக்கும் மீனவர் பிள்ளைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் மற்றும் பல : சட்டசபையில் அமைச்சர் ஜெயபால் பேசியது

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயபால் சட்டசபையில் நேற்று பேசியதாவது:  
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.

Wednesday 25 April 2012

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு காதல் : பிடிபட்ட காதலர்கள் : இன்டர்நெட் தாக்கம்

இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏற்பட்ட நட்பால், நாகர்கோவில் மாணவியின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து மாதம் ஒருமுறை நள்ளிரவில் வந்து சென்ற மாணவர் சிக்கினார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரை எச்சரித்து அனுப்பினர்.
Nagercoil_loversநாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இன்டர்நெட் சாட்டிங்கில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு சென்னையில் உள்ள ஒரு இன்ஜினிரியங் மாணவரின் நட்பு கிடைத்தது.

விலை ரூ 300 இல் தானாகவே 108க்கும் உறவினர்களுக்கும் தகவல் தரும் கருவி

விபத்தில் சிக்கினால் 108 மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை லாயோலா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் ஐசன் ஐசக், விவோ, மன்பிரீத், மார்ட்டீன். இவர்கள் 4 பேரும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலா ரூ 1 கோடி நஷ்டஈடு : கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி கப்பல் நிறுவனம் வழங்கியது

கொல்லம் கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ 1  கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
கொல்லம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த அஜீஸ் பிங்கோ, குளச்சலை (தற்போது கொல்லத்தில் வசித்தவர்) சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர்.

Tuesday 24 April 2012

தொடர் மதிப்பீட்டுமுறை அறிமுகம் : வரும் கல்வியாண்டு (1 - 8 வகுப்பு வரை)

நாடகம், குவிஸ், உரை யாடல் என்று பன்முக திறமையாளர்களாக மாணவ மாணவியர் விளங்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு முழு மை யான தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மனப்பாட முறை கல்வி யில் இருந்து செயல்வழி கல்விக்கு தமிழக கல்வி முறை மாற்றம் பெற்ற நிலையில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணுதல் மற்றும் சிந்தனைதிறன்சார் மதிப்பீடு முறை தவிர்த்து முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு : முறைகேடுகள் களையப்படுமா?

பேரவையில் நேற்று உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தகுதியான குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 4,20,747 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
tamil_nadu_ration_cardதற்போதுள்ள 1,97,82,593 ரேஷன் கார்டுகளின் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி 1 கோடியே 93 லட்சத்து 3,509 கார்டுகள், அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புதுப்பிக்கப்பட்டன. 85,159 பேர் ஆன்லைன் மூலமும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 62,159 பேரும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துள்ளனர். 23,000 கார்டுகளின் பதிவுகள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் 4 லட்சத்து 16,925 கார்டுகள் புதுப்பிக்கப்படவில்லை.

Monday 23 April 2012

இண்டர்வியூ : (நாகர்கோவில்)பார்வதிபுரத்தில் விபசாரம் : 7 பேர் கைது

நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அந்த கட்டிடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியும் காவல்துறையினர் பெற்று இருந்தனர்.
Nagercoil_Junctionநேற்று (ஞாயிறு) மதியம் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து 4 வாலிபர்கள் உல்லாசமாக இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் கண்மணி, பிரேமா மற்றும் போலீசார் அதிரடியாக அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.

‘செம்பட்டை’ : குளச்சல், குறும்பனை குப்பமா?? குப்பத்தின் பொருள் தான் என்ன???

‘செம்பட்டை’ 2012 - இல் திரைக்கு வர இருக்கும் திரைப்படத்தின் பெரும்பகுதி அரபி கரையோரம் அமைத்திருக்கும் இயற்கை எழில் மிகுந்த குறும்பனை கிராமத்தில் படமாக்கப்பட்டது. இத்திரைபடத்தில் குறும்பனை கிராமத்தை சார்ந்த இளைஞ்சர்கள் நடித்தும், சிறுவர்கள் ஆடலுடன் நடித்தும் இருக்குகிறர்கள். 
Kurumpanai_coastal_village_Kanyakumari"மீனவ குப்பத்தை தேடி அலைந்த இயக்குனர்." என ஒரு பத்திரிகையின் செய்தி. குப்பம் என்றல் நீங்கள் பொருள் கொள்வது என்ன?. மீனவர்கள் கடலோரம் சிறு குடிசைகள் அமைத்து (நாகரிகமற்று : அப்படித்தானே திரைப்படங்களில் சித்தரிக்கபடுகிறார்கள்) வாழ்பவர்கள். இந்த கிராமத்தில் 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

இறந்த பின் உடலை புதைக்க தீவை வாங்கினார் ஆசிரியர்

teacher_buys_island_to_burried_with_wifeஇறந்த பின் தனது உடலையும், மனைவியின் உடலையும் புதைக்க இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் ஆசிரியர்.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது. இங்கு தண்ணீர், சாலைகள், மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால், யாரும் வாங்கவில்லை. இந்நிலையில், செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி, குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

மனித கழிவு கேஸ் : நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் : அசத்துகிறார் ஓய்வு பெற்ற பொறியாளர்

மனித கழிவில் இருந்து கேஸ் உற்பத்தி செய்து அதை பயன்படுத்தி சமையல் செய்து அசத்துகிறது ஓய்வு பெற்ற பொறியாளர் குடும்பம். நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் என்பது இதன் சிறப்பு. றார் 

coimbatore_Pollachi_thirupurகோவை கே.வடமதுரை திரு.வி.க நகரை சேர்ந்தவர் செல்வன் (62). ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவர் எரிசக்தி நிறுவனம், ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இவர் மனைவி கிரிஜேஸ்வரி. செல்வன் பணி ஓய்வு பெற்றபின் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகி, மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உதவி கேட்டார். கேலி கிண்டலுக்கு பிறகு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர்.

Saturday 21 April 2012

ஆபாச நடனம் : ஐகோர்ட் உத்தரவு : பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3-ல் சென்னையில் துவங்கியது. அன்று இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனம் ஆடினர். நடனநிகழ்ச்சிகளின் போது பல போலீஸ் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.
இதை டிவி, பத்திரிகைகளில் பார்த்து பொதுமக்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனத்தை போலீசார் தடுக்காதது சட்டவிரோதம். இதற்காக இந்திய நடிகர்கள், பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இத்தாலி அரசு சமரசம் : 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு

italy_ship_released
இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு முன் வந்துள்ளது.

கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குமரி, கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், நஷ்டஈடு கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

Friday 20 April 2012

குமரியில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் : நீர் உணவுகளை சாப்பிட வேண்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குமரியில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
குமரிமாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மழை பெய் துள்ள போதிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கியுள்ளது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்குகிறது.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு 0.25 சதவீதமாக குறைந்தது

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவின் முதல் சங்கமாக ,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2001ல் எச்ஐவியின் தாக்கம் 1.13 சதவீதமாக அதிகரித்திருந்தது.

இந்தியாவில் இனி யானைகளுக்கும் RC புத்தகம் : கேரள அறிமுகம்

வாகனங்களுக்கு இருப்பது போல் யானைகளுக்கும் ஆர்சி புத்தகம் வழங்கும் புதுமை திட்டத்தை கேரள அரசு இன்று முதல் தொடங்குகிறது. 
வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நடிகர் ஜெயராம் முதல் இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ் குமார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் தங்கள் வீடுகளில் யானைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். இது தவிர கேரளாவில் சிறிய கோயிலாக இருந்தாலும் கூட திருவிழா நடக்கும்போது அந்த கோயிலில் நெற்றிப்பட்டம் சூடிய யானையின் வீதி உலா கண்டிப்பாக இருக்கும்.

பொதுமக்கள் பூட்டு : அரசு அதிகாரிகள் திறந்தனர் : கிறிஸ்தவ தேவாலயத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப தேவலாயம் உள்ளது. இங்கு ஊர் நிர்வாகத்திற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் மகளுக்கு நேற்று (19.4.2012) திருமணம் நிச்சயமானது. திருமணத்தை கார்மல்நகர் தேவாலயத்தில் நடத்த அவர் ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தேவாலயத்தில் திருமணம் நடத்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு

ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3ல் சென்னையில் துவங்கியது. துவக்க விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாச நடனம் ஆடினர். அதனை போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விழா நிகழ்ச்சிகள் டிவியில்பார்த்த பெண்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Thursday 19 April 2012

மீன் நோய் : இளம்பெண் அவதி : சில வகை கிழங்குகள் உணவு

இங்கிலாந்தின் யார்க் பகுதியை சேர்ந்தவர் கிளாரி ரோடஸ் (34). திருமணமாகி, 4 குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஒரு பாதிப்பு. உடலில் இருந்து திடீர் திடீரென அழுகிய மீன் நாற்றம் வீசும். சுற்றி இருப்பவர்கள் அலறி ஓடுவார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இதுபற்றி கிளாரி கூறியதாவது:
20 வயது முதல் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். ஆரம்பத்தில் குப்பென்று நாற்றம் வீசியது. வியர்வை, சிறுநீர் மட்டுமின்றி மூச்சு காற்றுகூட அழுகிய மீன் நாற்றம் அடிக்கும். எனக்கே பொறுக்க முடியவில்லை. வாய், பல்லில் இருந்து வருவதாக நினைத்தேன். பல் டாக்டரிடம் காட்டினேன். ஒரு பிராப்ளமும் இல்லை என்றார். ஆனாலும், வாயில் இருந்துதான் நாற்றம் வருவதாக உறுதியாக நம்பினேன். நாற்றம் தாங்காமல் ஒரு நாளுக்கு 20 முறை பல் துலக்கினேன்.

இளம்பெண்கள் நிர்வாண படங்கள் இன்டர்நெட்டில் வெளியிடு : ஏமாற நீங்கள் தயாரா??? ஏமாற்ற நிறைய பேர்!!!

சென்னை இளம்பெண் மற்றும் சேல்ஸ் கேர்ள் ஆகியோரின் நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மிரட்டிய 2 காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்.
online_scandals_bewareஐதராபாத் ராம் நகரை சேர்ந்தவர் விஷால் மடிபல்லி (24). அமெரிக்காவில் எம்.எஸ் படித்து வந்தார். அப்போது இன்டர்நெட் மூலம் பலருடன் தொடர்பு கொண்டார். இதில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி நெட்டில் சாட்டிங் செய்தனர். விஷால் மீது முழு நம்பிக்கை வந்தவுடன் தனது ஆன்லைன் பாஸ்வேர்டை அவருக்கு தந்தார். இதை வைத்து அப்பெண்ணை பற்றிய எல்லா தகவல்களையும் விஷால் சேகரித்தார். இதற்கிடையில், ‘ஸ்கைப்’ வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது விஷால் ஆசை வார்த்தைகள் கூறினார்.

Wednesday 18 April 2012

காதலா!!! கள்ளகாதலா???.

prabhudeva_nayanthara_love

திருமணமான பிரபுதேவா
நயன்தாராவுடன் "காதல் "

திருமணமான அல்போன்சா
வினோத்துடன் "காதல் "

விகடனும் ..குமுதமும் ..தந்தியும்
இன்ன பிறவும் எழுதி மாய்ந்தன ....

குமரி வன பகுதியில் முறைகேடுகள் : ஆய்வுக்குழு வருகை

குமரி வன பகுதியில் வயர்லெஸ் கருவிகள் செயல் இழந்துள்ளன. இதனால் பல தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே இது குறித்து சிறப்பு குழு நியமித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாலும், விளை நிலங்களாக மாறுவதாலும் இம் மாவட்டத்தின் தனித்தன்மை மாறி வருகிறது. இங்குள்ள காடுகளில் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. எனவே காடு களையும், அதில் உள்ள விலங்குகளையும் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். வன பாதுகாப்பு தொடர்பாகவும், தகவல்களை எளிதில் பரிமாறி கொள்ளவும், இங்குள்ள வன காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

Cut Down Excise or We are going to hike Petrol Price Rs.9.60 per litre

State-run oil companies have served an ultimatum to the government that they will raise petrol prices by Rs 9.6 a litre if excise duty is not cut or they are not provided compensation for Rs 49-crore per day loss on fuel sale.

"We have been very patient, not raising prices since December despite our cost of production spiralling. But there is a limit to which we can borrow money and produce fuel for the country," Indian Oil Corp Chairman R S Butola said here.

Tuesday 17 April 2012

மகேந்திரசிங் டோனிக்கு எம்பி பதவி

SEVAI Trust: MS Dhoni to Rajya Sabha : It's all about???
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.

ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 சுயேச்சைகள் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.

MS Dhoni to Rajya Sabha : It's all about???

Unimaginable it may sound to many, but untrue it is not.
Indian cricket captain Mahendra Singh Dhoni’s name is being considered for a Rajya Sabha nomination from Jharkhand by the state’s Opposition Jharkhand Vikas Morcha (JVM) led by former CM Babulal Marandi.
The JVM on Monday proposed Dhoni’s name for one of the two vacant seats from Jharkhand for which fresh polls are scheduled to be held on May 3 after the polls held on March 30 were cancelled amid widespread vote-buying allegations following seizure of about Rs 2.15 crore in cash from a car in state capital Ranchi.

IPL : Confidence of a 23 year old in Cheating : Home Minister's Son???


IPL_betel_leaf_seller’s_confidence_level_bangloreA 23-year-old betel leaf seller’s 'confidence level' in claiming to be the son of home minister R. Ashok allowed him to sit along side Royal Challengers Bangalore team owner Sidhartha Mallya and watch two back to back IPL matches at the Chinnaswamy Stadium in Bengaluru.

But he ran out of luck after an alert cop nabbed him on Sunday night.

குமரி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ரயில்வே திட்டம்

பைபாஸ் வழியாக அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
ananthapuri-gurvayur-express-trains-pass-through-bypass-nagercoil-town
அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் & மதுரை பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மக்களுக்கு பெரிதும் பயன்பாட்டில் இல்லாத நாகர்கோவில் டவுன் ரயில்நிலையம் வழியே மட்டும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

குளச்சல் மீனவர் மாயம்

குளச்சல் துறைமுகப்பகுதியைச் சேர்ந்தவர் கிராசையன் (80). மீன்பிடித்தொழிலாளி. கடந்த ஏப்.11ம் தேதி இந்தோனேஷியா சுமத்தராதீவில் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தை தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக் கை விடப்பட்டது.இதையடுத்து குளச் சல் கடற்கரை பகுதி மக்கள் அங்கிருந்து வெளி யேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற னர். பீதி விலகியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவன் படுகொலை


சந்தியா-கனகராஜ்-மோகன்-மணிகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நெல்லை துப்புரவு தொழிலாளி கொடைக்கானல் மலையிலிருந்து உருட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி அவரது கள்ளக்காதலன் உட்பட 4 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday 16 April 2012

மனைவி, பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன்.

இந்த புகைபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? தெரியவில்லையா, இவர் வேறு யாரும் அல்ல. மலையாள சினிமா துரையின் முன்னணி நடிகர் திலிப். ஆம் அவரே தான். "மாயமோகினி" என்னும் மலையாள படத்திற்காக அவர் நடித்த வேஷம் தான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்.
திலீப், லட்சுமி ராய், பிஜூ மேனன் நடித்துள்ள மலையாள படம், "மாயமோகினி". ஜோஸ் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடைவேளை வரை பெண்ணாக நடித்துள்ளார் திலீப். இந்தப் படம் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி திலீப் கூறியதாவது:

ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு

விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.

அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை

puducherry-minister-kalyana-sundaram-10th-exam-fraudபுதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் துவங்கியது

tamil-nadu-fishing-halt-for-1.5monthsதமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 13 கடலோர மாவட்டங்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை, விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நேற்று துவங்கியது. 

கருங்கல் அருகே வாலிபரை தாக்கிய போலீசார்

youth-attacked-by-police-near-karungalகருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கால்களில் கருங்கல் : குளச்சல் கடலில் மிதந்த சடலம்

35-years-old-man-found-dead-floating-in-colachel-seaகுளச்சல் வெட்டுமடை கடலில் கால்களில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரி யாத சடலம் மிதந்ததை தொடர்ந்து குளச்சல் பகுதியில் மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதியில் நேற்று முன் தினம் சடலம் ஒன்று மிதந்தது.

Wednesday 11 April 2012

8.7 magnitude earthquake strikes off Indonesia : Tsunami Warning Given


An 8.7 magnitude earthquake struck off the coast of Indonesia on Wednesday, sending residents around the region dashing out of their homes and offices in fear.

The Pacific Tsunami Warning Center said a tsunami watch was in effect for the entire Indian Ocean and individual countries, including Thailand, Indonesia, Sri Lanka and India, issued tsunami warnings.

சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம்


சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.)

Tuesday 10 April 2012

கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.

உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர்.

At the age of 10 Colombian Girl becomes a Mother

A 10-year-old girl from Colombia recently gave birth to a healthy baby girl, Univision’s Primer Impacto reported.

The girl, whose name is not being released due to privacy reasons, is from Manaure, a town in the Colombian Department of La Guajira, which is comprised of various indigenous tribes. The girl is a part of the Wayuu tribe in Northern Columbia.

தங்க முட்டை இடும் வாத்து - 2012

golden-goose-story-2012
ராமுவும், மாறனும் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, இருவரும் விவசாயிகள்.ஒருநாள் மாலை வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் இரண்டு வாத்து குஞ்சுகள் அனாதையாக நின்று எங்களை காப்பற்றுங்கள் என்று கதறின. அதை கேட்ட இருவரும் ஒருகணம் திகைத்து பின் அவற்றை காப்பாற்ற முடிவு செய்தனர். வாத்து குஞ்சுகளில் ஓன்று ஆண், மற்றொன்று பெண். ராமுவும் மாறனும் ஆளுகொன்றாய் பங்கு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். வாத்துக்கள் மகிழ்ச்சியாய் இருவருக்கும் நன்றி சொல்லின 

Monday 9 April 2012

மைனர் குஞ்சு தப்பி ஓட்டம் : மனைவியும் கள்ளக்காதலியும் குடுமிபிடி சண்டை

கள்ளக்காதலியுடன் 4 மாதத்துக்கு முன் ஓடியவரை, மனைவி தேடி கண்டுபிடித்தார். யாருடன் குடும்பம் நடத்துவது என்பதில் மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் மோதல் ஏற்பட்டதால் பிரச்னை காவல்துறைக்கு சென்றுள்ளது. 
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஜெயக் குமார். தனியார் பள்ளி ஊழியர். இவரது மனைவி ஆல்பினா. இதே பகுதியை சேர்ந்தவர் செல்சியா மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் இருந்தார். ஜெஸ்டின் ஜெயக்குமாருக்கும், செல்சியா மேரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ஆல்பினா, 2 பேரையும் கண்டித்தார்.