Tuesday 31 January 2012

"நல்லவர்களை கெடுக்கும் கோபம்" : படித்ததில் பிடித்தது


ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்கள் மீதான மதிப்பு, மரியாதையை முடிவு செய்கிறது. ஒரு சிலர் இருக்கிறார்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பேசுவார்கள். எதிரில் இருக்கும் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படும்.

விந்தணு எண்ணிக்கை குறைக்க அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை

குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இயங்கிய154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கிய, 154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதியின் குடும்பத்தை காக்க சட்டீஸ்கர் அரசு புதுமை திட்டம்

கைதியின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தை பாதுகாக்க சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

"ஸ்பாட் பைன்" : 15 லட்சத்தை தாண்டியது : உஷார்!!!

ஒரே நாளில் 10,000 வழக்கு
வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ 15 லட்சத்துக்கு மேல் வசூலானது.

இந்தியா ஒளிர்கிறது : பார்ட்டிக்கு போக வசதியாக நள்ளிரவு குழந்தை காப்பகம்

ஒரு இரவு பராமரிக்க ரூ 750
வாரஇறுதி நாட்களில் கைக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

Monday 30 January 2012

பணகுடி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து செல்போனில் பரப்பிவிட்ட டிரைவர் : உஷார்!!!

பல பெண்களை ஏமாற்றினாரா?
இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வேன் டிரைவர் அதை செல்போனில் ஊரெல்லாம் பரப்பி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரை ‘வேறொரு’ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம்

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம் என மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த விழாவில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

காதல்??? இது மோகம்!!! : வாழ்க்கை வாழ்வதற்கே : 2 திருமணங்கள் முடித்தவருடன் காதல்

காதல் : கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து பலியானது ஏன்?
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நேற்று முன் தினம் காலையில் மூதாட்டி, இளம்பெண் ஆகியோர் அடுத்தடுத்து ரயில்களில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் தாய், மகளாக இருக்குமா? என்ற சந்தேகமும் வந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோக்சனா, பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

வேலை நிறுத்தம் : டாக்டர்கள் கையை வெட்டுவேன்

வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடினால், டாக்டர்களின் கையை வெட்டுவேன்” என்று பீகார் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Criminals = Politicians = Criminals : Is it TRUE?

As many as 109 candidates contesting the first phase of Uttar Pradesh Assembly elections have criminal cases pending against them, according to a monitoring group.

எச்ஐவி பாதித்தவர்கள் பட்டியல்

விழிப்புணர்வால் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்தது
வேலூரில் கடந்த ஆண்டு 1487 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் கட்டணம் 12% வரை உயர்த்தப்படலாம்


ரயில்களில் பயணிகள் கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 12% வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.

Friday 27 January 2012

குடியரசு தின சோகம் : ‘உயிரை பறித்த சாதனை முயற்சி’

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தடுமாறி விழுந்ததில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஊட்டியில் உற்சாகமாய் தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் சோகத்துடன் முடிவடைந்தது.

பயணிகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு 1.5 லட்சம் வழங்கிய பேராசிரியர்

பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார் அரசு பஸ் டிரைவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் விபத்தில் காயமடைந்த பேராசிரியர் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் வழங்கினார்.

இன்ஸ்பெக்டர் லீலை : தக்கலையில் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனியாக இரவு ரோந்து சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் அவர் தனது லிமிட்டை தாண்டி தக்கலை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த திடீர் தடை

பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்த ராணுவத்தினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Wednesday 25 January 2012

திருவட்டார் : 80 வயது மூதாட்டியை விரட்டியடித்த போலீசார்

திருவட்டார் காவல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் மருமகள் கொடுமை படுத்துவதாக தனது மற்றொரு மகனுடன் புகார் கொடுக்க வந் தார். அப்போது அங்கு இருந்த ஏட்டு ஒருவர் இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறி கடின வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பினார். அழுது கொண்டே வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நடுக்கடலில் மூழ்கிய 4 இலங்கை மீனவர்களை உயிருடன் மீட்ட வாணியக்குடி மீனவர்கள்

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு படகு கடலில் மூழ்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த ரஞ்சித் உள்பட 9 பேரும் விரைந்து சென்று அந்த படகில் இருந்த 4 பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர். அவர்களை கரைக்கு அழைத்து வருகிறார்கள்.

ஆசாரிபள்ளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : கலெக்டர் நேரடி நடவடிக்கை

அதிகாரிகளை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏ
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்ரமிப்புகளை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ராபர்ட்புரூஸ் தலைமையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் லூயிஸ், அருள்செழியன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு : மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது
"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது" என்று கேரள அமைச்சர் கே.பாபு கூறினார்.

Tuesday 24 January 2012

நாணயம் தயாரிக்கும் மும்பை வியாபாரிகள்

சில்லரை தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த மும்பை வியாபாரிகள் பலர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்ய நாணயங்களை தயாரித்து கொள்கின்றனர்.

புத்தகப்பை, கணித உபகரண பெட்டி வழங்க அரசு உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள், மேப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு 2013 மார்ச்க்குள் அடையாள அட்டை

அன்னிய ஊடுருவலை தடுப்பதற்காக 12 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Saturday 21 January 2012

கார்டுகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை இயங்கும்


குடும்ப அட்டையை புதுப்பிக்க வசதியாக, நான்கு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடம் மாறுகிறது

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் பிரசிடென்ட் சிவதாணு சாலையில் உள்ள ஒரு வாட கை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய பதிவு, புதுப்பிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, பயிற்சி என பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான இருப்பிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இந்த அலுவலகத்தில் இல்லை. இந்த அலுவலகத் தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

Team Anna is a ‘Corporate Sponsored Media Campaign’ : Arundhati Roy


Noting that the anti-corruption agitation by Team Anna is a ‘corporate-sponsored media campaign’, writer Arundhati Roy on Friday said that the law (Lokpal) they are advocating is ‘un-Gandhian’.

அணுமின்நிலையத்தை மூடக்கோரி பா ஜ உண்ணாவிரதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ஜ, இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட் டம் நடந்தது.

"SEX" Websites : Nothing much could be Done : Ministry of Comm & IT

With the Centre already slugging it out in court over regulation of content on Web portals, the Union health ministry appears to have hit a roadblock in its bid to block sex-determination guidance available on numerous websites.

9 மாநில கடலோர பகுதி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் இன்று துவக்கம்
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகரிப்பு

இந்திய பெண்களில் 66 சதவீதம் பேர், கருக்கலைப்பு செய்வதில் பாதுகாப்பற்ற முறைகளை பின்பற்றி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Friday 20 January 2012

தமிழக அரசின் அமைதி ஆச்சரியத்தை தருகிறது : ரஷ்ய நிபுணர்

கூடங்குளம் விவகாரம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில் ‘கூடங்குளம் அணுமின் நிலையம் & ஒரு யதார்த்த பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. மாநிலக்குழு தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஆதீனம் நூலை வெளியிட, கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய நிபுணர் குழுத்தலைவர் டட்கின் வெவ்ஜின் பெற்றுக்கொண்டார்.

பெற்றோரை கைவிட்டால் 3 மாதம் சிறைதண்டனை

குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன்படி பெற்றோர்களை புறக்கணித்து செல்வது குற்றமாகும். ஒவ்வொரு உட்கோட்டங்கள் அளவில் கோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனு 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும்.

ஏப்ரல் முதல் பி.எப் ரிட்டன்ஸ் இ பைலிங் முறை

பி.எப் ரிட்டன்ஸ்களை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதை ஏப்ரல் முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு?

கோவையில் வினோத புகார்.. போலீசார் அதிர்ச்சி
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.

புயலால் பாதித்தோருக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளம் தர முடிவு


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல் மஜீத், மாநில தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் இரா.தாஸ், பொருளாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Flyer to get Rs 1 lakh from Kingfisher for cancelled flight

The Mumbai Suburban District Consumer Disputes Redressal Forum recently ordered Kingfisher Airlines to pay Rs 1 lakh as compensation to a chartered accountant whose family had to go through a trying time after their Mumbai-bound flight from Kolkata was cancelled a night before departure.

Modi starts one-day fast at Godhra - 'Sadbhavna Mission'

Gujarat Chief Minister Narendra Modi began a day-long fast here on Friday as part of his 'Sadbhavna Mission', which is aimed at building bridges between the members of all communities.

வேகத்தடை மூலம் மின்சாரம் : கொடுப்பைக்குழி மாணவன்


குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் +1 வகுப்பு படித்து வருபவர் விக்னேஷ் (16). இவர் தக்கலையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற நூதன இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்வு கட்டண இறுதி தேதி அறிவிப்பு

குழப்பத்தில் பல்மருத்துவ மாணவர்கள்
பல்மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முறையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பெண், இன்டர்னல் தேர்வுக்கு 100 மதிப்பெண் என்றும் தனியாக செய்முறைக்கு 100 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்தது. இந்த தேர்வு முறையால் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

ரூ 250 கோடி செலவில் தாம்பரத்தில் 3வது ரயில் முனையம்

எழும்பூர் ரயில் முனையம் மாற்றம் இல்லை
வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களை நிறுத்த சென்னையில் 3-வது ரயில் முனையம் தாம்பரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் தெரிவித்தார்.

வாகன விபத்துகளை தடுக்க மதுரை இன்ஜினியரிங் மாணவர் நவீன கேமரா கண்டுபிடிப்பு

வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமராவை மதுரையை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் கண்டு பிடித்துள்ளார்.

5 மாநில தேர்தலில் அன்னா குழு பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு செய்துள்ளது. ஹரித்துவாரில் நாளை பிரசாரம் தொடங்குகிறது.

இப்படியும் வங்கி : பள்ளி ஆசிரியர் சேமிப்பு கணக்கில் 49,000,00,00,000 ரூபாய்

உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் திடீரென பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? சூப்பர் அதிர்ச்சி அடைந்து அப்படியே மயக்கம் போட்டிருப்பீர்கள்தானே...

Thursday 19 January 2012

சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.

குமரியில் குளங்கள் தூர்வாருதல் குழு

குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வாருதல் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு டி.ஆர்.ஓ. தலைமையில் குளங்கள் தூர்வாருதல் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. இடம் பெற்றுள்ளார்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : தமிழகம் & ராஜஸ்தான் பலப்பரீட்சை

நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழக அணி மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்

வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.

ரயில்களில் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிக்கெட் முறைகேடுகளை தடுக்க, ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற புதிய சட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் நேற்று கூறியதாவது: