Tuesday 31 January 2012
Monday 30 January 2012
காதல்??? இது மோகம்!!! : வாழ்க்கை வாழ்வதற்கே : 2 திருமணங்கள் முடித்தவருடன் காதல்
காதல் : கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து பலியானது ஏன்?
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நேற்று முன் தினம் காலையில் மூதாட்டி, இளம்பெண் ஆகியோர் அடுத்தடுத்து ரயில்களில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் தாய், மகளாக இருக்குமா? என்ற சந்தேகமும் வந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோக்சனா, பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
Friday 27 January 2012
குடியரசு தின சோகம் : ‘உயிரை பறித்த சாதனை முயற்சி’
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தடுமாறி விழுந்ததில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவத்தால் ஊட்டியில் உற்சாகமாய் தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் சோகத்துடன் முடிவடைந்தது.
Wednesday 25 January 2012
திருவட்டார் : 80 வயது மூதாட்டியை விரட்டியடித்த போலீசார்
திருவட்டார் காவல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் மருமகள் கொடுமை படுத்துவதாக தனது மற்றொரு மகனுடன் புகார் கொடுக்க வந் தார். அப்போது அங்கு இருந்த ஏட்டு ஒருவர் இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறி கடின வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பினார். அழுது கொண்டே வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
நடுக்கடலில் மூழ்கிய 4 இலங்கை மீனவர்களை உயிருடன் மீட்ட வாணியக்குடி மீனவர்கள்
குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு படகு கடலில் மூழ்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த ரஞ்சித் உள்பட 9 பேரும் விரைந்து சென்று அந்த படகில் இருந்த 4 பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர். அவர்களை கரைக்கு அழைத்து வருகிறார்கள்.
ஆசாரிபள்ளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : கலெக்டர் நேரடி நடவடிக்கை
அதிகாரிகளை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏ
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்ரமிப்புகளை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ராபர்ட்புரூஸ் தலைமையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் லூயிஸ், அருள்செழியன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Tuesday 24 January 2012
Saturday 21 January 2012
குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடம் மாறுகிறது
குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் பிரசிடென்ட் சிவதாணு சாலையில் உள்ள ஒரு வாட கை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய பதிவு, புதுப்பிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, பயிற்சி என பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான இருப்பிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இந்த அலுவலகத்தில் இல்லை. இந்த அலுவலகத் தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
Friday 20 January 2012
தமிழக அரசின் அமைதி ஆச்சரியத்தை தருகிறது : ரஷ்ய நிபுணர்
கூடங்குளம் விவகாரம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் சார்பில் ‘கூடங்குளம் அணுமின் நிலையம் & ஒரு யதார்த்த பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. மாநிலக்குழு தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஆதீனம் நூலை வெளியிட, கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய நிபுணர் குழுத்தலைவர் டட்கின் வெவ்ஜின் பெற்றுக்கொண்டார்.
பெற்றோரை கைவிட்டால் 3 மாதம் சிறைதண்டனை
குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன்படி பெற்றோர்களை புறக்கணித்து செல்வது குற்றமாகும். ஒவ்வொரு உட்கோட்டங்கள் அளவில் கோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனு 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும்.
கோவை : நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு?
கோவையில் வினோத புகார்.. போலீசார் அதிர்ச்சி
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.
வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்வு கட்டண இறுதி தேதி அறிவிப்பு
குழப்பத்தில் பல்மருத்துவ மாணவர்கள்
பல்மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முறையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்தது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், எழுத்து தேர்வுக்கு 100 மதிப்பெண், வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பெண், இன்டர்னல் தேர்வுக்கு 100 மதிப்பெண் என்றும் தனியாக செய்முறைக்கு 100 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்தது. இந்த தேர்வு முறையால் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
Thursday 19 January 2012
சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.
தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்
வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)